Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வரலாற்றுப் பொன்னேடு – 3

Posted on March 19, 2009 by admin

இப்னுன்நூர்

“பூமியிலுள்ள யாவற்றையும் செலவு செய்தாலும் அவர்களின் சிறப்பை நீ பெறவே முடியாது“

இப்படி ஒரு அதிர்ச்சி பதிலை அந்த நாயகத் தோழர் எதிர்ப்பார்க்கவே இல்லை. அண்ணலார் صلى الله عليه وسلم அவர்களின் இப்பதிலை கேட்டு அசந்தே போனார் அப்துல்லாஹ் பின் ரவாஹா (رَضِيَ اللَّهُ عَنْهُ) என்ற ஸஹாபி.

அன்று வெள்ளிக்கிழமை. கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் ஒரு போருக்காக சிறு படையை தயார் செய்து, அதிகாலையே அனுப்பி வைத்தார்கள். அப்படையில் இப்னு ரவாஹா (رَضِيَ اللَّهُ عَنْهُ) அவர்களும் இணைக்கப் பட்டிருந்தார்கள். ஆனால் அவரோ தன்னை அப் படையில் இணைத்துக் கொண்டாலும் மனம் இணையவில்லை.

காரணம், அன்று

‘ஜும்ஆ‘வுடைய நாள். போருக்குச் செல்கிறோம், திரும்பி வருவதும், மீண்டும் கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அவர்களை சந்திப்பதும் நிச்சயமில்லாதது. எனவே இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்களுடன் இணைந்து ‘ஜும்ஆ‘வை நிறைவேற்றிவிட்டு மீண்டும் படையில் சென்று நம்மை இணைத்துக் கொள்வோமே என்ற உளப்பூர்வமான உண்மை ஆசையிலும், ஆர்வத்திலும் நினைத்தவாறே தன் எண்ணங்களை எதார்த்தமாக நிறைவேற்றி முடித்தார்.

ஆனால், தொழுகை முடிந்தது. கூட்டம் கலைந்தது. அப்போது இப்னு ரவாஹா (رَضِيَ اللَّهُ عَنْهُ) அவர்கள், கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் பார்வையில் பட்டுவிட்டார்கள். பெருமானார் صلى الله عليه وسلم அவர்கள் போருக்கு இன்னும் புறப்பட்டுச் செல்லாத காரணத்தை அவரிடம் கேட்டபோது தன் எதார்த்த எண்ணங்களை வெளியிட்டார்: “நான் உங்களோடு தொழுதுவிட்டு……..”

“அப்படியானால் நீர் பூமியிலுள்ள……..” என்ற மேற்கண்ட அதிர்ச்சி பதிலை அப்போதுதான் அண்ணலம்பெருமானார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

சரி, நாம் இதிலிருந்து பெற வேண்டிய படிப்பினை என்ன? கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் கட்டளைக்கு அப்படியே அடிபணிய வேண்டும் என்பது தானே!

அந்த ஸஹாபியின் எண்ணம் பெருமானார் صلى الله عليه وسلم அவர்களுடன் அந்த ‘ஜும்ஆ‘வை சேர்ந்து தொழுவோம் என்ற உயர்வான உணர்வை பிரதிபலித்தாலும், கட்டளைக்கு கட்டுப்படாததால் ஒரு சிறப்பை இழக்க நேரிட்டது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

84 − 82 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb