Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தாய்ப்பாசம்

Posted on October 18, 2009 by admin

 

ஆயிரம் கைகள்

சேர்ந்து செய்த

மெத்தையில்

படுத்திருக்கிறேன்…

உன் இருகையில்

மட்டும்தான்

தூங்கி இருக்கிறேன்.

 

அம்மா உனக்கு

அவ்வளவு பாரமாய்

இருந்தேன் என்றா..?

பால் கொடுத்து

என்னை வளர்த்தாய்….

நீ

தூக்கவே

முடியாதளவுக்கு.

 

வெற்றி பெற்றால்

தேடி வந்து வாழ்த்த

ஆயிரம் உறவுகள்…

தோற்றுப்போனால்

தேடி வந்து அணைக்க

உன்னைத் தவிர யார்

எனக்கு.

 

ஆயிரம் முறை

தலை சீவிய

சந்தோசம்…

நீ

ஒரே ஒரு தடவை

தலை கோதிவிடும்

போது.

 

எல்லாம் சேலைதான்

எனினும்…

நீ

கட்டிய சேலையில்தான்

என் நிம்மதியான தூக்கம்

அவிழ்ந்து கிடக்கிறது.

 

என்னை நடக்க வைத்துப்

பார்க்க வேண்டும்

என்ற ஆசையை விட…

நான் விழுந்து விடக்கூடாது

என்ற கவனத்தில்தான் இருந்தது

உன் தாய்ப்பாசம்.

 

 

மழையில் நனைந்துகொண்டே

வீட்டுக்கு வந்தேன்.

‘குடை எடுத்துட்டுப்

போக வேண்டியது தானே’

என்றான் அண்ணன்

 

‘எங்கேயாச்சும்

ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே’

என்றாள் அக்கா

 

‘சளி பிடுச்சுக்கிட்டு

செலவு வைக்கப்போற பாரு’

என்றார் அப்பா

 

தன் முந்தானையால்

என் தலையை

துவட்டிக்கொண்டே

திட்டினாள் அம்மா

என்னையல்ல:

மழையை!”

 

”Jazaakallaahu khairan”

MAIS,  Abdur Rahman

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 + = 13

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb