Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அன்னையின் மடல்

Posted on August 24, 2008 by admin

என் செல்லமே!

நீ என்னை நேசிக்க விரும்பினால்

இப்பொழுதே நேசி!

பாசம் காட்ட விரும்பினால்

இப்பொழுதே உன் பாசத்தைக்காட்டு!

நான் இவ்வுலகை விட்டு மறைந்தபின்

மீளாத்துயில் கொண்டபின்,

அன்னையிடம் அன்பு காட்டத் தவறிவிட்டோமே,

நம் கடமையைச் செய்ய தவறிவிட்டோமே,

“தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது” எனும்

நபி மொழியை மறந்து விட்டோமே என

வருந்தும் நிலை உனக்கு வேண்டாம்.

 

என் செல்லமே!

உன் அன்னையிடம் உன் பாசத்தைக்

காட்டு பரிவைக் காட்டு.

நான் நிரந்தரமாகக் கண்களை

மூடிய பின் நீ என்ன கதறினாலும்

நான் எழுந்து வர முடியாது!

இருக்கும்போது எப்பொழுதும் அருமை

தெரியாது. மறைந்த பின் கதறி என்ன பயன்?

ஆண்டாண்டு அழுதாலும் மாண்டவர்

மீண்டு வரமாட்டார். அந்த நிலை

உனக்கு வேண்டாம் மகனே!

  

என் செல்லமே!

உன் தாயின் முகத்தைப்பார்.

நரைத்த முடி, சோர்வான முகம்,

தளர்ந்த உடல், முதுமையின் தாக்கம்!

மகன் தன்னிடம் அன்பாக பேச மாட்டானா

என்ற ஏக்கம் – உன் தாயின் விழிகளில்

தெரிவதைப் பார் மகனே!

மூன்று விஷயங்களை கண்களால்

காண்பதே பாக்கியம் என்று, அன்று

சொன்னார்களே அகிலத்தின் அருட்கொடை

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!

அதில் ஒன்று தாயின் முகமல்லவா?

   

என் செல்லமே!

இப்பொழுதே உன் தாயிடம் உன்

பாசத்தைக் காட்டு, பரிவைக் காட்டு,

கனிவு காட்டு, அன்பாகப் பேசு,

இறையருள் பெற்றிடு, இறைப்

பொருத்தத்தை பெற்றிடு மகனே!

வியட்நாம் மொழியில்: ஃபாத்திமுத்துஜ் ஜொஹரா
தமிழில்: மெஹருன்னிஸா & மும்தாஜ் பேஹம்

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 62 = 70

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb