Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இளமைப் பருவம்

Posted on February 12, 2010 by admin

இளமைப் பருவம்

இஃதொரு

பைத்தியக்காரப் பருவம்.

 

கெட்டதை நல்லதாகவும்

நல்லதைக் கெட்டதாகவும்

கற்பனை செய்து காட்டும்.

 

வேகமிருக்கும்

விவேகமிருக்காது.

 

மூத்தோரின்

மூதுரைகளெல்லாம்

மூளையில் ஏறாது.

 

தான் எடுத்த முடிவே

சரியானதென

வாதிக்கும்.

 

கற்பனையில் பல

அற்புதங்களைக் காட்டும்.

ஆனால்-அவையோ

நிகழ்வுக்கு ஒத்துவரா.

 

யுவன் யுவதியையும்

யுவதி யுவனையும்

யூகத்தில் தேர்ந்தெடுப்பர்;

தேகத்தைக் காதலிப்பர்.

கலியுகத்தில் அது

காணாமல் போய்விடும்.

 

ஈருடல்கள் இடையே

ஈர்ப்பு ஏற்படும்.

இனக்கவர்ச்சியால்

இனம்புரியாத

காதல் ஏற்படும்!

 

உடம்பைக் காதலிக்கும்

மடமைப் பருவமிது.

 

இது

காந்தம் போன்றது.

யாராகிலும் ஒருத்தியை

ஈர்த்துக் கொள்ளவே

துடிக்கும்; விரும்பும்.

 

இருவருக்கும் இடையே

பொருத்தம் பார்க்காது.

விரும்பும் உள்ளங்கள்

நெருங்கிடத் துடிக்கும்.

நெருப்பாகப் பெற்றோர்

குறுக்கிடும்போது

வருத்தம் மிகும்.

 

உற்றார் உறவினர்

பெற்றோர் மற்றோர்

யாவரையும்-உடனே

உதறிடத் துணியும்.

 

உறவுகள் முறித்தும்

உயிரினைப் பறித்தும்

உரியவள் அவளை

அடைந்திடத் துடிக்கும்.

 

பாவையை அடைந்திட

அவள் கரம் பற்றிட

யாவையும் துறக்கத்

துணிவைக் கொடுக்கும்.

யாரையும் எதிர்த்திடத்

துணிச்சலைக் கொடுக்கும்.

 

யாவையும் துறந்து

பாவையை அடைந்து

சின்னாட்கள் அவளுடன்

சல்லாபம் கொண்டபின்

பாவை அவளோ

பாகற்காயாய்க் கசப்பாள்.

 

இருவருக்குமிடையே

அருவருப்பு அரும்பும்.

சிறுசிறு பிழையும்

பெரிதாய்த் தெரியும்.

 

பொறுத்திட முடியாமல்

வெறுத்திடத் தூண்டும்.

பிரிந்துவிடுவதே

சரியெனத் தோன்றும்.

 

முதியோர் கூற்றை

மதியாதார் வாழ்க்கை

பட்ட மரம்போல்

பட்டெனச் சாயும்.

 

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!” காரீ நூ அப்துல் ஹாதி பாகவி, ஆலங்குடி

jazaakallaahu khairan” www.hadi-baquavi.blogspot.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

84 − 74 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb