Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மும்பை கதவுகளில் தலை கீழாக தொங்கும் இந்திய முகம்

Posted on September 23, 2008 by admin

 

இந்து-முஸ்லீம் இரண்டுமே தனித்தனி அடையாளங்கள் தான்.

முஸ்லிம்களைச் சிறுபான்மையினர் என்று சொல்வது இன்றைய வளர்ந்து வரும் உலகமயமாதலில் அர்த்தமில்லாதது.

இந்தியாவில் எப்படி முஸ்லீம்களோ அதுபோலவே உலக அரங்கில் இந்துக்களும் என்பதும் உண்மைதானே!.

இந்தப் பிர்சசனைகள் குறித்து இந்தியச் சட்டம் என்ன சொல்கிறது?

 

” வீட்டுச் சொந்தக்காரருக்கும் வாங்குபவருக்குமான ஒப்பந்தம் இது.  தன் சொந்த வீட்டை யாருக்கு விற்க வேண்டும்,

யாருக்கு வாடகைக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை முழுக்க முழுக்க வீட்டுச் சொந்தக்காரரின்

உரிமை. எனவே இதில் இன்னாருக்கு வீட்டை வாடகைக்கோ/விற்கவோ மறுக்கிறார் என்பதும் அதற்கான காரணங்கள்

சட்டத்திற்குப் புறம்பாக இருப்பதையும் வைத்துக் கொண்டு எதுவும் செய்துவிடமுடியாது” என்கிறார், வழக்கறிஞர் முஸ்தாபா மோடிவாலா.

” வீட்டை ஒரு முஸ்லீமுக்கு விற்க வீட்டுச் சொந்தக்காரர் முடிவெடுத்தால் அதை மறுக்கும் அதிகாரம் அந்த கோ ஆப்ரெடிவ் ஹவுஸிங் சொஸைட்டிக்கு உண்டா என்றால் “கிடையாது” என்கிறார் வழக்கறிஞர் மகேந்திர கல்யாண்குமார்.

“அவர்களின் விற்பனை ஒப்பந்த்தைத்தை ஏற்காமல் மறுக்கும் அதிகாரம் சொஸைட்டிக்கு கிடையாது. அதுவும் மதம் காரணமாக

சொஸைட்டி மறுப்பது சட்டத்திற்குப் புறம்பான செயல். இம்மாதிரியான சுழலில் சொஸைட்டியை எதிர்த்து வழக்குப் போடலாம்.

1992 /93 க்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த மனநிலை வளர்ந்து இன்று மும்பையின் இந்திய முகத்தை அரித்து தின்று கொண்டிருக்கிறது.

குழந்தைகளுக்கு உடம்புக்கு முடியாமல் ஆகிவிட்டால் குழந்தையுடன் பள்ளிவாசல் அருகில் நின்று கொண்டிருக்கும் தாய்ப்மார்களை நான் பார்த்திருக்கிறேன். மும்பை மகாலடசுமி கோவிலுக்குப் போகும் எல்லோரும் அருகிலிருக்கும் தர்க்காவுக்கும் போய்வருவது தொடர்கதை.அதுவும் கல்வி நிலையங்கள், பணியிடங்களில் எவ்விதமான வேறுபாடுகளுமின்றி வாழ்ந்து கொண்டிருந்த இடம் தான் மும்பை. குண்டு வெடிப்புகள், தீவிரவாதங்கள் என்று மும்பை இரத்தம் சிந்தியதும் அதற்கு எந்த வகையிலும் குறைவின்றி குஜராத்தில் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டதும் நாம் வாழும் காலத்தில் நிகழ்ந்திருக்கும் தலைகுனிவுகள்

. ஒருவன் குற்றவாளி என்பதாலேயே அந்த ஒட்டுமொத்த மார்க்கத்தையோ அதைச் சார்ந்தவர்களையோ குற்றம் சொல்வதும் குறைக் காண்பதும் எந்த வகையிலும் பிரச்சனையைத் தீர்த்துவிடாது. தொலை நோக்குப் பார்வையுடன் சமூகப்பிரச்சனைகளை அணுகி அதற்கான தீர்வுகளைக் கண்டடைய வேண்டும்.

ஒரு சிலர் 100க்கு 5 வீடுகளாவது மும்பையில் முஸ்லீம்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று “இடஒதுக்கீடு” தீர்வை முன்வைக்கிறார்கள். ஆனால் முஸ்லீம் இளைய சமுதாயம் இந்த இடஒதுக்கீடு தீர்வை வன்மையாக கண்டித்து குரல் கொடுக்கிறது. ” ஏன் இட ஒதுக்கீடு? அதுவே இந்திய சமூகத்திலிருந்து எங்களை ஒதுக்கும் நிலையைத் தானே காட்டும். நாங்களும் உங்களில் ஒருவராக எவ்விதமான ஒதுக்கீடுகளாலும் ஒதுக்கப்படாமல் குறைந்த பட்சம் நாங்கள் விரும்பும் இடத்தில் வாழ்கிற வாழ்வாதார உரிமைகளுடன் வாழவே விரும்புகிறோம் என்று சொல்கிறார்கள்.பிரதமர் மன்மோகன்சிங் 2005 ல் முஸ்லீம்களின் சமூக பொருளாதர நிலையை கண்டறிய உருவாக்கிய சச்சார் கமிட்டி (

Sachar committee) தன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

> முஸ்லீம் என்ற மத அடையாளம் அவர்களின் தினசரி வாழ்க்கையை பல்வேறு வகைகளில் பாதித்துக்கொண்டிருக்கிறது. வீடு வாடகைக்கு பார்ப்பதிலிருந்து அவர்கள் குழந்தைகளை பள்ளிகூடத்தில் சேர்ப்பது வரை அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

> பல்வேறு குடியிருப்புகள், ஹவுசிங் சொசைட்டிகளில் ” முஸ்லீம்களுக்கு இடமில்லை” என்பது

எழுதாதச் சட்டமாக்கப்பட்டு அனைத்து தரப்பு மக்களாலும் எவ்விதமான உறுத்தல்களுக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் இருக்கிறது.

> முஸ்லீம்களுக்கு கடன் வசதி வழங்குவதிலும் இதேநிலைமை தான் தொடர்கிறது

> முஸ்லீம்கள் பெரும்பான்மையாக குடியிருக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை.

> மற்றவர்களுடன் ஒப்பிடும்போது மின்சாரம், எரிவாயு, தண்ணீர் வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இன்றியே பெரும்பான்மையான முஸ்லீம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

>மிகவும் பிற்படுத்தப்பட்ட அட்டவணை சாதிகளின் வாழ்க்கை, பொருளாதர சமூக நிலைக்கும் பெரும்பான்மையான முஸ்லீம்களின் நிலைக்கும் பெருத்த வேறுபாடுகள் எதுவுமில்லை.

நமது நாட்டின் சாபக்கேடு கமிட்டிகளும் அறிக்கைகளும்

தூசித்தட்டப்படாமல் எவராலும் வாசிக்கப்படாமல் அப்படியே

மழையில் நனைந்து மண்ணில் கரைந்து போய்விடுவதுதான்.

puthiyamaadhavi.blogspot.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

18 + = 28

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb