Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

எண்ணத்தை விசாலமாக்கு

Posted on October 23, 2009 by admin

ஆலங்குடி நூ. அப்துல் ஹாதி பாகவி  

எனக்குத் தெரிந்த ஆலிம்-எழுத்தாளர்கள் சிலர் தம் எழுதுகோலை மூடிவைத்துவிட்டு ஆன்மிகப் பாதையில் சென்றுவிட்டனர். அவர்களைத் தட்டி எழுப்பிச் சமுதாய மக்கள் பயன்பெறத்தக்க வகையில் அவர்கள் தம் ஆக்கங்களைத் தொடர்ந்து எழுத வேண்டும் எனத் தூண்டுவதற்கே இக்கவிதை.

ஆன்மிகமும்-இஸ்லாமும்

பிரிக்க முடியாத

இரட்டை வித்துக்கள்தாம்.

ஆனால்-நீயோ

ஆன்மிகம் மட்டுமே போதும்-என

ஆழ்மனதில் நினைத்துக்கொண்டு

அல்லாஹ்வை நினைவுகூர்வதில்

அனுதினமும் ஈடுபட்டால்

உன் கல்வியால் இச்சமுதாயத்துக்கு

என்ன பயன்?



 

தஸ்பீஹ் மணிகளை உருட்டுவதால்

நன்மையைப் பெற்றுக்கொள்வது

நீ மட்டும்தான்-ஆனால்

உன்னால் இச்சமுதாயத்துக்குக்

கிடைக்க வேண்டிய

எண்ணற்ற பயன்கள்

முடங்கிவிட்டனவே!

“மக்களுள் சிறந்தவர்

மக்களுக்கு மிகப்பயனுள்ளவரே”-என

நபிகளின் நாயகர்

நவின்றுள்ளதை-நீ

அறியாதவனில்லையே!

 

பரந்த புவியினைப்போல்-உன்

எண்ணத்தை விசாலமாக்கு.

உயர்ந்த விண்ணைப்போல்-உன்

சிந்தனையை உயர்வாக்கு-உன்

எண்ணத்திற்கேற்பவே- நீ

இறைவனைக் காண்பாய்.

உன் உள்ளத்திற்குள்

புதைந்து கிடக்கின்ற

எண்ணங்களையும் கருத்துகளையும்

வண்ணங்களாக்கு.

மனித மனங்களில்-அவற்றைப்

படிமங்களாக்கு.

எழுந்திரு!

 

தஸ்பீஹ் உருட்டியதுபோதும்.

முஸ்லிம்கள் நலன்களுக்காக-உன்

பேனாமுனை பேசட்டும்.

அதுவே எதிரிகளைத்

துளைக்கின்ற

கூராயுதமாகட்டும்!

உன்

ஆக்கங்களை வாசிக்க

எத்தனையோபேர்-பெரும்

ஏக்கங்களோடு

எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

எழு! எழுது!

 

நாளைய உலகின்

சரித்திர ஏட்டில்

உன் பெயரைப் பதிவுசெய்!

நீ மரணித்த பிறகும்

உன் வினைச்சுவடியில்

நன்மைகள் வந்துசேர

இப்போதே நீ-அதற்கான

விதையைத் தூவு!

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

57 − 53 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb