Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

போக மாட்டார்கள் புதியவர்களிடம்….?!

Posted on February 16, 2010 by admin

யாசர் அராஃபத்

அன்னை இருக்கிறாள் , தந்தை இருக்கிறார்,

மனைவி இருக்கிறாள் – நானும் இருக்கிறேன்

வெகு தொலைவில்!

அள்ளி முத்தமிடவேண்டிய என் பிஞ்சு குழந்தையை

தொட்டு தடவி பார்த்தேன்

புகைப்படத்தில்!

மழலையின் குரலை கைபேசியில் கேட்டு

கதறி அழுதது என் மனம் கண்களின் வழியாக

சத்தமே இல்லாமல்!

எதிர் திசையில் இருந்து ஒரு குரல்,

அட குழந்தையின் குரலை கேட்டு சந்தோசத்தை பாரு!

எல்லோரிடமும் பேசினேன்-எல்லோருக்கும்

என் குழந்தையை பற்றியே பேச்சு ,

சந்தோசத்தில்!

கடைசி சுற்றாக வந்தது என் மனைவியிடம்

அவள் மட்டும் கேட்டாள் ” எப்போ வருவிங்க”!!

என் குரல்வளையில் யாரோ நெரிப்பது போல!

என் குரலை என்னாலே கேட்க முடியவில்லை!

கனைத்து விட்டு பின்பு சொன்னேன்

உங்களுக்காகத்தானே ! – போய்விடலாமா

என தோன்றியது உள்ளத்தில்!

கடைசியாக ஒரு வருடம் என ஆறுதல் சொன்னது என் மனம்!!!

கடைசியாக முடிவு எடுத்தே விட்டேன் நான்,

நாட்டிற்கு செல்ல!

இனியும் தாமதிக்க முடியாது – காரணம்

கம்பெனியில் முடிந்து விட்டது என் வயது வரம்பு!

ஊருக்கு சென்றேன் நான் ,

மூட்டை முடிச்சுடன் – கூடவே

மூட்டு வழியும் முதுகு வலியும்!!!

என் இளமையெல்லாம் பாலைவனத்தில் விட்டு விட்டு

வீடு திரும்பினேன்

விழி பிதிங்கினேன் களவு கொடுத்த கணவனாய்!!!

புகைப்படத்திலே பார்த்து பார்த்து பழகிய

என் பிள்ளைகள் , இப்போதும் பார்கிறார்கள்

அப்படியே !

தூரத்தில் வைத்து…….

கண்களில் பிரகாசத்தோடு

கைகளை நீட்டி அழைத்தேன் அவர்களை,

உள்லிருந்து என் மனைவியின் குரல்

போகமாட்டார்கள் புது ஆளிடம்….???????

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

60 − = 56

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb