Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சி.ஏ.க்கு இணையான வேலை வாய்ப்புள்ள புள்ளியியல் படிப்பு!

Posted on June 12, 2009 by admin

வேலை வாய்ப்பு அதிகம் உள்ளதும், சி.ஏ. படிப்புக்கு இணையானதுமான புள்ளியியல் துறை படிப்பு பற்றி தமிழக மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.

பொதுவாக பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளில் சேரவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த படிப்புகளைத் தவிர, உயரிய அந்தஸ்து, வருமானம் தரும் மற்ற படிப்புகளும் உள்ளன.

உதாரணமாக, புள்ளியியல் துறை படிப்பு. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த படிப்பு வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 முடித்தவர்கள் இதில் சேரலாம்.

இந்த துறை குறித்து சென்னை பல்கலைக்கழக புள்ளியியல் துறை பேராசிரியர் ஸ்ரீனிவாசன் கூறியது:

புள்ளியியலில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இன்சூரன்ஸ், மருந்து கம்பெனிகள், சோப்பு, குளிர்சாதனப் பெட்டி போன்ற பொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் நிறுவனங்கள் போன்றவற்றில் மார்க்கெட்டிங் பிரிவில் சேரலாம்.

மேற்படிப்பு அதாவது எம்.எஸ்சி (ஆக்சூரிஸ்), எம்.எஸ்சி (புள்ளியியல்) படித்தவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

ஆக்சூரிஸ் படிப்பு சார்ட்டர்டு அக்கவுண்டன்டுக்கு (சி.ஏ.) இணையாக கருதப்படுகிறது.

இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பாலிசிகளை வடிவமைக்கும் பணியை ஆக்சூரிஸ்கள் மேற்கொள்கின்றனர். அதாவது எந்த விதமான பாலிசியை கொண்டு வரலாம் என்பதை இவர்கள் தான் வடிவமைக்கின்றனர்.

ஆக்சூரிஸ் படிப்பு படிக்கும் போதே மும்பையில் உள்ள இஸ்டிடியூட் ஆப் ஆக்சூரிஸில் பதிவு செய்து, அதன் தேர்வை எழுத வேண்டும்.

இதில் வெற்றி பெற்றவர்கள், இந்த தேர்வு எழுதாத மற்ற ஆக்சூரிஸ்களைவிட மூன்று மடங்கு சம்பளம் கூடுதலாக பெறுகின்றனர்.

அதே போன்று இந்த துறை தொடர்பான பயோ ஸ்டேஸ்டிக்ஸ் படித்தவர்களுக்கு மருந்து தயாரிப்பு கம்பெனி, அவற்றைச் சோதனை செய்யும் கம்பெனி போன்றவற்றில் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

முதுநிலை புள்ளியியல் படிப்பு சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ளது.

இந்த படிப்பில் டெல்லி, மும்பை, குஜராத் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் சேர்கின்றனர்.

தமிழக மாணவர்களிடம் இப்படிப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லை.

இந்த ஆண்டு முதல் பி.எஸ்சி.,யில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்தவர்கள் முதுநிலை படிப்பில் சேரலாம்.

கடந்த ஆண்டு வரை பி.எஸ்சி கணிதம், புள்ளியியல் படிப்பு படித்தவர்கள் மட்டுமே இதில் சேர்க்கப்பட்டனர்.

இந்த படிப்பை முடித்தவர்கள் கம்பெனிகளில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது. ஆனால் மாணவர்கள் குறைவாக உள்ளனர் என்றார்.

”Jazaakallaahu khairan” Khaleel Baqavi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

49 − 48 =

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb