Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கவனமாகயிரு!

Posted on May 20, 2009 by admin

கிளியனூர் இஸ்மத்

இளைஞனே…

வாழ்க்கையை லட்சியத்தோடு வாழ்ந்து

வெற்றி பெறவேண்டிய நீ

சிலரது வார்தைகளில்

உன்னை இழந்து விடாதே

கவனமாகயிரு…

 

மருத்துவனாக

கணினியாளனாக

கணிதமேதையாக

விஞ்ஞானியாக

பொறியாளனாக

இதில் ஏதோயொன்றாய்

நீ சமைந்திடவே

உன்னைசமைத்தவர்களின்

கனவு

அதை கலைப்பவர்களின்

கைகளில் சிக்கிவிடாதே

கவனமாகயிரு…

பள்ளிப் பாடநூல்களை

சுமக்கவேண்டிய உன்கரத்தில்

கலவரச்செய்திகளையும்

மதவாத பிரச்சனைகளையும்

சுமந்து வரும்

பத்திரிக்கைகள்

திணிக்கப்படுதை அனுமதிக்காதே

கவனமாகயிரு…

கல்லூரி வாயில்களில் சில

புல்லுருவிகளின் கோலங்கள்

உன் தோழமைக் கண்ணோட்டத்திற்கு

அவர்கள் உனக்கு அணியவிக்கப்படுவது

மதவாத கண்ணாடி

கண்ணிலியாய் நீ

உன் வகுப்புத் தோழர்களுடன்

வகுப்புவாதம் செய்வதற்கு

கவனமாகயிரு…

 

சமுதாயம் என்ற சாயத்தில்

உன்னை நிறமேற்றி

உனக்கு வர்ணத்தை கொடுப்பதற்கு

சிலர் தருணத்தை தாரைவார்க்க

தயாராகி இருக்கிறார்கள்

கவனமாகயிரு…

எங்கோ நிகழக்கூடிய

சில சம்பவங்கள்

படமெடுக்கப்பட்டு

உன் சிந்தனை அரங்கில்

திரையிடுவதற்கு

திட்டங்கள் தயாராகி

வினியோகிக்கப்படுகிறது

கவனமாகயிரு…

 

தடுக்கப்படுகிறோம்

ஒடுக்கப்படுகிறோம்

நசுக்கப்படுகிறோம்

என்ற தலைப்புகளில்

மூலைச்சலவைகள் செய்து

முணைப்போடு

முயற்ச்சிப்பார்கள்

மருள்கொள்ளாதே

கவனமாகயிரு…

வேதத்தை காண்பித்து

உனக்கு ஞானம்போதிக்கின்றோம்

கலங்கரை விளக்காய்

நேர் வழிகாட்டுகின்றோம் என்று

மெய்ஞ்ஞானியாகவேண்டிய

உன்னை

அஞ்ஞானியாக்கி விடுவார்கள்

கவனமாகயிரு…

 

மனிதநேயத்தை

நீ விதையுண்டுருக்கிறாய்

அது துளிர்விடுவதை துண்டித்து

தீவிரவாதம் பேசி

சுதந்திரமாய் வாழவேண்டிய

உன்னை

நான்கு சுவற்றுக்குள்

சிறைவைத்து விடுவார்கள்

கவனமாகயிரு…

நீ என்பது

இன்னொருவரின்

ஆளுமையல்ல

நீ சுயமிக்கவன் சூத்திரம் நிறைந்தவன்

உன் பலம் தெரியாமல்

உன்னை பலவீனர்களிடம்

ஒப்படைத்து விடாதே

கவனமாயிரு...!

 

www.kiliyanur-ismath.blogspot.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 + = 16

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb