Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மீண்டும் இன்னொரு பொருளாதார வீழ்ச்சி: இந்தியா தாங்குமா?

Posted on May 29, 2010July 2, 2021 by admin

[எண்ணை விலை சர்வதேச அளவில் விற்கப்படும் அதே விலைக்கு உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கும்போது இந்திய அரசின் கஜானா நிரம்பி வழியாதா என்ன?!! பிறகு எப்படி வரும் பொருளாதார வீழ்ச்சி!!! வரப்போவதெல்லாம் மக்கள் வீழ்ச்சிதான்.

அடிப்படை வசதிகூட மக்களுக்கு செய்துகொடுக்க முடியாத மன்மோகன் அரசுக்கு இதைப்பற்றியெல்லாம் கவலையா என்ன?!! அவர்களுக்கு தேவையானதெல்லாம் பணமுதலைகள் இன்னும் கொழிக்க வேண்டும் என்பதுதானே! ”வாழ்க மன்மோகனின் பொருளாதார மேதமை” என்று சொல்வதைவிட ”வீழ்க மன்மோகனின் பொருளாதார பேதமை” என்பதுதான் சரி என்கிறான் சராசரி இந்தியன்.]

டெல்லி: மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி வரப்போவது உறுதி என்றும், அதனை எதிர்கொள்ளும் அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் உறுதியாக இருப்பதாகவும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ஜோஸப் ஸ்டிக்ளிட்ஸ் கூறியுள்ளார்.

2001ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் ஸ்டிக்ளிட்ஸ். சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

“உலக அளவில் பல்வேறு பொருளாதார பிரச்சனைகள் தலையெடுக்கத் துவங்கியுள்ளன. நிச்சயம் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் பெரும் பிரச்சனைகளை சர்வதேச நாடுகள் எதிர்கொள்ள வேண்டி வரும்.

குறிப்பாக அமெரிக்காவில் 2010ம் ஆண்டின் இறுதியில் மீண்டும் ஒரு தேக்க நிலை உருவெடுக்கும் சூழல் உள்ளது. இதை அந்த நாடு எந்த அளவு தாக்குப் பிடிக்கப் போகிறது என்பதில் நிறையபேருக்கு சந்தேகம் உள்ளது.

ஆனால், சீனா அப்படியல்ல. அந்த நாடு எந்தவித நெருக்கடியையும் சமாளிக்கும் திறனுடைய பொருளாதார கட்டமைப்பைக் கொண்டுள்ளது. சீனா ஒரு பெரிய குமிழ் மீது உட்கார்ந்திருக்கிறது. அது எந்த நேரமும் வெடித்துவிடும் என்றுதான் மேற்கத்திய பொருளாதாரவாதிகள் சிலர் கூறிவருகிறார்கள். அது முழுக்க தவறானது.

சீனா ஒரு குமிழ் மீது அமர்ந்திருக்கவில்லை. சரியான நிலையில் வசதியாக அமர்ந்துள்ளது அந்த நாடு. எத்தகைய நெருக்கடியையும் அவர்களால் எதிர்கொள்ள முடியும்.

அந் நாட்டு ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தை நன்கு அறிந்தவர்களாக உள்ளனர். அமெரிக்காவின் தவறுகளைப் பார்த்து நிறைய கற்றுக் கொண்டுள்ளனர். குறிப்பாக நிதி அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதில் வாஷிங்டனை விட மேம்பட்ட நிலையில் உள்ளனர். வங்கி மற்றும் நிதித்துறை பெய்ஜிங்கின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த இரண்டாவது தேக்கம் ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. காரணம், இந்தியாவின் ரிசர்வ் வங்கி, நிதிக் கொள்கைகளை வகுப்பதிலும் செயல்படுத்துவதிலும் சிறப்பாக உள்ளது.

பொருளாதார தேக்கத்தின் முதல் கட்டத்தை வேறு எந்த நாட்டையும் விட சிறப்பாக சமாளித்துள்ள இந்தியாவுக்கு இந்த இரண்டாவது தேக்கம் பெரிய சவாலாக இருக்காது என்று கூறியுள்ளார் ஜோஸப் ஸ்டிக்ளிட்ஸ்.

source:  thatstamil

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb