Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நன்மை பயக்கும் நபிமொழி – 56

Posted on November 23, 2009 by admin

ஹாரிஸா இப்னு வஹப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

”சொர்க்கவாதிகளை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? (உடலாலும் பொருளாலும்) பலவீனமானவர், அதனால் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர் ஒவ்வொருவரும் சொர்க்கவாதிகளே! அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்.

நரகவாதிகளை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? கடின மனம் கொண்ட, பருமனான உடலுடன் ஆணவத்துடன் நடக்கும், பெருமை பிடித்த ஒவ்வொருவனும் நரகவாதியே! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.”(புகாரீ, முஸ்லிம்)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

”சொர்க்கமும் நரகமும் உரையாடிக் கொண்டன. ‘ஆணவக்காரர்களும் பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களும் என்னிடத்தில் நுழைவார்கள் என்று நரகம் கூறியது. பலவீனர்களும் ஏழைகளும் என்னிடத்தில் நுழைவார்கள் என்று சொர்க்கம் கூறியது.’ அப்போது, ‘நீ என்னுடைய தண்டனையாவாய்! நான் நாடியவர்களுக்கு உன் மூலம் தண்டனை வழங்குவேன்! நீ என்னுடைய கிருபையாவாய்! நான் நாடியவர்களுக்கு உன் மூலம் கிருபை செய்வேன்! மேலும் நீங்கள் இருவரும் -மக்களால்- நிரப்பப்பட்டு விடுவீர்கள்!’ என்று நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (புகாரி, முஸ்லிம்)



அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

‘‘முஸ்லிம் பெண்களே! ஒரு பக்கத்து வீட்டுப் பெண், மற்றொரு பக்கத்து வீட்டுப் பெண்ணை இழிவாக எண்ணிட வேண்டாம். ஒரு ஆட்டின் கால்குளம்பாயினும் சரியே! (அதையேனும் வழங்கலாம்) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.” (புகாரி, முஸ்லிம்)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

”ஒரு பக்கத்து வீட்டார், தன் வீட்டுச் சுவரில் குச்சியை நட்டு வைக்க மற்றொரு பக்கத்து வீட்டார் தடுத்திட வேண்டாம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆனால்) இந்த நபிமொழியைப் புறக்கணித்தவர்களாகவே உங்களை நான் பார்க்கிறேனே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உங்களுக்கிடையே இதை நான் கூறிக் கொண்டேதான் இருப்பேன். (என்று அபூஹுரைரா(ரலி) கூறுகிறார்) (புகாரி,முஸ்லிம்)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

”அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் பக்கத்து வீட்டாரை நோவினை செய்ய வேண்டாம். மேலும் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிய ஒருவர் நல்லதைச் சொல்லட்டும். அல்லது மவுனமாக இருக்கட்டும்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (புகாரி, முஸ்லிம்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 6

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb