Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கண்ணாய் கல்விகற்றால் கடமைகள் சுலபமாகும்!

Posted on November 1, 2009 by admin

கவிஞர் இக்பால் ராஜா

 

கல்வியைக் கவச மாக்க

காலமே உகந்த தம்மா!

 

இல்லையேல் காலா காலம்

இழந்தவோர் இகழ்ச்சிக் காக

 

சொல்லால் தூற்று வார்கள் !

சோர்ந்துநீ முடங்கி டாமல்

 

வல்லோன் அருளை யெண்ணி

வாய்ப்பினை உணர்க தோழி !

 

பெண்ணெனப் பிறந்து விட்டாய் !

பெற்றோர் சொல்பேணி வாழ்ந்து

 

கண்ணெனக் கல்விக் கற்றால்

கடமைகள் சுலப மாகும் !

 

அன்பாய் உயர்ந்து வாழ

அறிவுதான் கை கொடுக்கும் !

 

பண்பாய் பழகி வாழ்ந்தால்

பாரமே இல்லை தோழி !

 

நாட்டை நீ நினைத்துப் பார்த்தால்

நம்போன்ற பெண்கள் தானே

 

சுட்டியாய் இருந்தப் போதே

சுறுசுறுப் பாய்கற் றார்கள்

 

வீட்டின்நற் பெருமைக் கெல்லாம்

விடியலே நாம்தான் தோழி !

 

போட்டிகள் எதுவென் றாலும்

பெண்களும் சமமாய் நிற்போம் !

 

கணவனை மிஞ்சும் எண்ணம்

கனவிலும் உனக்கு வேண்டாம் !

 

உணர்விலே தெளிவு வேண்டும் !

உடையிலே ஒழுங்கு வேண்டும் !

 

குணத்திலே தங்க மாக

குடும்பமே குறிக்கோ ளாக

 

மனதிலே வலிமை யோடு

மரபைநீ பேணி வாழ்வாய் !

 

குழந்தைகள் பெற்றெ டுத்து

குணத்தையும் பண்ப டுத்தி !

 

பழமையை மறந்தி டாமல்

பகைமையை நினைத்தி டாமல்

 

தளர்ந்திடும் நிலைஇல் லாமல்

தகுவழி நடந்து காட்டு !

 

கலங்கரை விளக்காய் நாளை

கல்வியால் உயர்ந்து நிற்பாய் !

 

உறவினை உரிமை யோடு

உறவாடி ஊக்கு விப்பாய் !

 

திறம்பட வளர்வ தற்கு

தீன்நெறி பேணி வாழ்வாய் !

 

முறையுடன் வாழ்ந்துகாட்டி

முன்னேற வாராய் தோழி !

 

இறையவன் அருளைநாடி

இறைஞ்சுவோம் வாராய் தோழி !

 

(அய்யம்பேட்டை நேரு நகர் அல்மத்ரஸத்துல் காதிரிய்யா புதிய கட்டிட்த் திறப்பு விழா சிறப்பு மலரிலிருந்து)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

98 − 96 =

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb