Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஈமானுக்கு வேண்டும் இடஒதுக்கீடு! (2)

Posted on January 28, 2010 by admin

MUST READ 

[ அல்லாஹ், ரசூல் என்றால் என்ன என்று கேட்டு ஊர்சுற்றும் ஒருவனை அனைவராலும் ஹஜ்ரத் என்று போற்றப்படும் இமாமாக மறுமாற்றம் செய்யும் மகத்தான பணியை மத்ரஸாவைத்தவிர வேறு எந்த நிறுவனங்களாலும், பாடசாலைகளாலும்,குருகுலங்களாலும், மடங்களாலும், ஆஸ்ரமங்களாலும், ஆலயங்களாலும் நிச்சயம் செய்ய முடியாத ஒன்று!

தமிழக அரபுக்கல்லூரிகளின் அரும் பணி அளவிட முடியாதவை. அகிலந்தோறும் ஐவேளை பள்ளி வாசல்கள் இயங்குவது அதற்கானசாட்சி, இக்கல்லூரிகளிலிருந்து வெளிவந்தவர்களால் மடடுமே ”இமாமத்” செய்ய முடியும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.]

சில இடங்களில் பயானும், துஆவும் நீளும் பொழுது அங்கு வாழ்த்துரைகள் அனைத்தும் சாப உரைகளாக மாறிக்கொண்டிருக்கும் திருமண சபையில் மட்டுமா! பராஅத், லைலத்துல் கத்ர் போன்ற விசேஷமான இரவுகளிலும் அப்படிதான். சில இமாம்கள் நீண்ட நேரம் துஆ ஓதுவதை சாதனையாக நினைப்பர்.

இனிமேல் பள்ளிக்கே வரக்கூடாது அப்படியே வந்தால் கூட்டு துஆவில் கலந்து கொள்ளகூடாது என்ற எண்ணத்தைத் தான் நீண்ட நேர பிரார்தனைகள் மக்கள் மனதில் விதைக்கறது.

அந்த நீண்ட துஆக்கள் மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்ற முகஸ்துதிக்காகவே பெரும்பாலும் ஓதப்படுகிறது. ஆது மென்மேலும் மாற்றமான விளைவைத் தான் ஏற்படுத்துகிறது.

தொழவரக்கூடிய எவரும் இந்த நீண்ட துஆக்களை விரும்புவதில்லை. மக்களின் இவ்வளவு கோபத்தையும், வெறுப்பையும் சம்பாதித்து ஒரு சுன்னத்தான (அ) ஃபர்ளான காரியத்தை நிறைவேற்ற வேண்டும்? மக்களின் விருப்பமறிந்து செயல்படுவது தான் உண்மையான மார்க்கச் சேவை நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களது வரலாற்றில் அதற்கான முன்னுதாரணங்கள் நிறையவே உண்டு.

ஹழ்ரத் ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.

முஆத் பின் ஜபல்ரளியல்லாஹு அன்ஹு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடன் தொழுது விட்டுத் தமது குழுவினரிடம் சென்று அவர்களுக்கு இமாமத் தொழுகை நடத்துவது வழக்கம் (ஒருமுறை) இஷாத் தொழுகை நடத்தும் போது அல்பகரா அத்தியா யத்தைஓதினார்கள். அப்போது ஒரு மனிதர் (தொழுகையை விட்டும்) விலகிச்சென்றார். (தொழுது முடிந்ததும); முஆத் பின் ஜபல்ரளியல்லாஹு அன்ஹுஅவரைக் கண்டித்தார்கள். இந்தச் செய்தி நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்குத் தெரிய வந்த போது(நீரென்ன) குழகுழப்பவாதியா?  என்று மும்முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹுநோக்கிக் கூறினார்கள். மேலும் நடுத்தரமான இரண்டு அத்தியாயங்களை ஓதித்தொழவைக்குமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள்.

இது முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மட்டும் தனிப்பட்ட எச்சரிக்கை அல்ல. இமாமத் செய்யும் ஒவ்வொருவருக்கும் தான்.இது விஷயத்தில் பொதுவான அறிவுரையை நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் வழங்கியுள்ளார்கள். – மற்றவர்களுக்குத் தொழுகை நடத்துபவர் சுருக்கமாகவே நடத்தட்டும் ஏனெனில் பலவீனர்கள் நோயாளிகள், முதியவர்கள் அவர்களில் உள்ளனர் தனித்து தொழும் போது அவர் விரும்பும் அளவுக்கு நீட்டிக் கொள்ளலாம்? (அறிவிப்பவர்.அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 703).

மதரஸாக்களில் முறையான கிராஅத் பயிற்சி பெறாத உலமாக்கள் பெரும் பாலானோர்கள் தான் இன்று இமாமத் செய்கின்றனர். குர்ஆன் வசனங்கள் அதிகம் கொலை செய்யப்படுவது இவர்களாலேயே என்று சொல்வது மிகையாகாது. இன்னம் கொஞ்சம் பச்சையாக சொல்லப்போனால் குர்ஆனை பார்த்து சரளமாக ஓதத் தெரியாத எத்தனையோ இமாமகள் இன்றும் தொடர்ந்து பணி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

மனசாட்சிக்கு விரோதமாக அவர்களுக்கெல்லாம் ”ஸனது” வழங்கி அலங்காரப்படுத்தி பார்த்திருக்கும் மதரஸாக்களை நினைத்தால் வேதனையாகத் தான் உள்ளது. முறையான பயிற்சி பெறாத இவர்கள் எப்படி மக்களின் மனோநிலை புரிந்து மார்க்கச் சேவை புரிவார்கள்? பள்ளி இமாம்கள் சிந்திக்க வேண்டும்.

நாம் வாழ்வது இயந்திர உலகம். மக்களில் எவரும். எதற்கும் நீண்ட நேரம் அமர்வதை விரும்புவதில்லை. புயான், துஆ, தொழுகை இவைகளில் முக்கியமாக மக்களின் மனோ நிலை அறிந்து செயல்படவேண்டும். அதே நேரத்தில் உரிய முறையில், உரியநேரத்தில் மார்க்கத் தகவல்கள் மக்களுக்குப் போய்ச் சேர்வதில் நமது கவனம் தவறிவிடக்கூடாது. பலவந்தமாக சொல்வதை விட பக்குவமாகச் சொல்வதில் தான் நமது வெற்றி இருக்கிறது. அதற்கு முறையான பயிற்சிகளை மதரஸாக்கள் கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நாம் தான் பயிற்சிக்களங்களை தேடிப்பிடித்து அமைத்துக் கொள்ள வேண்டும் இங்கிதமாய் நடப்போம்: இலக்கணங்கள் பல வகுப்போம்.

அதிசயக் கல்லூரிகள்

”அரபுக்கல்லூரிகள் தங்களது ”கம்யூனி கேஷன் கேப்” எனப்படும் மக்கள் தொடர் பின்மையை களையும் போதுதான் அவை மறுமலர்ச்சி பெறும்- (மதிப்பிற்குரிய தீபக் தாமூர் – தூத்துக்குடி -M.P.) அறுபதுக்கும் மேற்பட்ட அரபுக்கல்லூரிகள் வழமையான இருமாத விடுமுறைக்குப்பின் தமிழகந்தோறும் ஆங்காங்கு திறக்கப்படும் நேரம் இது. தூத்துக்குடி மன்பஉஸ் ஸலாஹ் அரபுக்கல்லூரியின் ஆண்டுவிழாவில் அதிஅக்கறையோடு வழஞ்கிய தீபக் தாமூர் M.P யின் அறிவுரை அனைவராலும் நோக்கத்தக்கதாகும்.தமிழக அரபுக்கல்லூரிகளின் அரும் பணி அளவிட முடியாதவை. ஆகிலந்தோறும் ஐவேளை பள்ளி வாசல்கள் இயங்குவது அதற்கானசாட்சி, இக்கல்லூரிகளிலிருந்து வெளிவந்தவர்களால் மடடுமே ”இமாமத்” செய்ய முடியும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அன்றைய மதினப்கள்ளிவாசலில் இராணுவம், மருத்துவம், அரசியல், கல்வி,விவாதம், விவசாயம் என அனைத்துவகை செயல்பாடுகளும் செவ்வனே செம்மைப்படுத்தபட்டன. எனினும் தற்கால பள்ளிவாசல்களோ தொழுகைக்கு(ம் கூட சரிவர பயன்படுத்தப்படுவதில்லை என்பது வேறுவிஷயம்) மட்டுமே பயன்படுத்தப்படுவதால் தொழுகைக்கு மட்டுமே அவர் இமாமாக இருக்கிறார். ஆதலால் தான் அரபுக்கல்லூரிகளும் தொழுகை, ஜும்ஆ பயான் மார்க்கச்சட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன போலும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் பள்ளி இமாமாக மட்டும் இருக்கவில்லை அனைத்துறைக்குமான அதிகாரியாக இருந்தார்கள். அனைத்து துறைக்குமான வாரிசாக ஆலிம்களை நன்அறிவுப்புச் செய்தார்கள் அப்படியானால் இன்றைய அரபுக்கல்லூரிகள் தம்மை பெரும் பல்கலைக்கழகமாக மாற்றிக் கொண்டிருக்க வேண்டாமா என்ன?

அதிவேகமாக இயங்கிவரும் இந்த இயந்திரமய உலகிலும் கம்ப்யூட்டர்,அன்டர் நெட்டின் தொடர்பின்றி அரபிக்கல்லூரிகள் இயங்குவதிலிருந்தே அவைகளின் ”கம்யூனிகேஷன் கேப்” பை மிக எளிதாக எவரும் புரிந்து கொள்ள முடியும்.

இ-பிஸ்னஸ். இ-கார்ட், இ-டீச்சீங் என இன்டர் நெட் வழி வியபாரங்களும், தீர்ப்புகளும், படிப்புகளும் பெருக்கிக் கொண்டிருக்கும் வேளையில் இக்கல்லூரி ஆசிரியர் மாணவர் இ.உஸ்தாதாக (இ.இமாம்) எப்படி அவரால் இயங்க,இலக்க முடியும்? மூலகாரணம் நவீனபாடத்திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்படாததே ஆகும். முன்பைவிட மனித அறிவு மிகமிக விரிவடைந்துள்ளது. ஏன்பதை நமது சுட்டிக் குழந்தைகளின் துடுக்கான பேச்சிலிருச்தே அவர்களின் புத்திசாலித்தனத்தை புரிந்து கொள்ள முடியும்.

ஒருமுறை இரண்டுவயதுக் குழந்தைக்க மாடிப்படி ஏறும் போது ”அல்லாஹ்” என்ற சொல்ல வேண்டும் என்று சொல்லிகொடுத்தேன். அது படியேறும் போது இப்படிச் சொல்லிக்கொண்டே ஏறியது ”அல்லாஹ்… அம்மாஹ்… அத்தாஹ்…” இந்நிலையில் அவர்களின் அகோர அறிவுப்பசிக்கு புதிய நூல்கள் அந்த ஆறுமணிநேர பாடத்திட்டங்களில் நிச்சம் இல்லையென்றே சொல்லலாம். 

காரணம் ”பாடத்திட்டங்களுக்கான வரைமுறை” ஏதும் இதுவரை ஜமாஅத்துல்உலமா சபையோ, மஜ்லிசுல். மதாரிஸோ, தேவ்பந்தோ, பாகியாத்துஸ் ஸாலிஹாத்தோ வரைந்து கொடுக்கவில்லை. பொதுவாக ”நிஜாமிய்யா” பாடத்திட்டம் என சொல்லிக்கொள்ளப்படுகிறதே தவிர வேறில்லை. இதுவரை எந்த அரபுக்கல்லூரியும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்படவில்லை. அதனால் ஆலிம்கள் பெறும் ”பட்டம்” அங்கீகாரமற்றதாகவே இருக்கிறது.

அரபுக்கல்லூரிகள் அரசில் பதிவு செய்யப்பட்டே ஆகவேண்டும் என்ற சட்டம் விரைவில் வரவும்கூடும் அரசையும் அரசியலையும் ஒதுக்கிவிட்டு ஒரு சமூகம் நிச்சயம் முன்னேறிவிட முடியாது. அரசுகாஜியைப்போல ஒருஇஸ்லாமிக் எஜூகேஷன் போர்டை அரசு நிச்சயம் நியமித்து அருமையானதொரு பாடத்திட்டத்தை தமிழகமாணவர்களுக்கு தர நிச்சயம் முன்வரவும் கூடும். துரம்மென்மேலும் உயரவே செய்யும். ஆப்போதும் அகீதா எனும் கொள்கைப் பிரச்சனை முன்வைக்கப்படுமானால் நம் எதிர் காலம் கேள்விக்குறிதான்?

”சமீபகாலங்களாகவே அஹ்லுஸ் சுன்னத்வல்ஜமாஅத் கொள்கைகளைக் கொண்ட அரபுக்கல்லூரிகள் பல பக்கா வஹ்ஹாபிகளாலும், முக்கா வஹ்ஹாபிகளாலும் கைப்பற்றப்பட்டு வருகின்றன”. என்ற ஷேக் அப்துல்லாலாஹ் ஜமாலியின் கூற்றை சில அரபுக்கல்லூரிகள் நிசர்சனப்படுத்தியிருப்பது வேதனையிலும் வேதனை.!

ஓவ்வொருபட்டபடிப்பும் அதுவே அவனுக்கு போதுமான வாழ்க்கை ஜீவாதாரமாக இருக்கும் போது இந்த ”ஆவிம்பட்டம்” மட்டும் ஏன் போதிய வருவாயை அவனுக்கு ஈட்டித்தருவதில்லை? இன்னொரு இணைத்தொழில் தேவைப்படுவது ஏன்? இமாமத் அது வேலையா? அல்லது சேவையா? ஏன்ற வினாக்களுக்க அவன் தன் வாழ்க்கைக்கான விடையை தேடிக்கொண்டே இருக்க வேண்டியதிருக்கிறது. உயர்வான விடை ஒன்று கிடைக்கும் போது அவனது உயிர் ஏனோ விடை பெற்றுக் கொள்கிறது.

80,90, களில் இருந்ததைப்போல் தகுதியானவர்களுக்கு மட்டுமே ”ஆலிம்பட்டம்” வழங்கப்படுமேயானால் அவன் பிற்காலத்தில் தனது வாழ்வாதாரத்தில் நிச்சயம் நிலைத்து நிற்கமுடியும். கல்வித்தரமற்ற சீன விளையாட்டு வீரர்கள் பலரின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகி இருப்பது நாம் நன்கு படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. ஒரு சமூகத்தலைவன் (இமாம்) நிச்சயம் தரமுள்ளவராக இருந்தால்தானே தன் சமூகத்தை சரியான பாதையில் கொண்டுசொல்லமுடியும்?

இதுவரை எந்த அரபுக்கல்லூரிகளிலும் ”ஆசிரியர் பயிற்சி” என சிறப்புச் பயிற்சி வழங்கப்படாததால் இமாம்களாலும். மத்ரசா மற்;றும் மக்தப் ஆசிரியர்களால் சரிவர பயானோ, பாடமோ, என்றாலும் சொல்லாமல் இருக்கவும் முடியாதே! குறையை மறைப்பது பெருங்குறையன்றோ?

கொள்கைகளால் பிளவுபட்டுக் கிடக்கும் அரபுக்கல்லூரிகள் குர்ஆனியக் கயிற்றை பற்றிப்பிடித்து ஒற்றுமைப் படாதவரை எந்தத் திட்டங்களும் ஏற்றம் பெறப்போவதில்லை!

நம் அண்டை மாநிலமான கேரளத்தில் ”ஸஹாபா மர்கஸ்மத்ரஸா” பல்துறைகளில் கொடி கட்டிப் பறப்பதும், அனைத்து அரபுநாடுகளோடு தொடர்பு கொண்டிருப்பதும் மாதந்திர அரபுப்பத்திகை வெளியிடுவதும், அல்அஜ்ஹர்(எகிப்து) பல்கலைக்கழத்தோடு தொடர்பு கொண்டிருப்பதும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. உண்மையிலேயே ”காலேஜ்டூர்” எனும் அடுத்தக்கல்லுரிகளை பார்வையிடும் பழக்கம் நம்மிடையே இல்லாததால் தான் சராசரி முன்னேற்றங்கள் நம்மிடையே சரிந்துபோய் இருக்கின்றன.

அதனால் தான் நெட்வொர்க,; டீம்வொர்க,; கம்யூனிகேஷன், டெவலெப்மெண்ட் போன்ற அன்றாட வார்த்தைகள் ஆலிம்களுக்கு அந்நியப்பட்டுக் கிடக்கின்றன. இவை புத்துயிர் பெறுவதற்குள் வேறு வார்த்தைகள் வளவாழ்வு பெற்றுவிடும். இதனிடையே ஆலிம்களின் மேம்பாட்டிற்காக வேலூர் (லிபாஸ்) பாகவிகள் பேரவை பொள்ளாச்சி நுஸ்ரத்துல் உலமா அறக்கட்டளை செவ்வனே ஆரம்பிக்கப்பட்டிருப்பது பெரும் ஆறுதலை அளிக்கிறது.

நமது அண்டை மாநில மொழிகளான உருதும் மலையாளமும் கட்டாயம் அரபுக் கல்லூரிகளில் அமுல் படுத்தப்பட வேண்டும் ஏழு ஆண்டுகளில் நிச்சயம் அவன் இவ்விருமொழிகளை கற்றுக் கொள்ள முடியும். இவ்விருமொழிகளில் இஸ்லாமிய இயக்கங்கள் நிறையவே ததும்புகின்றன. கொஞசம் பருகினாலும் நம்வார்த்தைகள் புஷ்டி பெறும், (ஆலிம்களின் தமிழும்,ஆங்கிலமும் தரப்பட வேண்டும் என்பது வேறுவிஷயம்!).

ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு மனிதனுக்குச் சமம் என்பதை அண்டைமாநிலங்களுக்குள் நாம் பயணிக்கும் போது நிச்சயம் உணரமுடியும்! நிழலின் அருமை கோடைவெயிலில் தானே மண்டைக்குப் புரிகிறது! அல்லாஹ், ரசூல் என்றால் என்ன என்று கேட்டு ஊர்சுற்றும் ஒருவனை அனைவராலும் ஹஜ்ரத் என்று போற்றப்படும் இமாமாக மறுமாற்றம் செய்யும் மகத்தான பணியை மத்ரஸாவைத்தவிர வேறு எந்த நிறுவனங்களாலும், பாடசாலைகளாலும்,குருகுலங்களாலும், மடங்களாலும், ஆஸ்ரமங்களாலும்,ஆலயங்களாலும் நிச்சயம் செய்ய முடியாத ஒன்று!

ஒரு மனிதனை மாற்றுவது என்பது ஒரு மலையை பெயர்ப்பது போன்று மகாகடினமானதே! வெறும் ஏழாண்டுகளில் பேரொழுக்கமுள்ளவனாக, ஒரு மனிதனை அரபுக்கல்லூரிகள் மாற்றுகிறதென்றால் அவை உண்மையிலேயே அதிசயக்கல்லூரிகள் தான்! ஆவை தேசியக் கல்லூரிகளாய் விரைவில் நெறிப்பட வேண்டும் என்பது நம் பேரவா! நீ தான் நிறைவேற்றித்தரவேண்டும் யா அல்லாஹ்!

Posted by World links

”Jazaakallaahu khairan” சிந்தனை சரம் மாத இதழ்

இக்கட்டுரையாசிரியருக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb