Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மனைவி என்றால் ஸாலிஹான மனைவி

Posted on January 1, 2010 by admin

உலக வரலாற்றில் இப்படியோர் சம்பவம் வேறெங்கேணும் உண்டா?

  சையத் அப்துர் ரஹ்மான் உமரி  

அழகான குழந்தை அது! நான் முழுக்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்ற தோற்றம். அந்தக் குழந்தையை யார் பார்த்தாலும் உடனே எடுத்துக் கொஞ்சத் தொடங்கி விடுவார்கள். ஒருநாள் திடீரென்று அந்தக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. குழந்தையின் தந்தையான அபுதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு வெளியே வேளை விஷயமாக போகக் கிளம்பினார். குழந்தையின் தாய் உம்முஸுலைம் அக்கறையாக குழந்தையைப் பார்த்துக் கொண்டார். வீடு திரும்பியவுடன் குழந்தையைப் பற்றித்தான் முதலில் விசாரித்தார்.

”எப்படி இருக்கிறது? உடம்பு சரியாகிவிட்டதா?”

”பரவாயில்லை. முன்பைவிட இப்போது நிம்மதியாக உள்ளான்!” என்றார் அந்தத் தாய்!

”குழந்தையை கொண்டு வாருங்கள். பார்க்க வேண்டும் என்று மனசு துடிக்கின்றது!” என்றார் அந்த தந்தை.

”குழந்தை தூங்கிக் கொண்டுள்ளது. இப்போது தொந்தரவு தரவேண்டாம். நீங்கள் சாப்பிட்டு விட்டுத்தூங்குங்கள். காலையில் எழுந்ததும் பார்த்துக் கொள்ளலாம்!” -என்று உம்முஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா கூறிவிட்டார்கள். அபுதல்ஹா ரளியல்லாஹு அன்ஹுவும் தன்னுடைய மனைவியோடு தூங்கச் சென்றுவிட்டார்.

காலையில் எழுந்ததும் உம்முஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா தன்னுடைய கணவரின் முகத்தைப் பார்த்தார்கள். அமைதியாக ஒரு கேள்வியைக் கேட்டார்கள்: ”உங்களிடம் யாரேனும் ஒருவர் ஒருபொருளைக் கொடுத்து வைத்திருந்து அதைத் தருமாறு கேட்டு வந்தால் என்ன செய்வீர்கள்?

”அவருடைய பொருளை அவர் கேட்டால் கொடுத்துத்தானே ஆகவேண்டும். உடனே நான் கொடுத்து விடுவேன்!” என்றார் அபுதல்ஹா.

”அப்படியா! அப்படி என்றால் உங்களுக்கு குழந்தையைக் கொடுத்த அல்லாஹ் அதைத் திரும்ப வாங்கிக் கொண்டான்!” என்றார் உம்முஸூலைம் ரழியல்லாஹூ அன்ஹா.

அபுதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அமைதியாக நின்று கொண்டிருந்தார். ”ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள்? போய் கஃபன், தஃபன் வேலைகளைப் பாருங்கள்!” ஒரு நிமிடம் விழிகளை உயர்த்தி அபுதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு தன்னுடைய மனைவியைப் பார்த்தார். அதன்பின்பு குழந்தையை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யலானார். அதன்பிறகு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் கூறினார்.

”இரவில் ஒன்றாகத் தூங்கினீர்களா?” என்று இறைத்தூதர் விசாரித்து. ”யா அல்லாஹ்! வளமான குழந்தைச் செல்வத்தை இவர்களுக்குக் கொடு!!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள். அவ்வாறே ஒரு குழந்தை பிறந்தது. அப்துல்லாஹ் என்று பெயர் சூட்டினார்கள். மிகவும் அறிவுள்ள குழந்தையாக அல்லாஹ்வுக்கு பயப்படுகின்ற குழந்தையாக அது வளர்ந்தது. அபு தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கிடைத்த மனைவியும் ஸாலிஹான மனைவி! குழந்தையும் ஸாலியான குழந்தை! அல்லாஹ்வுக்கு பயந்து வாழ்ந்தால் எல்லா அருட்கொடைகளும் கிடைக்கும்!! நமக்கும்தான்!

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 4

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb