Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஹஜ் பயண விண்ணப்பம் – மக்கள் தொகை கணக்கெடுப்பு

Posted on April 1, 2010 by admin

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயல் அலுவலர் அலாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டிற்கான ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழக முஸ்லிம்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பயணத்திற்கான தற்காலிக பதிவு விண்ணப்பங்களை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழக ஹஜ் குழு நிர்வாக அலுவலரிடம் சென்று, ஏப்ரல் 1ம் தேதி(நாளை) முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.hajcommittee.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை நகல் எடுத்துக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், பயணி ஒருவருக்கு 200 ரூபாய் பரிசீலனை கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு நடப்பு கணக்கில்(எண்:30683623887) செலுத்தி, அதற்கான வங்கி ரசீது நகலுடன் தமிழக ஹஜ் குழுவிடம், ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சர்வதேச பாஸ்போர்ட் இருப்பின், அதன் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்திருந்தால், இருப்பிட முகவரி சான்றிதழை இணைக்க வேண்டும்.

பரிசீலனை கட்டணமாக அளிக்கும் பணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பம்

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளன. இந்த பணி ஓராண்டுகாலம் வரை நடக்கும். மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் நபராக ஜனாதிபதியும், அதற்கு அடுத்து துணை ஜனாதிபதியும் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு பொதுக்கள் நல்ல ஒத்துழைப்பை அளித்திடும்படி உள்துறை அமைச்சர் சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டில்லியில் மாதாந்திர ஆய்வு அறிக்கையை வெளியிட்டு நிருபர்களிடம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:.

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி ஏப்ரல் 1ம் தேதி (இன்று) ஆரம்பமாகவுள்ளது. இந்த பணிக்கென ஏற்கனவே ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு போதிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஓராண்டு காலத்திற்கு நடக்கும். ஒரு கோடியே 20 லட்சம் பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக மத்திய அமைச்சரவை, 3,539 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.முதன் முறையாக தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கப்படவுள்ளது. இதுவரை நடைபெற்றதிலேயே மிகப்பெரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இதற்கு பொதுமக்கள் போதிய அளவு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி: தினமணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 5

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb