Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தாடி வைத்திருப்பதால் ஆண்களுக்குத் தொடர் நன்மையா?

Posted on May 29, 2009 by admin

ஆண்கள் தாடி வைத்திருப்பது என்பது 24 மணி நேரமும் ஒரு சுன்னத்தை ஹயாத் ஆக வைத்திருப்பதால் அதன் நன்மை ஒவ்வொரு நொடியும் பொழிந்து கொண்டிருக்கும் என்பது உண்மையா? எனில் பெண்களுக்கு அதுபோன்ற தொடர் நன்மை பெற்றுத் தரும் செயல் எது?

தெளிவு: ஆண்கள் தாடி வைத்திருப்பதால் 24 மணி நேரமும் நன்மைகள் பொழிந்து கொண்டிருக்கும் என்ற அறிவிப்பு எதையும் நாம் அறியவில்லை. ஆண்கள் தாடி வைப்பது சுன்னத் என்றாலும் தாடி மட்டும் வளர்த்துக்கொண்டால் போதாது. முஸ்லிமல்லாத ஆண்களும் தாடி வைத்திருக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கும் ஒவ்வொரு நொடியும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும் என்று கருதுவதற்கில்லை!

ஆண்கள் தாடி வைத்துக்கொண்டாலும் மற்ற சுன்னத்துகளைப் பேணி – நபிவழி நடக்கும் போதுதான் முஸ்லிம் என்று பரிணாமம் பெறுகின்றனர்.

”மீசையைக் குறைத்து தாடியை (வளர) விடுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஒரு முஸ்லிம் புறத்தோற்றத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அளவுகோலாகத் தாடியைக் குறிப்பிடுகிறது இஸ்லாம்.

அதேவேளை தாடி வைக்கும் நோக்கத்தைப் பொறுத்தும் நன்மையின் அளவு வேறுபடும். புற அழகிற்காகவோ அல்லது பிறர் தம்மை மதிப்புடன் நோக்கவேண்டும் என்பதற்காகவோ வைக்கப்படும் தாடியினால் கிடைக்கும் நன்மை நபியவர்களின் வழிமுறையை நிலைநிறுத்துவதற்காக வைக்கப்படும் தாடியினால் கிடைக்கும் நன்மைக்கு முன் மிகச் சிறிய அளவினதாகும்.

”செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன; ஒவ்வொரு மனிதரும் அவர் எண்ணியதையே அடைந்துகொள்வார்…..” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: புகாரி, 6689)

பெண்களுக்கு இஸ்லாம் வழங்கும் சிறப்புத் தகுதிகளை விரிவஞ்சி மிகச் சுருக்கமாகக் காண்போமெனில், குடும்பத்திற்காக ஆண்கள் என்னதான் மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்தாலும் பிள்ளைகளுக்கு மிகவும் நெருக்கமானவர் யார்? என்று கேட்டால் தாய் என்று – திரும்பத் திரும்ப தாய் என்றே இஸ்லாம் கை காட்டுகிறது. இதுவே பெண்மைக்கும், தாய்மைக்கும் இஸ்லாம் வழங்கும் மிகப்பெரும் நன்மைகளல்லவா!

”முஸ்லிமான ஆண்களும் பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும் பெண்களும் உண்மை பேசும் ஆண்களும் பெண்களும் பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும் பெண்களும் அடக்கமாக நடக்கும் ஆண்களும் பெண்களும் தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், தமது கற்பைக் காத்துக்கொள்ளும் ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும் பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயாரித்து வைத்துள்ளான்” (அல்குர்ஆன் 033:035)

முஸ்லிமான ஆண்கள், பெண்களுக்கான நற்கூலிகளில் எக்குறையும் ஏற்படுத்தி விடமாட்டேன் என இறைவன் வாக்களித்திருக்கிறான்.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 33 = 37

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb