Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இடைவிடாது உழைக்கும் தியாகிகள்!

Posted on November 12, 2009 by admin

வாழ்விற்காக

இளமைகளை

தொலைத்த

துர்பாக்கியசாலிகள் !

 

வறுமை என்ற

சுனாமியால்

அரபிக்கடலோரம்

கரை ஒதுங்கிய

அடையாளம் தெரிந்த

நடை பிணங்கள் !

 

சுதந்திரமாக

சுற்றி திரிந்தபோது

வறுமை எனும்

சூறாவளியில் சிக்கிய

திசை மாறிய பறவைகள் !

 

நிஜத்தை தொலைத்துவிட்டு

நிழற்படத்திற்கு

முத்தம் கொடுக்கும்

அபாக்கிய சாலிகள் !

 

தொலைதூரத்தில்

இருந்து கொண்டே

தொலைபேசியிலே

குடும்பம் நடத்தும்

தொடர் கதைகள் !

 

கடிதத்தை பிரித்தவுடன்

கண்ணீர் துளிகளால்

கானல் நீராகிப் போகும்

மனைவி எழுதிய

எழுத்துக்கள்!

 

ஈமெயிலிலும்

இண்டர்நெட்டிலும்

இல்லறம் நடத்தும்

கம்ப்யூட்டர் வாதிகள் !

 

நலம் நலமறிய

ஆவல் என்றால்

பணம் பணமறிய

ஆவல் என கேட்கும்

ஏ . டி . எம் . மெஷின்கள் !

 

பகட்டான

வாழ்க்கை வாழ

பணத்திற்காக

வாழக்கையை

பறி கொடுத்த

பரிதாபத்துக்குரியவர்கள் !

 

ஏ . சி . காற்றில்

இருந்துக் கொண்டே

மனைவியின்

மூச்சுக்காற்றை

முற்றும் துறந்தவர்கள் !

 

வளரும் பருவத்திலே

வாரிசுகளை

வாரியணைத்து

கொஞ்சமுடியாத

கல் நெஞ்சக்காரர்கள்  

 

தனிமையிலே

உறங்கும் முன்

தன்னையறியாமலே

தாரை தாரையாக

வழிந்தோடும்

கண்ணீர் துளிகள் !

 

அபஷி என்ற அரபி

வார்த்தைக்கு

அனுபவத்தின் மூலம்

அர்த்தமானவர்கள் !

 

உழைப்பு என்ற

உள்ளார்ந்த அர்த்தத்தை

உணர்வுபூர்வமாக

உணர்ந்தவர்கள்!

 

முடியும் வரை

உழைத்து விட்டு

முடிந்தவுடன்

ஊர் செல்லும்

இடைவிடாது நோயாளிகள் !

 

கொளுத்தும் வெயிலிலும்

குத்தும் குளிரிலும்

பறக்கும் தூசிகளுக்கும்

இடையில் பழகிப்போன

ஜந்துகள்!

 

பெற்ற தாய்க்கும்

வளர்த்த தந்தைக்கும்

கட்டிய மனைவிக்கும்

பெற்றெடுத்த குழந்தைக்கும்

உற்ற குடும்பத்திற்கும்

இடைவிடாது உழைக்கும்

தியாகிகள்!

 

”Jazaakallaahu khairan” Abdul Rahman

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 13 = 19

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb