Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பாபரி மசூதி இடிப்பில் வாஜ்பாய், அத்வானி, ஜோஷிக்கு தொடர்புண்டு: லிபரான் கமிஷன்

Posted on November 23, 2009 by admin

டெல்லி: நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில், லிபரான் கமிஷனின் அறிக்கையின் சில பகுதிகள் ‘லீக்‘ ஆகியுள்ளன. பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக அது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் கமிஷன் கூறியுள்ளது.

அதில் உள்ள விபரங்கள்: 

பாபர் மசூதி இடிப்பு 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி திடீரென உணர்ச்சி வேகத்தில் நடந்துவிடவில்லை. அது மிகவும் திட்டமிட்ட சதியாகும்..

இந்தச் சதியில் பாஜக மூத்த தலைவர்களான முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு நிச்சயமான தொடர்பு உண்டு. இவர்களுக்குத் தெரியாமல் இந்த சம்பவம் நடந்ததாகவோ அல்லது இவர்கள் குற்றமற்றவர்கள் என்றோ கூற முடியாது.



இந்த அறிக்கையை கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி லிபரான் சமர்பித்தார். நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே இந்த அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று கூறப்பட்ட நிலையில், எந்த நாளில் தாக்கலாகும் என்பது குறித்து அரசு திட்டவட்டமாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்தது.

இந் நிலையில் இந்தப் பகுதிகள் ‘லீக்‘ ஆகியுள்ளன. இதை மத்திய அரசே கசிய விட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. லிபரான் கமிஷன் அறிக்கையின் குறிப்பிட்ட தகவல்கள் வெளியானது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக அமளியில் ஈடுபட்டது. அறிக்கையின் ஒரு சில பகுதிகள் மட்டும் வெளியானதற்கு காரணம் என்ன, தகவல்கள் எப்படி கசிந்தது என்று மக்களவையில் எதிர்கட்சித் தலைவர் அத்வானி கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், லிபரான் கமிஷன் அறிக்கையும், பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையும் மக்களவைத் கூட்டத்தொடர் முடியும்போது டிசம்பர் 21ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றார்.

லிபரான் கமிஷன் அறிக்கையின் ஒரே ஒரு நகல்தான் தங்களிடம் உள்ளது என்றும் அதை பத்திரமாக வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அறிக்கையில் உள்ள விவரம் பற்றி உள்துறையில் இருந்து யாரும் பத்திரிகைகளிடம் சொல்லலப்படாத நிலையில் துரதிர்ஷ்டவசமாக பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது என்றார்.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் விளக்கத்தை ஏற்க மறுத்து பாஜக எம்பிக்கள் கூச்சலிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ‘அவை’ நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அதே போல ராஜ்சபாவும் பாஜக  எம்பிக்களின் கூச்சல் குழப்பத்தால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந் நிலையில் நீதிபதி லிபரான், அறிக்கையின் எந்த ஒரு அம்சத்தையும் தான் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், நாளையே நாடாளுமன்றத்தில் லிபரான் கமிஷன் முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றார். சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறுகையில், இந்த அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அவையை நடத்த விட மாட்டோம் என்றார்.

இந்த அறிக்கை விவகாரம் குறித்தும், அதை எப்போது தாக்கல் செய்வது என்பது குறித்தும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது இல்லத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் இன்று தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் டிசம்பர் 21ம் தேதிக்கு முன்பே, பிரதமர் நாடு திரும்பியபின் இந்த அறிக்கை தாக்கலாகலாம் என்று தெரிகிறது.

 

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

84 − = 75

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb