Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கவனிக்கவும்: காசோலைகளில் மாற்றங்கள்!

Posted on June 10, 2010July 2, 2021 by admin

இதுவரையில் காசோலைகளில் மாற்றம் செய்தால் அந்த இடத்தில் உங்களுடைய கையொப்பம் இட்டால் வங்கிகள் ஏற்றுக் கொள்ளும். இந்த விதி முறையில் இந்திய ரிசர்வ் வங்கி மாற்றம் கொண்டு வந்துள்ளது.

வரும் ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து காசோலைகளில் நீங்கள் தேதியில் மட்டுமே மாற்றங்கள் செய்ய இயலும். வேறு இடங்களில் நீங்க மாற்றங்கள் செய்தால் அந்த காசோலை செல்லாது. அபராதமும் விதிக்கப் படலாம். எனவே காசோலை நிரப்பும் பொழுது கவனமாக இருங்கள்.

தங்களது சம்பளத்தை அடுத்தவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்!

தங்களது வருமானத்தை அடுத்தவர்களின் வருமானத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


பாரீஸ் பொருளாதாரப் பள்ளியின் சார்பில் 24 ஐரோப்பிய நாடுகளில் 19 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தங்களது சம்பளத்தை நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சம்பளத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களே அதிகம் உள்ளனர். ஆண், பெண் என்ற பேதமின்றி இருபாலருமே இது போன்று ஒப்பிட்டுப் பார்ப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய பேராசிரியர் ஆன்ட்ரூ கிளார்க் என்பவர் கூறுகையில், “இது போல தங்களது வருமானத்தை மற்றவர்களின் வருமானத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதால் மகிழ்ச்சி குறைந்து விகுகிறது. சமச்சீர் அற்று இருப்பதாக ஒரு உணர்வு ஏற்பட்டு விடும். என்னைப் பொறுத்த வரை ஏழை மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளுக்காக மட்டும் தான் சம்பாதிக்க நினைக்கின்றனர். ஆனால் பணக்காரர்கள் தான் திருப்தி அடையாமல், அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதாக நான் கருதுகிறேன்” என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத் துறை பேராசிரியரும் நிறுவன உளவியல் நிபுணருமான காரி கூப்பர், “ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் ஆபத்தானது. அளவுக்கு அதிகமாக இவ்வாறு செய்வதால் எதிலுமே திருப்தி இல்லாமல் போய்விடும். வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைந்துவிடும்” என்றார்.

பணக்கார நாடுகளை விட ஏழை நாடுகளில் உள்ள மக்களே இது போல் ஒப்பிட்டுப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

33 − 30 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb