Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சிந்திப்போமா? (02)

Posted on November 17, 2009 by admin

அல்லாஹ் தனது தூதர்களுக்கு பல்வேறு அற்புதங்களை வழங்கினான். அந்த வரிசையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அற்புதம் திருமறை குர்ஆன் ஆகும். இந்த குர்ஆனை பெரும்பாலான சஹாபாக்கள் மனனம் செய்திருந்தாலும் அதில் நால்வரை குறிப்பிட்டு அவர்களிடமிருந்து குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அந்த நால்வரில் உபை இப்னு கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “இப்னு மஸ்வூத் (ரளியல்லாஹு அன்ஹு), அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம் (ரளியல்லாஹு அன்ஹு), உபை இப்னு கஅப் (ரளியல்லாஹு அன்ஹு) மற்றும் முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்”  என அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். (புகாரி)

இந்த அளவுக்கு சிறப்பிற்குரிய நபித்தோழராக உபை இப்னு கஅப் ரளியல்லாஹு அன்ஹு திகழ்வதற்கு காரணம், குர்ஆனை மனனம் செய்ததோடு சிறப்பாக ஓதவும் கூடியவர்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்; ”எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப் ரளியல்லாஹு அன்ஹு ஆவார்.” (ஹதீஸ் சுருக்கம் புகாரி)

அல்லாஹ்வின் வேதத்தை மனதில் தாங்கி, அதை அழகிய முறையில் ஓதக்கூடிய உபை இப்னு கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரை அல்லாஹ் தனது வாயால் சொல்லி சங்கைப்படுத்திய அதிசயம் பாரீர்.

அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்; ”’நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபை இப்னு கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், ‘‘உங்களுக்கு ‘லம் யகுனில்லஃதீன கஃபரூ’‘ எனும் (98 வது) அத்தியாயத்தை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்’ என்று கூறினார்கள். அதற்கு உபை ரளியல்லாஹு அன்ஹு, ‘‘அல்லாஹ் என் பெயரை குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?‘‘ என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘‘ஆம்‘‘ என்று பதிலளிக்க, (ஆனந்த மிகுதியால்) அப்போது உபை ரளியல்லாஹு அன்ஹு அழுதார்கள்.”’ (நூல்: புகாரி)

அன்பானவர்களே!

திருமறை குர்ஆனோடு உபை இப்னு கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கொண்ட நேசம் அவர்களின் பெயரை அல்லாஹ் சொல்லும் அளவுக்கு அல்லாஹ்வின் நேசத்தை பெற்றுத்தந்துள்ளது என்றால், இன்று அந்த உபை இப்னு கஅப் ரளியல்லாஹு அன்ஹு ஓதிய அதே குர்ஆன் நம்மிடம் உள்ளது.

அதை அழகிய முறையில் ஓதுபவர்கள் நம்மில் எத்துனை பேர்..?

குர்ஆன் பட்டுத்துணியால் போர்த்தப்பட்டு பரணியில் வைக்கும் அழகு பொருளாகவும், பட்டுப்(இறந்து)போனவர்களின் பக்கத்தில் உக்கார்ந்து ஓதும் மந்திரப்பொருளாகவும் நம்மால் மாற்றப்பட்டுவிட்டதே!

இந்த நிலை மாற இன்று முதல் இயன்றவரை இறைமறை ஓதுவோம். இறைவனின் அன்பை பெறுவோம்!

”Jazaakallaahu khairan” முகவை எஸ்.அப்பாஸ் ”ஸஹாபாக்களின் வாழ்வினிலே”இல் இருந்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

32 − = 30

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb