Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

குழந்தைகளின் சிந்தனையை சிதைக்கும் டி வி சேனல்

Posted on August 25, 2008 by admin

இந்தியா முழுவதுமே பள்ளி கோடை விடுமுறை நாள்களில், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கேபிள் இணைப்புகள் மூலம் ஒளிபரப்பப்படும் குழந்தைகளின் சேனல்களை தடை செய்ய வேண்டும் என்ற கருத்து சமூக ஆர்வலர்களிடையே மேலோங்கி வருகிறது.

3 வயது குழந்தை முதல், பள்ளி மாணவ, மாணவிகள் வரை குழந்தைகளுக்கான சேனல்களின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கின்றனர். விரும்பி பார்க்கின்றனர் என்பதைவிட அதில் மூழ்கிவிடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இத்தகைய சேனல்களை மட்டுமே குழந்தைகள் விரும்பிப் பார்ப்பதால், அவர்களுக்கு வேறு எதன் மீதும் கவனம் செலுத்த இயலாத அளவுக்கு மூளையின் செயல்திறன் குறைகிறது.

படிக்கும் காலங்களில் படிப்பதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் அதிக கவனம் செலுத்துவதால், கல்வியின் மீதான ஆர்வம் குறைந்து தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மேலும் டிவி பார்ப்பதால் கண்பார்வை பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய சூழலும் உருவாகி விடுகிறது.

இத்தகைய குழந்தைகள் சேனல்களை பார்க்கும்போது, பெற்றோர்கள் அதை பார்க்காதே என அறிவுரை கூறினாலோ, அல்லது சேனல்களை மாற்றினாலோ அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் ஒரே வீட்டில் 2, 3 குழந்தைகள் இருந்தால் குழந்தைகள் சேனல்களிலே எந்த சேனல்களை வைப்பது என்ற சண்டை வேறு.

இத்தகைய சேனல்களை தொடர்ந்து பார்ப்பதால் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே செல்வதில்லை. இதனால், அவர்களுக்கு நட்பு வட்டாரம் குறைகிறது. உறவினர்கள் வீட்டுக்குச் சென்று வரலாம் என பெற்றோர் அழைத்தால்கூட அவர்கள் வர மறுப்புத் தெரிவிக்கின்றனர். அப்படியே வந்தாலும்கூட அங்கு யாரிடமும் நன்கு பழகுவதில்லை. அங்கேயும் டிவி பார்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

உணவுவேளைகளில் சரியான நேரத்துக்கு சாப்பிடச் சொன்னால்கூட ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் அரைகுறை சாப்பாடுதான். இதனால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்களுக்கு ஒரு விதத் தளர்வும், மன உளைச்சலும் ஏற்படுகின்றன.

சீரியலில் மூழ்கிக் கிடக்கும் பெண்களைப்போல இப்போது குழந்தைகள் சேனல்களால் வீடுகளில் பிரச்னைதான்.

இது தொடர்ந்தால் குழந்தைகளை இந்த மாதிரியான சேனல்கள் கற்பனை உலகத்திலே சுற்ற வைத்து விடும். பெற்றோர்களிடம் பாச உணர்வுடன் இருக்கவோ, சரியாக படிக்கவோ, விளையாட்டுத்திறனை அதிகரிக்கவோ அது தடையாக இருக்கும் . அவர்களின் மூளை செயல்திறனை மழுங்கடிக்கும். இத்தகைய சேனல்கள் குழந்தைகளுக்கு ஒரு போதைப் பொருள்போல ஆகிவிடும்.

இதனால் வருங்கால சமுதாயமே பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் மத்திய, மாநில அரசுகள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி எப்படி ஆபாச சேனல்களுக்கு அரசு தடை விதிக்கிறதோ, அதேபோல இத்தகைய குழந்தைகள் சேனல்களுக்கும் உடனடியாகத் தடைவிதிக்க வேண்டும்.

அவ்வாறு செயல்பட்டால் அன்றி, வருங்கால இந்தியா, வல்லரசு இந்தியா என்பதெல்லாம் பெயரளவில் சொல்லிக் கொள்ளலாமே தவிர, நடைமுறைக்கு சாத்தியமில்லை. ஏனென்றால் இன்றைய குழந்தைகள் தானே நாளைய இளைஞர்கள். அவர்கள் ஒரு நல்ல குழந்தையாக இருந்தால் மட்டுமே நல்ல இளைஞராக உருவாக முடியும். அப்போதுதான் ஒரு நல்ல இந்தியனாக வந்து இந்தியாவை வல்லரசாக உருவாக்க முடியும்.

எனவே, அரசு இதைக் கருத்தில் கொண்டு, கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. இனி குழந்தைகளுக்கு நேரம் அதிகமாகக் கிடைக்கும் என்பதால், அந்தச் சேனல்களில் மூழ்கிவிடாமல் இருக்கவும், உடனடியாக கவனித்து குழந்தைகள் சேனல்களை தடைசெய்ய வேண்டும். அது விடுமுறை காலம் மட்டுமன்றி அனைத்து காலங்களிலும் இத்தகைய சேனல்கள் தேவை இல்லை என்பதில் உறுதியுடன் செயல்பட வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி: தினமணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb