Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மனிதா விழித்தெழு!

Posted on December 26, 2009 by admin

மனிதா!

பொழுது விடிந்துவிட்டது–இன்னும்

உன் உறக்கம் கலையவில்லையா?

உனைப் படைத்தவனை

வணங்கச் செல்லவில்லையா?

 

அழியப்போகும் அகிலத்தில்

அல்லாஹ்வை நினைக்காமல்

எத்தனை காலந்தான்–நீ

உறங்கிக்கொண்டிருப்பாய்?

எத்தனை காலம்தான்

இந்த உறக்கத்தில்–நீ சுகம் காணப்போகிறாய்?

 

பகல் வந்துவிட்டது

இன்னும் நீ

படைத்ததவனை

வணங்கச் செல்லவில்லையா?

 

படுத்திருந்த உன்னை

விழிக்கச் செய்து பொருள்தேட

ஆற்றல் கொடுத்தவனை

எப்போதுதான்

நீ வணங்கப்போகிறாய்?

 

இனிய மாலைப்பொழுதும்

வந்துவிட்டது–இன்னும்

உனக்கு இறைவனைப் பற்றிய

எண்ணமில்லையா?

 

காலை முதல் மாலை வரை

உடலாரோக்கியம் கொடுத்து

உழைக்க வைத்தவன்–உன்

இறைவனல்லவா?

அவனை வணங்காமல்

எப்படி நீ உழைப்பாய்?

 

அந்தி முடிந்து இரவின்

தொடக்கமும் வந்துவிட்டது.

இன்னும் நீ இறைவனை

வணங்கவில்லையா?

 

இன்னும்–உன்

இதயம் இளகவில்லையா?

இன்று தொழாவிட்டால்

என்றுதான் நீ

தொழப்போகிறாய்?

 

இதோ

இரவின் கடைசிப் பகுதியும்

வந்துவிட்டது.

இன்னும் நீ

இறைவனை வணங்கவில்லையா?

 

உழைப்பதற்கு

ஊக்கம் கொடுத்து

அல்லும் பகலும்

அயராது உழைக்க

ஆற்றல் கொடுத்து

அன்பான மனைவி மக்களையும்

கொடுத்த இறைவனை

இன்னும் நீ வணங்கவில்லையா?

 

அழியப்போகும் அவனியில்

அயராது உழைத்து

என்ன சாதிக்கப்போகிறாய்?

இறைவனின் உதவியின்றி

இவ்வுலகில் நீ

என்ன செய்திட முடியும்?

எண்ணிப் பார்த்தாயா?

 

நம்மைப் படைத்த ஓரிறைவன்–நம்

நரம்புகளை இழுத்துவிட்டால்

நம்மால் என்ன செய்ய முடியும்?

எப்படி உழைக்க முடியும்?

 

விழித்தெழு மனிதா! விழித்தெழு!-உன்

உறக்கத்திலிருந்து விழித்தெழு!

படைத்த இறைவனை

பயபக்தியோடு

அனுதினமும் நீ தொழு!

அவனிடமே நீயழு!

 

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”

”Jazaakallaahu khairan”

காரீ நூ அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி

www.hadi-baquavi.blogspot.com

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb