Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வரதட்சணை வாங்காகூடாது-பொட்டல்புதூர் ஷாஃபி ஜமாத் முடிவு!

Posted on August 5, 2009 by admin

ஆழ்வார்குறிச்சி: திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் நகையோ, பணமோ வரதட்சணையாக வாங்குவது இல்லை என்று பொட்டல்புதூர் ஷாஃபி ஜமாத்தில் முடிவு செய்யப்பட்டது.

அனைத்து மதத்திலும் திருமணத்தின் போது பெண் வீட்டார்கள் மாப்பிள்ளை வீட்டாருக்கு பெரும் தொகையையும், தங்கநகைகளையும் வரதட்சணையாக கொடுத்து திருமணம் முடித்து கொடுக்கிறார்கள். சமீப காலமாக அதிக வரதட்சணை பெறுவதை மாப்பிள்ளை வீட்டார்கள் கவுரவம் என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

இதனால் ஏழை கன்னிப் பெண்கள் தங்களுக்கு நினைத்தபடி திருமணம் நடக்குமா? என்று ஒரு தவிப்புடன் காத்திருக்கும் காலம் இது. இதற்கிடையே தங்கத்தின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டதால் தங்களது மகள்களின் திருமண விழாவை நடத்துவதில் பெற்றோர்கள் அதிக சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பொட்டல்புதூர் ஷாஃபி பள்ளி ஜமாத்தினர் திருமணத்துக்கு வரதட்சணை வாங்குவது இல்லை என்று முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

பொட்டல்புதூர் ஷாபி பள்ளி ஜமாத் சார்பாக `வரதட்சணை ஒழிப்பு` சம்பந்தமான 2 நாள் கருத்தரங்கு பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் திரளான இளைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் வரதட்சணையால் பெண் வீட்டார்படும் துயரங்கள் குறித்து விளக்கி பேசினர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

திருமணத்தின் போது மணமகன், மணமகளுக்கு கொடுக்கும் நன்கொடைகளை (மகர்) கொடுத்தே திருமணம் செய்ய வேண்டும். திருமணத்திற்கு உள்ளூர் அல்லது வெளியூரை சேர்ந்த மாப்பிள்ளை மற்றும் அவரது வீட்டார்கள் வரதட்சணையாக பெண் வீட்டாரை நிர்ப்பந்தப்படுத்தி பணமோ, நகையோ, பொருட்களையோ பெற்றுக் கொள்ள மாட்டோம். இதற்கான உறுதி மொழி பத்திரத்தில் கையொப்பம் வாங்கிய பின்னரே திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்.

வெளியூர் ஜமாத் பெண்ணை திருமணம் செய்வதாக இருந்தாலும் மேற்படி உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பம் வாங்கிய பின்னரே மணமகனுக்கு திருமணத்திற்கான தடை இல்லா சான்று வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விளக்க கூட்டம் மறுநாள் நடந்தது. கூட்டத்துக்கு ஜமாத் தலைவர் ஹாஜி முகம்மது அலி தலைமை தாங்கினார். ஷாஃபி பள்ளி வாசல் பேஷ் இமாம் முகம்மது முஸ்தபா தீர்மானங்களை பாராட்டி பேசினார். மேலப்பாளையம் மவுலவி ஹாஜா உசேன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் அனைத்து மதம், சமுதாயத்தை சேர்ந்தவர்களும் வரதட்சணை வாங்காமல் திருமணம் நடத்த வேண்டும் என்று எடுத்துரைக்க முடிவு முடிவெடுக்கப்பட்டது.

மற்ற ஊரார்களும் இதை பின்பற்றலாமே!

 

Source: தினத்தந்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb