Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நன்மை பயக்கும் நபிமொழி – 70

Posted on April 2, 2010 by admin

MUST READ

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்:

”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு விஷயங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்க விருப்பம் கொடுக்கப்படும் போது, பாவமானதாக இல்லாதவரை அவ்விரண்டில் மிக இலகுவானதையே அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமானதாக இருந்தால், அதை விட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூரமாக ஒதுங்கி விடுவார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த விஷயத்திலும் தனக்காக எப்போதும் பழிவாங்கியதில்லை. எனினும், அல்லாஹ்வின் கண்ணியம் சேதப்படும் போது, அல்லாஹ்வுக்காக அவர்கள் பழிவாங்காமல் இருந்ததில்லை (புகாரி, முஸ்லிம்)

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

‘‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ”அழ்பாஉ” என்ற ஒட்டகை இருந்தது. அதை எந்த ஒட்டகையாலும் முந்த முடியாது அல்லது முந்த முயற்சித்தது கூட கிடையாது.

ஒரு காட்டரபி தன் பெண் ஒட்டகை மீது ஏறி வந்து, அதை முந்திவிட்டார். இது முஸ்லிம்களுக்கு துயரத்தை ஏற்படுத்தி விட்டது.

இதைக் கேள்விப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”உலகில் எந்தப் பொருள் உயர்ந்தாலும், அதை (ஒரு நேரத்தில்) தாழ்த்துவது என்ற கடமை அல்லாஹ்வின் மீது உள்ளது” என்று கூறினார்கள். (புகாரி)

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

‘‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவு சாப்பிட்டால், மூன்று தடவை தன் கை விரல்களை சூப்புவார்கள்.

உங்களின் உணவில் ஒரு சிறு பகுதி கீழே விழுந்து விட்டால்கூட, அதில் உள்ள அசுத்தத்தை நீக்கி, அதை சாப்பிடட்டும், ஷைத்தானுக்கு அதை விட்டு விட வேண்டாம்’என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

மேலும் உணவுத்தட்டு வழித்து உண்ணப்பட வேண்டும் என்றுக் கட்டளையிட்டார்கள். உங்கள் உணவில் எதில் ”பரக்கத்” உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றும் கூறினார்கள். (முஸ்லிம்)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

‘‘ஓர் ஆட்டின் காலின் கீழ் பகுதி, அல்லது தொடைப்பகுதி ஆகியவற்றை சமைத்து விருந்துக்கு என்னை அழைக்கப்பட்டாலும் நான் அதை ஏற்பேன். எனக்கு ஆட்டின் காலின் கீழ் பகுதியையோ, அல்லது தொடைப் பகுதியையோ அன்பளிப்பாக கொடுக்கப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்வேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அஸ்வத் இப்னு யஸீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் வீட்டில் எப்படி நடந்து கொள்வார்கள்? என, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்கப்பட்டது. தன் குடும்பத்தாருக்கு உதவி புரிவதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருப்பார்கள். தொழுகை நேரம் வந்து விட்டால் தொழுகைக்கு புறப்பட்டுச் செல்வார்கள் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா பதில் கூறினார்கள். (புகாரி)

அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

”நானும், என் சிறிய தந்தையின் இரண்டு மகன்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தோம். அவ்விருவரில் ஒருவர், ”இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ள பகுதியில் எங்களை (அதிகாரியாக) நியமியுங்கள்” என்று கேட்டார். இன்னொருவரும் இதே போல் கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”நிச்சயமாக நாம், அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இப்பதவியை கேட்கின்ற எவருக்கும், இதை ஆசை கொள்கின்ற எவருக்கும் இந்த அதிகாரத்தை வழங்கிட மாட்டோம்” என்று கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

”ஒரு மனிதர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ”எனக்கு உபதேசம் செய்யுங்கள்” என்று கூறினார். ”நீர் கோபப்படாதீர்!” என்று கூறினார்கள். அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். ”நீர் கோபப்படாதீர்!” என்று பலமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி)

 www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

40 − 33 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb