Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

IIT யில் முஸ்லீம் மாணவர்கள் சேர்வது எப்படி?

Posted on November 11, 2009 by admin

அதிக பணம் கொட்டி கொடுத்து தனியார் கல்லுரிகளில் மாணவர்களை சேர்த்தாலும் தரமான கல்வி இல்லை, படித்து முடித்த பிறகு வேலை இல்லை, வேலை கிடைத்தாலும் படித்ததற்க்கான வேலை கிடைக்கவில்லை என்ற குறைபாடு முஸ்லீம் சமுதாயத்தில் அதிகமாகவே உள்ளது.

கற்பனை செய்துபாருங்கள் : மிக குறைந்த செலவில் உலக தரத்தில் நல்ல தரமான கல்வி, கல்வி கட்டணம் (பீஸ்) கட்ட வசதி இல்லாத மாணவர்களுக்கு உடனடியாக இலவச கல்வி உதவி தொகை, படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை, மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்பு, கேட்க எவ்வளவு நன்றாக இருக்கின்றது, இது கற்பனை அல்ல இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருக்கின்றது. அதுதான் மத்திய அரசால் நடத்தப்படும் சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஐஐடி.

இங்கு படிக்க மிக குறைந்த கட்டணமே, வசதி இல்லாத மாணவர்களுக்கு மத்திய அரசே கல்வி செலவை ஏற்க்கும் ( ஐஐடி–யில் படிக்கும் சிறுபாண்மை மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பான இலவச கல்வி உதவி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றது). இங்கு உலக தரத்தில் கல்வி கற்று கொடுக்கப்படுகின்றது.

படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் சம்பளத்தில் வேலை (தற்போது ஐஐடி–யில் படிக்கும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான மாத சம்பளம் ரூ.1,00,000 இருந்து ரூ.30 ஆயிரம் வரை). மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளிநாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள். இவை அனைத்தும் உள்ள ஒரே கல்வி நிறுவனத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.

இங்கு படிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

இங்கு சேர மத்திய அரசு பல்வேறு நுழைவு தேர்வுகளை நடந்துகின்றது, அந்த நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் போதும்,

இட ஒதுக்கீடு: ஐஐடி–யில் (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கா 27% இட ஒதுக்கீடு உள்ளது.

IIT-JEE 2010 : தற்போது ஐஐடி–யில் (IISc-யையும் சேர்த்து) +2 படித்த மாணவர்கள் 2010 ஆண்டு பொறியியல் படிப்பிற்க்கு சேர்வதற்க்கான நுழைவு தேர்வின் (IIT-JEE 2010) விண்ணப்பம் விணியோகிக்கப்பட்டு வருகின்றது. (தேர்வை பற்றிய விபரங்கள் கீழே இடம் பெற்றுள்ளது).

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.

ஐஐடி–யில் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லி கொள்பவர்களின் ஆதிக்கம்: ஐஐடி–யில் பெறும்பாலும் படிப்பதும், ஆசிரியர்களாக இருப்பதும் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லிகொள்ளும் பார்பனர்கள், , இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, ஐஐடி–யில் சேருவது மிக மிக கடினம், சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய மாணவர்களின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும்.

அரசு இட ஒதுகீடு என்று அறிவித்த பிறகும் இவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி (ஐஐடி–யில் அதிகார மட்டத்தில் இவர்களே அதிகம் உள்ளனர்) இட ஒதுக்கீட்டை கிடைக்கவிடாமல் செய்வது, சென்ற ஆண்டு மாணவர் சேர்கையில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கோட்டாவில் சேர்க்க தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி 1,100 இடங்கள் காலியாக வைத்து, அதே போல 53 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்களில் சேர்க்கவும் தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி, இதனால் அனைத்து இடங்களும் பொதுக் கோட்டாவுக்கு மாற்றுகின்றோம் என்று கூறி அந்த இடத்தையும் இவர்களே எடுத்து கொண்டனர். இது சம்ந்தமாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடந்தும் எந்த பலனும் இல்லை .

மாணவ மாணவியர்களே!

இதை மாற்ற நாமும் ஐஐடி–யில் படிக்க வேண்டும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

ஐஐடி நுழைவு தேர்வுக்கென்றே சிறப்பு வழிகாட்டுதல் குழுவை TNTJ மாணவரணி ஏற்படுத்தி உள்ளது.  அவர்களை தொடர்பு கொண்டு ஐஐடி தேர்வுகளை பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வுகள் பற்றியும், விண்ணப்ப படிவங்கள் பற்றியும் மேலும் அறிந்து கொள்ள TNTJ மாணவரணியின் சிறப்பு குழுவை தொடர்பு கொள்ளுங்கள்.

1. S.N. அஹமது இப்ராஹீம். B.Tech – 9841464521.

2. K. ஹஸன் B.E – 9940611315

e-mail : tntjedu@gmail.com

 

IIT-JEE 2010 தேர்வை பற்றிய முழு விபரம்

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி :

(ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்)

டிசம்பர் – 19 (19/12/09)

இன்ஷா அல்லாஹ் தேர்வு நடைபெறும் தேதி

ஏப்ரல் – 11 (11/04/10)

இரண்டு தேர்வுகள் (காலை மற்றும் மாலை)

இன்ஷா அல்லாஹ் தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி

மே – 26 (26/05/10)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Chairmen, JEE, IIT Madras, Chennai – 600036

Phone : 044-22578220

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்:

இந்தியன் வங்கி மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள Help line சென்டர்கள் விண்ணப்ப படிவத்தை பற்றி அறிந்து கொள்ள, சந்தேகங்களுக்கு தெளிவு பெற ஐஐடி – மெட்ராசின் ஹெல்ப் லைன் எண் (Help line Number)

044-2250 4500 (காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை)

விண்ணப்பத்தின் விலை:

Rs.1,000,

(ஆன்லைனில் சமர்பிக்கும் விண்ணப்பம் ரூ. 900)

வயது வரம்பு

அக்டோபர் 1, 1985 ஆம் ஆண்டிற்க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்

தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :a) +2-

வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள், b) +2 வொகேஷனல் (vocational) குரூப் படிக்கும் மாணவர்கள்.

c) 3 ஆண்டு டிப்ளமோ படித்த மாணவர்கள்

குறைந்தபட்ச மதிப்பெண்

+2-வில் குறைந்த்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

60 − = 54

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb