Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முடிச்சு அவிழ்கின்றது…

Posted on July 13, 2009 by admin

நினைவில் நின்றவை…

இறைவன் எங்கென்று என் குருவிடம் – கேட்டேன்

இதயத்துள் புகுந்து பாரென்று – சொன்னான்

 

உலகத்தை இறைவன் படைத்ததேன் – என்றேன்

அறியும் பொருட்டு தனைதான் – என்றான்

 

ஆதம் ஏன் குற்றம் செய்தார் – என்றேன்

இறைவன் அருளுக்கது வழிகோல – என்றான்

 

சாத்தானை இறைவன் படைத்ததேன் – என்றேன்

சாரற்ற கனிகளைப் பிரித்திட – என்றான்

 

தலைவிதி என்பது என்னவென்று – கேட்டேன்

தலை கனத்தாடுவோர்க்கு எச்சரிக்கை – என்றான்

 

வாழ்க்கை என்பது என்னவென்று – கேட்டேன்

வாண வேடிக்கை சில நொடி – என்றான்

 

மரணம் என்பது என்னவென்று – கேட்டேன்

முரணான செயலுக்கு முடிவுரை – என்றான்

 

அறிவு என்பதை விளக்குங்கள் – என்றேன்

அறியாமல் இருப்பதே முழு அறிவு – என்றான்

 

தெளிவு என்பது எப்போது – என்றேன்

தன்னையே அறிந்தபின் வரும் அது – என்றான்

 

இருவிழி பார்வையோ ஒன்று ஏன் – என்றேன்

இருப்பது யாவுமே ஒன்றெனச் – சொன்னான்

 

சோதனை என்பது என்னவென்று – கேட்டேன்

வேதனை அடங்கிய இறை நெருக்கம் – என்றான்

 

தண்டனை என்பது என்னவென்று – கேட்டேன்

கண்டித்து செயல்களை வழிமாற்ற – என்றான்

 

நல்லோர்க்கே நோய்நொடி அதிகமேன் – என்றேன்

நாவினில் அவன் பெயர் நிலைத்திருக்க – என்றான்

 

சான்றோர்க்கு பொருட்செல்வம் ஏனில்லை – என்றேன்

சீரழிக்கும் கருவிகள் நமக்கேன் – என்றான்

 

“கலிமா”வின் உட்பொருள் என்னவென்று – கேட்டேன்

இல்லாமல் உணர்தல் இருப்பதை – என்றான்

 

மெளனத்தில் மூழ்குவது எவ்வாறு – என்றேன்

கண்ணுடன் எண்ணமும் மூடிவிடு – என்றான்

 

பாவங்களில் மட்டுமேன் வசீகரம் – என்றேன்

பார்வைகள் பகட்டினில் பதிவதால் – என்றான்

 

இறைஞானம் கிட்டுவதில் சிரமமேன் – என்றேன்

விரைவாய்க் கிடைப்பது விரயமாகும் – என்றான்

 

இறைகிருபை இருந்தும் அச்சமேன் – என்றேன்

உயிருடன் கலந்து உடலிருப்பதால் – என்றான்

 

சொர்க்கம் நமக்குக் கிடைக்குமா – என்றேன்

சொர்க்க அதிபதியைப் பிடிக்க முயல் – என்றான்

 

தொழுகையின் அர்த்தம் என்னவென்று – கேட்டேன்

வாழ்வதற்குப் பயிற்சி தரணியில் – என்றான்

 

“ஜகாத்” ஏன் தரவேண்டும் – என்றேன்

ஜகத்தில் வறுமை இல்லாமலாக்க – என்றான்

 

நொன்பின் மாண்பை விளக்குங்கள் – என்றேன்

நாயனை நெருங்கும் நல்லருள் – என்றான்

 

“ஹஜ்” ஜின் அவசியம் சொல்லுங்கள் – என்றேன்

அனைவரும் ஒன்றென உணர்த்த – என்றான்

 

“கிப்லா”வை நோக்கியே தொழுவதேன் – என்றேன்

சக்கரம் சுழல ஒர் அச்சாணி – என்றான்

 

இறுதிநாள் தீர்ப்பின் பொருளென்ன – என்றேன்

தேர்வின் முடிவைத் தெரிவித்தல் – என்றான்

 

ஒன்றுக்கு ஒன்றேன் முரண்பாடு – என்றேன்

ஒவ்வொன்றிலும் ஒன்று இருப்பதால் – என்றான்

 

அலைமோதும் மனதைப் பெற்றதேன் – என்றேன்

வலைவீசும் உலகை விலை பேச – என்றான்

 

புலனைக் கொண்டு நாம் அறிவதென்ன – என்றேன்

புலன் கடந்து ஒன்றிருப்பதை உணர்த்திட – என்றான்

“Jazaakallaahu Khairan” திராவிட முஸ்லிம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb