அபூஸாலிஹ் தக்வான் அஸ்ஸம்மான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது: ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒருவர் தமக்குத் தேவையானது போக மீதத்தை) தன்னிறைவான நிலையில் செய்யும் தர்மமே சிறந்த தர்மமாகும். மேலேயுள்ள (கொடுக்கும்) கைதான். தாழ்ந்துள்ள (வாங்கும்) கையை விடச் சிறந்ததாகும். உன் வீட்டாரிடமிருந்தே (உன் தர்மத்தை) நீ தொடங்கு! என்று சொன்னார்கள். என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிவிட்டு (கணவாப்டம்) மனைவி எனக்கு உணவளி, அல்லது என்னை மண விலக்குச் செய்துவிடு எள்று கூறுகிறாள். அடிமை (தன் எசமானிடம்) எனக்கு உணவளி., என்னிடம் நீ வேலை வாங்கிக் கொள்! என்று கூறுகின்றான். மகன் (தன் தந்தையிடம்) எனக்கு உணவளியுங்கள் (உங்களை விட்டால் வேறு) யார்தான் எனக்குப் பொறுப்பு என்று கூறுகின்றான். எனக் கூறினார்கள். மக்கள் அபூஹுரைரா (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களே! இதையுமா நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து செவியுற்றீங்கள்? என்று கேட்டனர். அதற்கு அவர்கள் இல்லை, இது அபூஹுரைராவின் (எனது) கூற்றாகும் என்று கூறினார்கள்.”
நூல்: ஸஹீஹுல் புகாரி
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ”ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம்/ அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்தை)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே/ நபித் தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களை நோக்கி/ (அவரை தண்டிக்க வேண்டாம்.) விட்டு விடுஙகள். ஏனெனில்/ ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாஙகி அவரிடமே கொடுத்து விடுஙகள் என்று கூறினார்கள். நபித் தோழர்கள்/ அவருக்குத் தர வேண்டியது ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம் தான் எஙகளிடம் இருக்கின்றது என்று கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்/ அதையே வாஙகி அவருக்குக் கொடுத்து விடுஙகள். ஏனெனில்/ உஙகளில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உஙகளில் சிறந்தவர் என்று கூறினார்கள்.
நூல்: ஸஹீஹுல் புகாரி
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ”அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உஙகளால் அநீதிக்கு ஆளாவனவர் இறைவனிடம் உஙகள் அநீதியைக் குறித்து முறையிட்டு உஙகளுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுஙகள். ஏனெனில்/ அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள்.
நூல்: ஸஹீஹுல் புகாரி
எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாஙகுகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாஙகுகின்றானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல்: ஸஹீஹுல் புகாரி
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாவது: ”ஒரு பெண் தன் கணவனின் சம்பாத்தியத்திலிருந்து அவனது உத்தரவின்றி (அறவழியில்) செலவிட்டால் அதன் பிரதிபலனில் பாதி அவனுக்கும் கிடைக்கும்.” இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: ஸஹீஹுல் புகாரி