Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நமது நட்சத்திரக் கூட்டத்தில் கோ…டி பூமிகள்!!!

Posted on February 18, 2009 by admin

அறிய முடியா ஆற்றல் : படைப்பின் அதிசயங்கள் - 2

நமது நட்சத்திரக் கூட்டத்தில் கோ…டி பூமிகள்!!!

சிகாகோ: நமது நட்சத்திரக் கூட்டத்தில் மட்டும் கோடிக்கணக்கான பூமிகள் இருக்க வேண்டும், அவற்றில் நம்மைப் போன்ற முதிர்ச்சி அடைந்த மனித இனம் இருப்பதற்கும் சாத்தியம் இருக்கிறது என்கிறார் ஆலன் பாஸ் என்ற அறிஞர்.

அமெரிக்காவில் உள்ள கார்நெகி அறிவியல் கழகத்தின் ஆலன் பாஸ் தர்க்க ரீதியாகவும் அறிவியல் பூர்வமாகவும் கிடைத்த சில கருதுகோள்களை வைத்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். அறிவியல் வளர்ச்சிக்கான அமெரிக்க சங்கத்தின் கூட்டத்தில் பேசுகையில் இத்தகவலை அவர் வெளியிட்டார்.

“மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்கிகளால்கூட நமது சூரிய குடும்பத்துக்கு அப்பால் 300-க்கும் மேற்பட்ட கிரகங்களைத்தான் பார்க்க முடிந்தது. இவற்றில் வெகு சிலவற்றில்தான் ஏதாவது ஒரு வகை உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியம் இருக்கிறது. பெரும்பாலானவை வாயுக்கள் நிரம்பிய கிரகங்கள்தான்.

 இந்த கிரகங்கள் தங்களுடைய தாய்கிரகமான நட்சத்திரங்களை மையமாக வைத்தே சுற்றி வருகின்றன. அந்த நட்சத்திரங்கள் இன்னமும் கொதிப்பு அடங்காத நெருப்புக்கோளங்கள். அந்த நட்சத்திரங்களுக்கு அருகில் செல்லும் கிரகங்களில் எந்தவகை உயிரினங்களும் இருப்பதற்குச் சாத்தியம் இல்லை.

ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட, சூரிய குடும்பத்தைச் சாராத கிரகங்களின் எண்ணிக்கை, அமைப்பு ஆகியவற்றை ஆராயும்போது ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நம்முடைய பூமியைப் போல குறைந்தது ஒரு துணை கிரகமாவது இருக்க வேண்டும். அப்படிப்பார்த்தால் இந்த பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான பூமிகள் இருக்க வேண்டும்.

இவையெல்லாம் உயிரினங்கள் வசிப்பதற்கு ஏற்றவையாக இருக்கும் என்பது மட்டும் அல்ல, இவற்றில் உயிரினங்கள் இப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பதற்கு நிறைய சாத்தியம் இருக்கிறது.

பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திர குடும்பத்தைச் சேர்ந்த இந்த வகை பிற பூமிகளில், 300 கோடி அல்லது 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னதாகவே நமது பூமியில் இருந்ததைப் போன்ற ஜீவராசிகள் -அதாவது பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகள் இருப்பதற்கு சாத்தியம் அதிகம்.

பூமியில் உள்ள மனிதர்களைப் போலவே அறிவு முதிர்ச்சி உள்ள மனித இனங்கள் பிற கிரகங்களில் எத்தனை இருக்கும் என்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சமீபத்திய கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் இருக்கும் என்ற பதில் அப்போது கிடைத்தது’ என்கிறார் ஆலன் பாஸ்.

 www.nidur.info 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb