Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நன்மை பயக்கும் நபிமொழி – 62

Posted on December 29, 2009 by admin

இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”சொர்க்கம் என்பது, உங்களில் ஒருவருக்கு அவரது செருப்பின் வாரை விட மிக நெருக்கமாக இருக்கும். நரகமும் இதுபோல் தான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி)  

இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ” …நீங்கள் சுபச்செய்தி கேளுங்கள். உங்களை மகிழ்வுறச் செய்யும் செய்தியைப் பெறுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ஏழ்மை உங்களிடம் ஏற்படுவதை நான் பயப்படவில்லை. எனினும், உங்களுக்கு முன் இருந்தோருக்கு வசதியாக ஆக்கப்பட்டது போல் உங்களுக்கும் இந்த உலகம் வசதியாக்கப்படுவதையே நான் பயப்படுகிறேன். மேலும் அதில் அவர்கள் பெருமை கொண்டது போல், நீங்களும் அதில் பெருமை கொண்டு இருப்பதையும், அவர்களை அது அழித்தது போல் உங்களை அது அழித்து விடும் என்பதையுமே (நான் பயப்படுகிறேன்)” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அபூஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேடையில் (மிம்பரில்) உட்கார்ந்தார்கள். அவர்களைச் சுற்றி நாங்களும் உட்கார்ந்தோம். அப்போது அவர்கள், ”எனக்குப் பின் உங்களிடையே உலக வசதி அதிகமாக்கப்படுவதைக் கண்டு நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்கள்.(புகாரி, முஸ்லிம்)



அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”இறைவா! மறுமையின் வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை (நிரந்தரம்) இல்லை என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பிரார்த்தனைச் செய்யும்போது) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”இறந்தவரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை அவனது குடும்பம், அவனது சொத்து, அவனது செயல்கள் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டும் தங்கி விடுகிறது. அவனது குடும்பமும், அவனது சொத்தும் திரும்பி விடுகின்றன. அவனது செயல் தங்கி விடுகிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (புகாரி , முஸ்லிம்)  

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”அல்லாஹ்வின் அச்சம் காரணமாக அழுகின்ற மனிதர், கறந்தபால் மடுவுக்குள் மீண்டும் நுழைந்தாலும் நரகில் நுழைய மாட்டார். அல்லாஹ்வின் வழியில் படிந்த புழுதியும், நரகப் புகையும், இணைந்திடாது” என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ)

இர்பாழ் இப்னு ஸாரியா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”உள்ளங்கள் நடுங்கி கண்கள் கண்ணீரைச் சிந்தும் அளவுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்தார்கள்.”(அபூதாவூது, திர்மிதி)

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

62 − = 57

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb