Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

3 ஆண்டு பி.எல். (ஹானர்ஸ்) படிப்பில் பி.ஏ., பி.காம் பட்டதாரிகளை சேர்க்கத் திட்டம்

Posted on June 15, 2009 by admin

மூன்றாண்டு பி.எல். (ஹானர்ஸ்) படிப்பில் பி.ஏ., பி.காம். பட்டம் பெற்றவர்களையும் சேர்க்க சட்டப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. இங்கு 5 ஆண்டு, 3 ஆண்டு சட்டப் படிப்புகள் உள்ளன. இது தவிர, சென்னையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு பி.எல். (ஹானர்ஸ்) படிப்பும் உள்ளது.

5 ஆண்டு சட்டப் படிப்புகளில் மொத்தம் 1,050 இடங்களும், ஹானர்ஸ் படிப்பில் 80 இடங்களும் உள்ளன. இவற்றில் 2009-10-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 4 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் அந்தந்த சட்டக் கல்லூரிகளில் கடந்த 1-ம் தேதியில் இருந்து வழங்கப்பட்டு வருகின்றன.

விண்ணப்பங்களைப் பெறவும், அவற்றைப் பூர்த்தி செய்து அளிக்கவும் ஜூன் 15 கடைசி நாளாக இருந்தது.

இந்த நிலையில் கடைசி தேதியை ஜூன் 25 வரை நீட்டித்து சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 

இந்த ஆண்டு முதல் 3 ஆண்டு சட்டப் படிப்பில் சேர வயது வரம்பு நிர்ணயிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக சட்டப் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியது:

2009-10-ம் கல்வி ஆண்டு முதல் 3 ஆண்டு சட்டப் படிப்பில் சேருவதற்கு அதிகபட்ச தகுதி வயது எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 35-ம், மற்ற பிரிவினருக்கு 30-ம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

சட்டப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு பி.எல். (ஹானர்ஸ்) படிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த படிப்புக்கு ரூ.50 ஆயிரம் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் பாதிக்கு மேல் சலுகை அளிக்கப்படுகிறது.

3 ஆண்டு பி.எல். (ஹானர்ஸ்) படிப்பில் கடந்த ஆண்டு அறிவியல் (பி.எஸ்சி.,), மருத்துவம், பொறியியல் பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர். அதனால் குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் சேர்ந்தனர்.

எனவே, இந்தப் படிப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த சட்டப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளில் சேருவதற்கும், சட்டப் பல்கலைக்கழகத்தில் ஹானர்ஸ் படிப்புகளில் சேருவதற்குமான விண்ணப்ப விநியோகம் பற்றிய அறிவிப்பு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளது.

5 ஆண்டு பி.எல்., (ஹானர்ஸ்) படிப்பில் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டின் கீழ் சேருவதற்கான விண்ணப்பம் ஜூலை 3-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது’ என்றார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb