Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

திருமணமான 2 நாளிலேயே விவாகரத்து மனு – சுப்ரீம் கோர்ட் கண்டனம்!

Posted on March 29, 2010 by admin

டெல்லி: கல்யாணமாகி இரண்டு நாட்களிலேயே விவாகரத்து கோரி தாக்கலான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தததுடன் இந்த மனுவைத் தாக்கல் செய்த தம்பதியையும், அவர்களுக்காக ஆஜரான வக்கீல்களையும் உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.

டெல்லியை சேர்ந்த சுமித், பூனம் ஆகியோருக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் கல்யாணமான அடுத்த 2 நாளிலேயே அவர்கள் விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட்டை அணுகி மனு தாக்கல் செய்தனர்.

ஆனால், இந்த மனுவை குடும்ப நலக் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் பூனம். அதில், அரசியல் சட்டத்தின் 32வது பிரிவை சுட்டிக் காட்டி, குடும்ப நலக் கோர்ட் அந்தப் பிரிவை மீறி செயல்பட்டதாகக் கூறியிருந்தார்.

ஆனால் இந்த மனுவைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம், பூனத்தின் கோரிக்கையை தள்ளுபடி செய்து விட்டது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், தம்பதியினர், ஆறு மாத திருமண வாழ்க்கையை முடித்திருக்க வேண்டும். அதனால், இன்னும் ஆறு மாதங்கள் கழிந்த பின்னரே தம்பதியினர் குடும்ப நலக் கோர்ட்டை அணுகலாம்.

குடும்ப நலக் கோர்ட், அடிப்படை உரிமைகளை எவ்விதம் மீறியது என்று பூனத்தின் வக்கீல்கள் சரியாகச் சுட்டிக்காட்டவில்லை. மேலும் தம்பதியினர் மற்றும் அவர்களின் வக்கீல்களின் இந்தச் செயல் கண்டனத்துக்குரியது. சிறிதும் பொறுப்புணர்வில்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகள் நீதி நிர்வாகத்தில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று கடுமையாக கண்டித்தனர் நீதிபதிகள்.

source: www.thatstamil.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

89 + = 94

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb