Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

லிபரான் கமிஷன் அறிக்கை-நாடாளுமன்றதில் தாக்கல்

Posted on November 24, 2009 by admin

o  வாஜ்பாயியை குற்றவாளியாக்கும் வீடியோ பேச்சு!

o  அறிக்கையில் கூறப்பட்டுள்ள 68 குற்றவாளிகளின் பட்டியல்!

o  மதவாத அரசியலை தடுக்க சட்டம் தேவை: மத்திய அரசுக்கு கமிஷன் யோசனை!

டெல்லி: 1000 பக்கம் கொண்ட லிபரான் கமிஷன் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அயோத்தி இயக்கத்தை உருவாக்கியதும் அதை நடத்தியதும் RSS தான். RSS-சும் அதனுடன் மிக நெருங்கிய பாஜகவின் மூத்த தலைவர்களுமே மசூதி இடிப்புக்குக் காரணம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில் BJP, RSS, VHP, பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உள்பட 68 பேர் மீது நாட்டை மத மோதலுக்கு இட்டுச் சென்றதாக  கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.  சிவசேனாவின் தலைவர் பால் தாக்ரே மீதும் கமிஷன் குற்றம் சுமத்தியுள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு மிக முக்கியமான காரணம் என்று லிபரான் கமிஷன் குற்றம் சுமத்தியுள்ளவர்கள்: அப்போதைய உத்தரப் பிரதேச பாஜக முதல்வராக இருந்த கல்யாண் சிங், RSS முன்னாள் தலைவர் சுதர்ஷன், உமா பாரதி, கோவிந்தாச்சார்யா, வகேலா போன்றவர்கள். கர சேவகர்கள் லட்சக்கணக்கில் குவிந்துவிட்ட நிலையில் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தவோ, மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்க மத்தியப் படைகளின் உதவியையோ அப்போதைய உத்தரப் பிரதேச பாஜக முதல்வராக இருந்த கல்யாண் சிங் நாடவில்லை.

கல்யாண் சிங் கடைசிவரை நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மத்திய அரசிடம் கூறிக் கொண்டிருந்தார். மேலும் மசூதி இடிக்கப்படும் வரை அதைக் கண்டுகொள்ளாத வகையில், பாஜகவுக்கு ஆதரவான அதிகாரிகளையும் போலீஸ் அதிகாரிகளையும் அவர் நியமித்தார்.

மேலும் மசூதி இடிப்புக்கு முக்கிய காரணமான மற்றவர்கள் உமா பாரதி, சங்கர் சிங் வகேலா, கோவிந்தாச்சார்யா, சுதர்ஷன் ஆகியோர் ஆவர். இவர்கள் தான் மசூதி இடிப்பு திட்டத்தை வகுத்தவர். இவர்கள் நினைத்திருந்தால் மசூதி இடிப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்த பாஜக தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் போலியான மிதவாதிகள் ஆவர். தங்களை மிதவாதிகள் போல வெளியில் காட்டிக் கொண்டு, மசூதி இடிப்புக்கான சூழலை உருவாக்கினர்.

மசூதி இடிக்கப்படாது என்று இவர்கள் நீதிமன்றத்துக்கும், நாட்டுக்கும் தவறான உறுதிமொழிகளைத் தந்தனர். RSS விதித்த உத்தரவை இவர்களால் மீற முடியாமல் மசூதி இடிப்புக்கு துணை போயினர். ஆனால், மசூதி இடிப்புக்கான திட்டத்தை வகுத்தவர்களை இவர்களால் தடுத்திருக்க முடியும்.



அயோத்தி இயக்கத்தை உருவாக்கியதும் அதை நடத்தியதும் RSS தான். RSS-சும் அதனுடன் மிக நெருங்கிய பாஜகவின் மூத்த தலைவர்களுமே மசூதி இடிப்புக்குக் காரணம். RSS-ன் இந்தத் திட்டம் வாஜ்பாய், அத்வானி, ஜோஷிக்குத் தெரியாது என்று யாரும் சொல்ல முடியாது. என்று லிபரான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உள்பட 68 பேர் மீது கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி அந்த அறிக்கையில் எந்த பரிந்துரையும் இல்லை.

வாஜ்பாயியை குற்றவாளியாக்கும் வீடியோ பேச்சு

இந் நிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு முதல் நாளான 1992ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி லக்னொவில் கர சேவகர்கள் மத்தியில் வாஜ்பாய் பேசிய ஒரு பொதுக் கூட்டத்தின் வீடியோ தான் அவருக்கு எதிராக கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யக் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.

சுமார் இரண்டு லட்சம் கரசேவகர்கள கூடிய அந்தக் கூட்டத்தில் பேசிய வாஜ்பாய், பிரச்சனைக்குரிய இடத்தில் புதிதாக கட்டுமானப் பணிகளைச் செயயத்தான் சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. அங்கு கரசேவைக்கு தடையில்லை, பஜனை நடத்தவும் கீர்த்தனைகள் பாடவும் தடையில்லை. நீங்கள் நடமாடாமலோ அல்லது கட்டுப்பாட்டுடனோ இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. பஜனையும் கீர்த்தனையும் ஒருவரால் மட்டும் செய்ய முடியாது. கூட்டம் கூடித் தான் ஆக வேண்டும், கீர்த்தனைகளை உட்கார்ந்து தான் பாட வேண்டும்.

அங்கு (அயோத்தியில்) சும்மா நின்று கொண்டே இருக்க முடியுமா?. ஏராளமான கூரிய கற்களும் பாறைகளும் உள்ள அந்த இடத்தில் எப்படி உட்காருவது?. இதனால் அந்த இடத்தை நாம் ‘சமப்படுத்தியே‘ ஆக வேண்டும். அப்போது தான் நாம் அங்கே அமர முடியும். மேலும் அந்த இடத்தில் சில யாகங்களும் செய்ய வேண்டியுள்ளது, இதற்காக சில கட்டுமானங்களையும் செய்ய வேண்டியுள்ளது. இதையெலலாம் சுப்ரீம் கோர்ட் தடுக்கவில்லை.

நாளை (டிசம்பர் 6ம் தேதி) என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. அதை தீர்மானிக்கப் போவது கர சேவகர்கள் தான். நானும் அயோத்திக்குச் செல்லவே விரும்புகிறேன். ஆனால், என்னை டெல்லிக்குத் திரும்பச் சொல்லிவிட்டார்கள். இவ்வாறு அந்த வீடியோவில் வாஜ்பாய் பேசியுள்ளார்.

இந்த வீடியோ 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி ஐ.பி.சிங் என்ற வழக்கறிஞரால் லிபரான் கமிஷனிடம் சமர்பிக்கப்பட்டது. இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் வாஜ்பாயையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று அந்த வழக்கறிஞர் கோரினார். ஆனால், அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்த நிலையில் அந்தக் கோரிக்கையை லிபரான் கமிஷன் நிராகரித்துவிட்டது. இந் நிலையில் தான் லிபரான் கமிஷன் தனது அறிக்கையில், பாபர் மசூதி இடிப்புக்கு வாஜ்பாய் பெயரையும் சேர்த்துள்ளது.

மதவாத அரசியலை தடுக்க சட்டம் தேவை: மத்திய அரசுக்கு கமிஷன் யோசனை!

மதவாத அரசியலை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வருவது அவசியம் என்று மத்திய அரசுக்கு கமிஷன் யோசனை தெரிவித்துள்ளது. அரசியலில் மதத்தைக் கலப்பவர்களைத் தடுக்கும் வகையில் அந்த சட்டம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

www.nidur.info

 

லிபரன் அறிக்கையில் கூறப்பட்டுள்ள 68 குற்றவாளிகளின் பட்டியல்

1. அகிலேஷ் மெஹ்ரோத்ரா (பைசியாபாத் கூடுதல் எஸ்பி)

2. அசோக் சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)

3. அலோக் சின்ஹா (சுற்றுலாத்துறைச் செயலாளர்)

4. ஆச்சார்ய தர்மேந்திர தேவ் (தரம் சன்சத், உறுப்பினர்)

5. ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர் (விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்)

6. ஆர்.கே.குப்தா (உ.பி

7. உமா பாரதி (விஸ்வ ஹிந்து பரிஷத்)

8. எச்.வி.சேஷாத்ரி (ஆர்எஸஎஸ்)

9. ஏ.கே.சரண் (பாதுகாப்புப் பிரிவு, ஐ.ஜி)

10. ஓங்கார் பாவே (விஸ்வ ஹிந்து பரிஷத்)

11. ஓம் பிரதாப் சிங்

12. கல்யாண் சிங் (உ.பி

13. கல்ராஜ் மிஸ்ரா (பாஜக உ.பி

14. குர்ஜான் சிங் (விஎச்பி, ஆர்எஸ்எஸ்)

15. குஷபாவ் தாக்கரே (ஆர்.எஸ்.எஸ்)

16. கெளர் (மாவட்ட ஆணையர்)

17. கோவிந்தாச்சார்யா (ஆர்எஸ்எஸ்)

18. சக்சேனா (உபி தலைமைச் செயலாளர்)

19. சங்கர் சிங் வகேலா (குஜராத் மாநில பாஜக தலைவர்

20. சதீஷ் பிரதான் (சிவசேனா)

21. சம்பத் ராய் (அயோத்தி கட்டுமானப் பிரிவு மேலாளர்)

22. சாத்வி ரிதாம்பரா (சந்த் சமாஜ் தலைவர்)

23. சிதா ராம் அகர்வால்

24. சுதர்ஷன் (ஆர்எஸ்எஸ் தலைவர்)

25. சுரேந்தர் சிங் பண்டாரி (பாஜக)

26. சுவாமி சச்சிதானந்த சாக்ஷி (வி்ஸ்வ ஹிந்து பரிஷத்)

27. சுவாமி சத்மிட் ராம் ஜி (சந்த் சமாஜ்)

28. சுவாமி சத்யானந்த் ஜி (சந்த் சமாஜ்)

29. சுவாமி சின்மயானந்த் (வி்ஸ்வ ஹிந்து பரிஷத்)

30. சுவாமி வாம் தேவ்ஜி (சந்த் சமாஜ்)

31. சூர்ய பிரதாப் சாகி (உ.பி

32. டி.பி.ராய் (பைசியாபாத் மூத்த எஸ்பி)

33. தாவு தயால் கன்னா (பாஜக)

34. திரிபாதி (உபி போலீஸ் டிஜிபி)

35. தேவ்ரஹா பாபா (சந்த் சமாஜ் தலைவர்)

36. பத்ரி பிரசாத் தோஸ்னிவால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)

37. பரம் தத் திவிவேதி (உ.பி

38. பால் தாக்கரே (சிவசேனா)

39. பாஜ்பாய் (பைசியாபாத் போலீஸ் டிஐஜி)

40. பி.பி.சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)

41. பிரபாத் குமார் (உ.பி உள்துறை முதன்மை செயலாளர்)

42. பிரமோத் மகாஜன் (பாஜக, காலமாகிவிட்டார்)

43. பிரவீன் தொகாடியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)

44. புருஷோத்தம் நாராயண் சிங் (விஸ்வ ஹிந்து பரிஷத் செயலாளர்)

45. பைகுந்த் லால் சர்மா (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)

46. மகந்த் அவைத்யநாத் (இந்து மகாசபா)

47. மகந்த் நித்யகோபால் தாஸ் (ராம் ஜென்ம பூமி நியாஸ் தலைவர்)

48. மகந்த் பரமஹம்ஸ் ராம் சந்தர் தாஸ் (விஸ்வ ஹிந்து பரிஷத்)

49. முரளி மனோகர் ஜோஷி (பாஜக)

50. முன்னாள் துணை பிரதமர் அத்வானி (பாஜக)

51. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (பாஜக)

52. மோர்பந்த் பிங்கலே (சிவசேனா)

53. மோரேஸ்வர் தினாநாத் சவே (சிவசேனா)

54. யோத் நாத் பாண்டே (சிவசேனா)

55. ராம் சங்கர் அக்னிஹோத்ரி (பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத்)

56. ராம் விலாஸ் வேதாந்தி (சந்த் சமாஜ் தலைவர்)

57. ராஜேந்கிர சிங் என்ற பேராசிரியர் என்ற ராஜு பையா (ஆர்.எஸ்.எஸ் தலைவர்)

58. ராஜேந்திர குப்தா (உ.பி. அமைச்சர்)

59. லல்லு சிங் செளஹான் (பா.ஜ.க அயோத்தி எம்எல்ஏ)

60. லால்ஜி தண்டன் (உ.

61. வினய் கத்யார் (பஜ்ரங் தள், ஆர்எஸ்எஸ்)

62. விஜயராஜே சிந்தியா (பாஜக)

63. விஷ்ணு ஹரி டால்மியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)

64. ஜி.எம்.லோதா (பாஜக)

65. ஜெய் பகவான் கோயல் (சிவசேனா)

66. ஜெய் பன் சிங் பவாரியா (பஜ்ரங் தள்)

67. ஸ்ரீ சந்தர் தீட்சித் (பாஜக)

68. ஸ்ரீவஸ்வதா (பைசியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட்)

நன்றி : inneram.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb