நீடூர் ஃபைஜுர் ஹாதி
நித்தம் நித்தம் துப்பாக்கிகளின் சத்தம்,
தினம் தினம் மரண அறிவிப்புகள்,
இன்று இருக்கும் உறவுகள், உடைமைகள் அடுத்த வினாடியே கழுகு தேசத்தின் போர் வெறிக்கு இலக்காகிடுமோ என்ற அச்சம்,
பல மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த பாசக்குழந்தைகள் இவ்வுலகைக் காணும்முன்னே கழுகு கூட்டத்தின் இரத்தப்பசிக்கு உணவாகிடும் கொடூரம்,
கண்னியமிக்க தாய்மார்களின் கற்புகள் கழுகுக்கூட்டத்தினரால் சீறழிக்கப்படும் அக்கிரமம்,
நாட்டின் குடிமக்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று வாய்கிழிய பேசிவிட்டு குடியும் கையுமாக இரத்தவெறிப்பிடித்த ஆதிக்கவாதிகளுடன் கைக்கோர்த்து திறியும் நயவஞ்சகர்களின் துரோகங்களின் அவலம்.
இவையெல்லாம் கற்பனைகளுமல்ல கவிதைகளுமல்ல. நம் இஸ்லாமிய சமுதாயம் குறிப்பாக பாலஸ்தீனம், இராக், ஆப்கானிஸ்தான் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள்.
இரத்தவெறிபிடித்த அமெரிக்காவும் அதன் கள்ளக்குழந்தை இஸ்ரேலும், அதன் சகாக்களான ஐரோப்பிய நாடுகளும் செய்யும் அட்டூழியங்களுக்கு இணையாக முஸ்லிம் பெயர்தாங்கிய நயவஞ்கர்களூம் இஸ்லாமியர்களை ஒடுக்குவதில் மும்முரம் காட்டுகிறார்கள். இஸ்லாத்தினையும், இஸ்லாமியர்களையும் ஒடுக்குவதற்கு நவீன நாகரிகவாதிகள்(?) பல வழிகளில் முயன்றும் முடியாதுபோகவே யூதர்களின் கைவந்த கலையான குழப்பம் மற்றும் பிரித்தாளும் சூழ்ச்சியினை அரங்கேற்றுகிறார்கள். அற்ப பதவிக்கு ஆசைப்பட்டு சில இஸ்லாமியர்களும் அன்று முதல் இன்றுவரை அதற்கு துணைப்போவதையும் நாம் காண்கிறோம்.
நூற்றாண்டு கால போராட்டமான பாலஸ்தீன போராட்டம் உலக வரலாற்றில் தனித்துவமிக்க ஒரு போராட்டம். வயோதிகர்கள், பெண்கள், குழ்ந்தைகள், ஊனமுற்றவர்கள் என பாகுபாடின்றி பல லட்சக்கண்க்கான உயிர்களை இஸ்ரேலின் இரத்தப்பசிக்கு இறையாக்கிய ஒரு போராட்டம். தன்னலமற்ற பல தலைவர்கள் வழிநடத்திய போராட்டம் இன்றோ ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சியினால் சிக்கப்பட்டு தம் சொந்த நாட்டு மக்களான காஸா மக்கள் தினம் தினம் கொன்றொழிக்கப்படுவதை பொருட்படுத்தாமல் இஸ்ரேல் பிரதமருடனும், கழுகுதேசத்தின் காண்டலிசா ரைஸுடனும் விருந்துண்டுக்கொண்டிருக்கிறார்.
அப்பாஸ் மற்றும் ஹமாஸ் இடையிலான பிரச்சனையினால் பால்ஸ்தீன மக்களின் உயிர்தியாகங்கள் அர்த்தமற்றதாகி போகின்றன. ஆக இங்கே வென்றது அப்பாஸும் அல்ல ஹமாஸும் அல்ல உண்மையில் வென்றது யஹூதி நஸாராக்களின் சூழ்ச்சிகள்தான் என்பதனை நாம் ஏனோ உணர மறுக்கிறோம்.இராக். காலையில் விழித்தவுடன் சுப்ஹு பாங்கோசை கேட்கும் முன்னே குண்டுவெடிப்பின் ஓசையும், கண்ணியமிக்க தாய்மார்களின் அழுகுரல்களும் கேட்க துவங்கிவிடுகின்றன.
இராக்கை கொடூரப்பிடியிலிருந்து விடிவிக்கிறோம் என்று கூறிக்கொண்டு இன்று ஒட்டுமொத்த நாட்டையே கப்ரஸ்தானாக மாற்றிக்கொண்டிருக்கும் பெருமை அமெரிக்காவிறகும் அதற்கு காவடி தூக்கிய நாடுகளூக்குமே சொந்தம்.அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிலிருந்து தன் சொந்த நாட்டை காக்க தன் இன்னுயிரை தியாகம் செய்து போராடிக்கொண்டிருக்கும் இராக்கிய போராளிகளை அடக்கி ஒடுக்க இயலாத அமெரிக்க இங்கேயும் தனது நயவஞ்சக சித்து விளையாட்டை வெற்றிகரமாக அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது. அதற்கு ஜலால் தலபானி, நூரி அல் மாலிகி போன்றோர்கள் துணைபோகிறார்கள்.
இராக்கில் கிடைக்கும் எண்ணைக்காகவும், முஸ்லிகளின் இரத்தத்தினை குடிப்பதறக்காகவும் அமெரிக்கா பல ஆயிரம் இராணுவத்தினரின் உயிரை பலி கொடுத்திருக்கிறது. இராக் போராளிகளின் ஆக்ரோஷமான தாக்குதலை எதிர்க்க இயலாத அமெரிக்கா வழக்கம்போல ஷியா ஸன்னி குர்து என மக்களை பிரித்தாள்கிறது. சி.ஐ.ஏ. மற்றும் மொஸாத் ஆகியவற்றின் உதவியுடன் பல குண்டுவெடிப்புகளை அரங்கேற்றி அவற்றின் மூலம் ஆயிரக்கண்க்கான இஸ்லாமிய இரத்தத்தினை குடிப்பதோடு நிறுத்திக்கொள்ளது அந்த பலியினை இஸ்லாமியர்களின் மீதே சுமத்தி பிரிவினைகளுக்கு உணவு போட்டுக்கொண்டிருக்கிறது.
பல லட்சம் கோடிகளை செலவிட்டு இராக் போரை நிகழ்த்திக்கொண்ட்ருப்பதை பெரிதாக பேசும் ஊடகங்கள், அமெரிக்கா தலபானிகளின், மாலிக்கிகளின் ஆதரவுடன் எண்ணெய் வளத்தில் அடிக்கும் கொள்ளைகள்பற்றி ஊடகங்கள் ஏனோ அதிகமாக வாய் திறப்பதில்லை. தனக்கு பதவி கிடைத்தால் போதும் என்று தலபானிகளும், மாலிக்கிகளும் தன்மக்கள் கொல்லப்படுவதையும், தன் நாட்டு செல்வம் கொள்ளையடிக்கப்படுவதையும் பற்றி சிறிதும் வெட்கப்படுவதில்லை.
ஆப்கானிஸ்தான்! நேட்டோ என்ற நாடு பிடிக்கும் கூட்டம் தினம் தினம் ஆப்கானியர்களின் உயிரை காவு வாங்கிக்கொண்டிருக்கிறது. மதிப்புமிக்க மனித இரத்தில் ஆனந்த குளியலிட்டுக்கொண்டிருக்கிறார்கள். தன்னால் இயன்ற அளவு தன் நாட்டு மக்களின் உயிரை தலைமையேற்று காவு கொடுத்துக்கொண்டிருப்பது ஹமீத் கர்சாய் என்ற முஸ்லிம். தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் எனக்கூறி தன்நாட்டு அப்பாவிமக்களை கழுகு கூட்டத்திற்கு இறையாக்கிக்கொண்டிருப்பதன் மூலம் தான் ஒரு உண்மையான அமெரிக்காவின் கைகூழி என நிரூபித்துகொண்டிருக்கிறார் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய்.
பாலஸ்தீனத்திலும், இராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் இதர இஸ்லாமிய தேசங்களிலும் தன்னுடைய ஆதிக்கம் நிலைப்பெற ஐரோப்பாவோ ஏனைய நாடுகளின் உதவிகளோ அமெரிக்காவிற்கு தேவைபடுவதில்லை. அதனை அது நம்புவதுமில்லை. ஏனெனில் அது நம்புவதெல்லாம் நயவஞ்கமே வாழ்வாய்க் கொண்ட யூதர்களின் சூழ்ச்சியையும், அதில் சிக்கும் மஹ்மூத் அப்பாஸ், தலபானி, மாலிகி, கர்சாய் போன்றவர்களையுமே. இதுப்போன்றவர்கள் எப்படியும் கிடைத்துவிடுவார்கள் என்ற தீவிர நம்பிக்கையுடன் துணிச்சலாக் அமெரிக்கா ஒவ்வொரு நாடுகளின் மீதும் படையெடுக்கிறது, அங்குள்ளவர்களை கொல்கிறது, பெண்களை மானபங்கம் செய்கிறது, சொத்துகளை கொள்ளையடிக்கிறது.
இவற்றையெல்லாம் கணகச்சிதமாக செய்யும் அமெரிக்கா வரலாற்று பூர்வமான உண்மையை மறைக்கிறது. உணர மறுக்கிறது.
அன்று முதல் இன்று வரை எவ்வளவோ கொடுங்கோல் ஆட்சியாளர்களையும், அவர்களின் சதித்திட்டங்களையும் அல்லாஹ்வின் உதவியுடன் துட்சமெனக்கருதி வெற்றி நடைப்போட்டுக்கொண்டிருக்கும் தூய இஸ்லாமும், இஸ்லாமியர்களும் என்றுமே நயவஞ்ககூட்டத்தினை நம்பினதில்லை, நம்பபோவதுமில்லை. அல்லாஹ்வை மட்டுமே நம்பும் இஸ்லாமியர்களை அப்பாஸ், மாலிகி, கர்சாய் போன்றவர்களை வைத்து வென்றுவிடலாம் என கழுகு தேசமும், நாடு பிடிக்கும் நேட்டோவும், இரத்தம் குடிக்கும் இஸ்ரேலும் பகல் கணவு காண்பார்களேயானால் அது நிறைவேறாத கணவாகவே இருக்க முடியும். ஏனெனில் இஸ்லாத்தின் அடித்தளமும், அடிப்படையும் அவ்வளவு வழுவானது, உறுதியானது.
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். 9:32
நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா? 2:107