Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தெளிவில்லாத திருமண பதிவு சட்டம்! தமிழகத்தின் கருப்புச்சட்டம்!

Posted on January 22, 2010 by admin

 

கட்டாய திருமணப் பதிவு சட்டம் அமலாக்கப்படுவதை எதிர்த்து ஆல் இந்தியா இமாம் கவுன்சில் ஆர்ப்பாட்டம்

இந்திய அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரத்திற்கு எத்தகைய பங்கமும் நேரிடாதவாறு திருமண கட்டாய பதிவு சட்டத்தின் விதிமுறைகளை ஒழுங்குப்படுத்தவும்,

முஸ்லிம் தனியார் சட்ட பாதுகாப்பிற்கு உத்திரவாதம் வழங்கவும் அதுவரை சட்ட அமுலாக்கத்தை நிறுத்த்தவும்

தமிழக அரசை வலியுறுத்தி உலமாக்கள் தலைமையில் நான்கு தினங்களுக்கு முன்பு சிதம்பரம் கஞ்சித்தொட்டி முனையில் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாவட்டத்தலைவர் ஹாஜி. மௌலவி. எ. முஹம்மது அபுபக்கர் மிஸ்பாஹி அவர்களின் தலைமையில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில பொதுச்செயலாளர் மௌலவி டி. சையது இப்ராஹிம் உஸ்மானி, வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நம் நாட்டின் அரசியல் சாசன சட்டம் பிரிவு 25-ன் படி ஒவ்வொரு இந்திய குடிமக்களும் மதச்சுதந்திரத்தை பாதுகாத்துக்கொள்வது அடிப்படை உரிமைகளில் ஒன்று என உத்திரவாம் வழங்கியுள்ளது என குறிப்பிட்டு பேசினார்.

அதனைத்தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்டத்தலைவர் மௌலவி. எ. ஆபிருத்தீன் மன்பயீ,

ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாவட்ட பொருளாளர் மௌலவி. ஓ.ஆர். ஹஜ்ஜிமுஹம்மது மன்பயீ,

லால்பேட்டை ஐக்கிய ஜமாஅத் அமைப்பாளர் மௌலவி. எம். ஒய். முஹம்மது அன்சாரி மன்பயீ,

ஷேக் மொய்தீன் மிஸ்பாஹி

ஆகியோர் கோரிக்கைகளை முன்வைத்து உரைநிகழ்த்தி ‘

தெளிவில்லாத திருமண பதிவு சட்டம்! தமிழகத்தின் கருப்புச்சட்டம்!’ நிறுத்திவை! நிறுத்திவை! திருமண கட்டாய பதிவு சட்ட அமுலாக்கத்தை நிறுத்திவை! போன்ற கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜஃபருல்லா மன்பயீ, அபுபக்கர் ஃபிர்தௌஸி, உஸ்மான் மன்பயீ, ரஹமத்துல்லாஹ் மன்பயீ உள்ளிட்ட மாவட்டம் தழுவிய உலமாக்கள், மதரஸா பேராசிரியர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மௌலவி. எம். இசட். கலிலுர்ரஹ்மான் பாகவி. அவர்களின் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது.

தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் இத்திருமண சட்டத்தினால் ஏற்படும் பின்விளைவுகளைப்பற்றி ஆராயாமல் சமுதாய இயக்கங்கள் இன்னும் தூங்கிக்கொண்டிருப்பதாகவே தெரிகிறது. ஆலிம்கள் களத்தில் இறங்கி போராட்டதில் இறங்கியிருப்பதிலிருந்தே இது எவ்வளவு முக்கியமான பிரச்சனை என்பதை சமூக ஆர்வலர்கள் புரிந்து கொண்டு – ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொண்டு இச்சட்டத்தை அரசு வாபஸ் வாங்க முயற்சி எடுக்க வலியுருத்த வேண்டும்.

sources: paalaivanathoothu.blogspot.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 10 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb