Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நன்மை பயக்கும் நபிமொழி – 21

Posted on November 21, 2008 by admin

 

‘தன் பிள்ளை(களை)விட, பெற்றோர்களைவிட, மற்றுமுள்ள ஏனைய ஜனங்களைவிடவும் அவருக்கு நான் மிக விருப்பமுள்ளவராக ஆகும்வரை, உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகமாட்டார் ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கிறார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு,  நூல்: முஸ்லிம்)

 

மூன்று காரியங்கள் யாரிடம் இருக்கிறதோ அவர் அவைகளின் மூலமாக ஈமானின் இன்பத்தைப் பெற்றுவிடுகின்றார்.

1. அவ்விருவரல்லாத மற்றனைத்தையும்விட அல்லாஹ்வையும் அவனது தூதரும் அவருக்கு மிகப்பிரியமானவர்களாக இருக்க வேண்டும். 2.

அவர் மனிதரை நேசிப்பார் அந் நேசம் அல்லாஹ்வுக்காக அன்றி (மற்றெவருக்காகவும்) இருக்காது. 3. (குப்ர் எனும்) இறை நிராகரிப்பிலிருந்து அல்லாஹ் அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தபின் நரகத்துக்குள் போடப்படுவதை வெறுப்பதுபோன்று, மீண்டும் குப்ர் (இறை நிராகரிப்பு)க்குள் திரும்பச் செல்வதை அவர் வெறுக்கவேண்டும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

 

‘யார் அல்லாஹ்வை இரட்சகனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது (ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்களைத் தூதராகவும் பொருந்திக் கொண்டாரோ அவர், ஈமானின் சுவையை சுகித்தவராவார் ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூற செவியுற்றதாக, அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: முஸ்லிம்)

 

‘நான்கு விஷயங்கள் யாரிடம் இருந்ததோ அவர் கலப்படமற்ற நயவஞ்சகராகிவிட்டார். அவற்றில் ஏதாவது ஒன்று யாரிடம் இருக்கிறதோ, அவர் அதை விட்டு விடும்வரையிலும் நயவஞ்சகத்தில் ஒரு பகுதி அவரிடம் இருக்கும்.

‘அவர் பேசினால் பொய்யுரைப்பார். ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வார். வாக்கு கொடுத்தால் மாறி விடுவார். தர்க்கம் செய்தால் உண்மையை மறைக்க முற்பட்டுவிடுவார்.” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆயினும் நிச்சயமாக ஸ{ப்யானுடைய ஹதீஸில் அவைகளில் ஒரு குணம் அவரி(டத்தி)ல் இருப்பின் நயவஞ்சகத்தின் ஒரு குணமும் அவரிடத்தல் இருக்கும் என வந்துள்ளது. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

 

‘நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும். அவன் பேசினால் பொய் பேசுவான். அவன் வாக்களித்தால் அதற்கு மாற்றம் செய்வான். அமானிதம் கொடுக்கப்பட்டால் மோசடி செய்துவிடுவான்.” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

52 + = 60

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb