Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கேள்விக்குறியாகும் துபாய்!

Posted on March 18, 2009 by admin

எங்கும் மயான அமைதி… எல்லோர் முகத்திலும் ஒரு கலவரம்…

ஆட்டம் போட்ட எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள்…

“அந்த கம்பேனி போனி ஆயிடுச்சாமே….?“

“இந்த கம்பெனி இனி தாங்காதாமே…?“

“1000 கார்கள் ஏர்போட்டில் கிடக்கிறதாமே…”

“போன வாரம் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு வேலை இல்லையாமே…”

இப்படி வாய்க்கு வந்தபடி புரளி…

உண்மையில் துபாயில் இது நடக்கவில்லையா…? இதுவெல்லாம் பொய்யா ..? என்றால்

இல்லை என்று ஒரேயடியாக மறுக்க இயலவில்லை… வந்த புரளிகளின்

எண்ணிக்கையில் மாற்றம் உண்டே தவிர இவை அனைத்தும் மிக கசப்பான உண்மை…


 

சென்ற வாரம் நண்பனொருவன் அவன் மனைவியிடம் அவன் கம்பெனி நிலையை

வருத்தத்துடன் கூறி எப்போது வேலையை விட்டு தூக்குவாங்களோ தெரியலை என்ற

போது, அவன் மனைவியும் அவனுக்கு ஆறுதல் கூறும் விதமாக, “கவலைப்படாதீங்க,

நான், உங்களுக்காக நேந்துக்கிறேன்”… எனக்கூற இவனோ நக்கலாக,

“நேந்துக்கிறதா இருந்தா, துபாய்க்கு நேந்துக்கோ(வேண்டிக்கோ), உலகத்திற்கு

நேந்துக்கோ” என்று கலாய்த்த நிகழ்வு கூறி சிரித்து கொண்டிருந்தான்…

இன்று அவனுக்கு வேலை இல்லை…

இன்னொருவன் தன் மனைவி தனக்கு PASSPORT வந்த சந்தோஷத்தை அவனிடம் கூற

“உனக்கு PASSPORT வந்த நேரம் எனக்கு விசா கேன்சலாயிடும்” போல என்றுநக்கலாக கூற

, அப்புறம் ஒருவாரம் ரெண்டு பேருக்கும் இடையே – ஆணியே புடுங்க

வேண்டாம் என்கிற அளவிற்கு பிரச்சனை…

நான்கு மாதங்களுக்கு முன் நான்கைந்து வேலைகளை கையில் வைத்துக் கொண்டு எதை

தேர்ந்தெடுக்களாம் என்று குழம்பியவர்கள் இன்று வேலையில்லாமல்

வேதனைப்படும் அவல நிலை.

 

பீதியில் துபாய்…

உணவகங்களில் கூட்டமில்லை…கடைவீதிகளும், சாப்பிங் மால் களும் சற்றே

வெறிச்சோடிய நிலை…கடை நிலை ஊழியருக்குக்கூட தேடிவந்து தந்த கடன் அட்டை,

இன்று உயர் நிலையாருக்கும் எட்டாத நிலையில்…லோன்கள் வீடுதேடிவந்தது போக,

இன்று லோ, லோ என்று அழைந்தாலும் கிடைக்காத நிலை…

எதையும் திட்டமிட முடியா பீதியில் மக்கள்…, இன்னும் எத்தனை நாட்கள் இது தொடரும்…

தொடர்ந்தால் இங்கிருந்தோர் நிலை என்ன…?

பதினைந்து வயதில் பதினெட்டு வயதென்று பாஸ்போர்ட் எடுத்து வந்து துபாயில்

உழைக்க ஆரம்பித்து, அக்கா, தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து,

அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து, உற்றார் உறவினர் யாராயினும் தன்

சொந்தமென பல உதவிகள் செய்து, அம்மா ஆசைக்கு ஒரு வீடுகட்டி, தன் குடும்பம்

கௌரவமாக வாழ தன்னை அர்பணித்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான

மெழுகுதிரிகளின் நிலை என்ன?

 

கடன் உடன் வாங்கி ஊருக்கு பெட்டி கட்டி ஏர்போட்டில் சொந்தபந்தம் புடை சூழ

வரவேற்கப்பட்டு, அபிதாபியா, சார்ஜாவா என்று வெள்ளையும் சுளையுமாக, வருகிற

போகிறவனிடம் உதார் விட்டபடி ஊரில் வலம் வந்த நாட்கள் இனி வெறும் கனவாகி

விடுமோ…? வேலையிழந்து ஊர் சென்றால் நிலை என்ன…?

சொந்த மண்னை விட்டு பிரியும் போதெல்லாம் கண்ணில் நீர் கோர்த்து இதயம்ரணமாகுமே…

இப்போது சொந்த மண்ணே கதி என்று போக இதயம் ஏன் கனக்கிறது…?

மண்ணளவிற்கு கூட மதிப்பில்லாமல் ஊரில் திரிந்த உதவாக்கரைகளை பொன்னளவிற்கு

மதிக்க வைத்த புண்ணிய பூமி என்பதாலா…?

வேலை யில்லாதவன் என்று வெந்த புண் வேல் பாய்ச்சிய சமுதாயத்தின் முன் இவன்

விவரம் தெரிந்தவன் என்று விளங்க வைத்த விந்தை பூமி என்பதாலா..?

எதோ இணை பிரியாத பந்தம்… உறவு சொல்ல இயலாத ஊமையின் நிலை…

போய் வருகிறேன் துபாய் போய் வருகிறேன்… என்று கை காட்டி விட்டு கிளம்பமுடியுமா…

கார் லோன், பெர்சனல் லோன், கடன் அட்டை, இப்படி துபாயில்

சேர்த்த (!!??) சொத்திற்கு வழி என்ன…? விழி பிதுங்கிய நிலையில்

வேதனையுடன் நிற்போருக்கு வழிதான் என்ன?

 

1950 களில் – கற்காலத்தில் இருந்த துபாய், நொடிப்பொழுதில் “ULTRA MODERN”

நாகரீகத்திற்கு நிறம்மாறி

“BURJ DUBAI ” (புர்ஜ் என்றால் பெருமை)… உலகின் உயர்ந்த கட்டிடம்…!

“DUBAI MALL” உலகின் மிகப்பெரிய சாப்பிங் மால்…!

“BURJ AL ARAB” உலகின் முதல் 7 நட்சத்திர விடுதி…!

” PALM ISLAND ” ( பனை மர வடிவத்தீவு) எட்டாவது உலக அதிசயம்…!

என்று உலக மக்களை ஆச்சரியக்குறியில், பார்க்க செய்த துபாய் இன்று…?

இங்குள்ளோரின் எதிர்காலமென்ன..?

இவர்கள் இன்னும் எத்தனை நாட்கள்

இங்கு..? என்ற கேள்விக்குறிக்கு தள்ளப்பட்டிருக்கிறது…

எது எப்படியோ வீட்டு வாடகை, நகைகடை கூட்டம், KFC மோகம்,

PIERRE CARDIN,TED LAPIDS 75% SALE , 10 க்கு பத்து அறையில் 10 பன்ணிரண்டு பேர், இவை

எவற்றிலும் ஒரு மாற்றமும் இல்லை… இருந்தாலும்…

எங்கும் மயான அமைதி… எல்லோர் முகத்திலும் ஒரு கலவரம்… ஆட்டம் போட்ட

எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள்…

நண்பன் சொன்னது போல், துபாய்க்கு நேந்துக்குங்க (வேண்டிக்குங்க)

இன்ஷா அல்லாஹ், விரைவில் மாற்றம் வரலாம்.

 

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb