Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் குறித்து அமைச்சருடன் பேச்சுவார்த்தை!

Posted on March 9, 2010 by admin

சென்னை: தமிழக அரசு கொண்டு வந்துள்ள தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009 என்ற கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் குறித்து இன்று தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் அனைத்து முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் குறித்து பரவலாக தமிழகத்தில் முஸ்லிம் சமுகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கடந்த பிப்ரவரி முதல் வாரம் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லவி ஏ.இ. அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் சென்னையில் 22 முஸ்லிம் அமைப்புகள் பங்குக் கொண்ட கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புரிந்து தமிழக அரசு முஸ்லிம்களின் நலனை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அரசிடம் இக்கோரிக்கையை வலியுறுத்த வல்லுனர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்,

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் முகைதீன்,

தேசீய லீக் தலைவர் பஷீர் அஹ்மது,

ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக மவ்லவி முனைவர் அன்வர் பாதுஷா உலவி,

மவ்லவி இல்யாஸ் ரியாஜி,

ஜமாஅத்தே இஸ்லாமி சார்பில் எஸ். என். சிக்கந்தர்,

இந்தியன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முஹம்மது முனீர்,

மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் சார்பில் உமர் பாரூக் மற்றும் வழக்குறைஞர் ஜீவகிரிதரன் ஆகியோருடன் ஒருங்கிணைப்பாளர் அப்போலோ ஹனீபாவும் இடம் பெற்றனர்.

இந்த வல்லுனர் குழு ஐந்து முறை கூடி தமிழக அரசுக்கு சமுதாயத்தின் சார்பில் அளிக்கப்பட வேண்டிய கோரிக்கையை வடிவமைத்தது.

இறுதியாக மார்ச் 6 அன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் இந்த வல்லுனர் குழு சட்ட அமைச்சர் துரைமுருகனை சந்தித்தது. இச்சட்டத்தினால் முஸ்லீம்களுக்கு ஏற்படும் பாதகங்களை எடுத்துரைத்தது. தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் திருமதி எஸ். மாலதி, தமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் ஆர். சிவகுமார், துணை முதல்வரின் துணைச் செயலாளர் கே. ரகுபதி, சட்டத்துறை துணைச் செயலாளர் திருமதி ஜானகி உள்ளிட்ட அதிகாரிகளும் பங்குக் கொண்டனர்.

சுமார் ஒன்னரை மணிநேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையின் இறுதியில் தமிழக அனைத்து முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் வல்லுனர் குழு அளித்த கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். இது குறித்த முறையான அரச அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகின்றது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 5 = 14

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb