Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இறைநேசர்களிடம் உதவி கேட்கலாமா? திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூமின் தீர்ப்பு!

Posted on April 21, 2010July 2, 2021 by admin

திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரியின் ஃபத்வா:

”இறைவா, உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம்” என்பதன் மூலம் வணக்கமும் உதவி தேடுவதும் இறைனுக்கே சொந்தமானது என்று தெரிகிறதே. இறைவனல்லாத மற்றவர்களிடம் உதவியும் பாதுகாப்பும் கேட்பது எவ்வாறு ஆகுமாகும்?

இதனால்தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹளரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வஸிய்யத் செய்தார்கள்; ”ஏதாவது கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவி தேடு”. (நூல்: மிஷ்காத் பக்கம் 53)

மேலும் இறைவன் தன் திருமறையில் கூறியுள்ளான்; ”நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்வித நன்மையை செய்வதற்கும் தீமையை தடுத்துக் கொள்வதற்கும் நான் சக்தி பெற மாட்டேன்.” (அல்குர்ஆன்: அஃராப்: 188)

”நிச்சயமாக நான் உங்களுக்கு தீங்கையோ, நன்மையோ செய்ய சக்தி பெற மாட்டேன்” என்று நபியே கூறுவீராக (அல்குர்ஆன்: அல்ஜின்: 21)

ஹளரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதல் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை சுமார் 1,24,000 நபிமார்களில் அனைவரும் தனது தேவைகளை அல்லாஹ்விடத்திலேயே கேட்டார்கள். மக்களையும் அல்லாஹ்விடத்திலேயே கேட்கும்படி கூறிவந்தார்கள். ஆனால் யாரும் தன்னிடம் தேவைகளை கேட்கும்படி கூறியதாக குர்ஆன், ஹதீஸ் மற்ற எந்த நூல்களிலும் காணப்படவில்லை.

இவ்வாறே ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஃ தாபிஈன்கள், அவ்லியாக்கள், ஷ{ஹதாக்கள், ஸாலிஹீன்கள் அனைவரும் தங்களின் தேவைகளை இறைவனிடத்திலேயே கேட்டார்கள். மற்ற மக்களுக்கு இதைத்தான் போதித்துள்ளார்கள்.

ஹளரத் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது மரண சமயத்தில் தனது மகன் அப்துல் வஹ்ஹாபுக்கு வஸிய்யத் செய்தார்கள்: ”அனைத்து தேவைகளையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிடு. அவனிடமே தேவைகளைக் கேள். அவன் அல்லாத யார் மீதும் நம்பிக்கை வைக்காதே. அவன் ஒருவனையே நம்பு” (ஆதாரம்: ஃபத்ஹுர்ரப்பானி, பக்கம் 665)

மவ்லவி, லியாகத் அலீ மன்பஈ

ஜமா அத்துல் உலமா மாத இதழ் – ஏப்ரல் 2010

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

48 − = 44

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb