Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மன்னித்து மகிழுங்கள்

Posted on August 23, 2008 by admin

M.ஸையத் இப்ராஹீம்

இன்றைய காலகட்டத்தில் நம்மிடையே அதுவும் உறவினர்களுக்கு மத்தியிலேயே வியாபித்து நிற்கும் பகைமையை, பழிவாங்கும் மனப்போக்கை பார்த்து வருகிறோம்.

உறவுகளைத் துண்டித்து வாழ்பவர்களுக்கு அல்லாஹ் தன் திருமறையில் எச்சரிக்கிறான்.

“அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும் இரத்தபந்த உறவுகளைச் சீர்குலைப்பதி லிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்” (4 : 1)

தூதுவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நவின்றார்கள்:

“யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் தன் சொந்தங்களோடு இணைந்து வாழட்டும்.” (புகாரி முஸ்லிம்)

மேற்கண்ட குர்ஆன் நபிமொழியின் கட்டளையையும் முக்கியத்துவத்தையும் புறந்தள்ளிவிட்டு உறவைத்துண்டித்து வாழ்கிறார்கள்.

நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்:

“எவர் ஒருவர் தனக்கு நீண்ட ஆயுளும், வாழ்வாதாரமும் வேண்டும் என விரும்புகிறாரோ, அவர் உறவைத் துண்டிக்காமல் வாழட்டும்” (திர்மிதி)

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்:

“சொந்தக்காரர்களிடம் உறவை முறித்து அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பவன் ஒருபோதும் சுவனம் புகமாட்டான்.” (திர்மிதி)

“இன்னும் உங்களில் (இறைவனின்) கொடை அரு ளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உற வினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன் னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பமாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன். அன்பு மிக்கவன்.” (24:22)

இன்னொரு வசனத்திலே…

“(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள். தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய் வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.” (3 : 134)

மன்னித்துப் பிழை பொறுக்கும் பண்பை மேற்கொள்ளாமலிருப்பதை இறைவன் விரும்பவில்லை என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறிக் கொண்டிருக்கின்றன.

தவறு செய்தவர்கள் தாங்கள் செய்தது தவறு என்பதை உணர்ந்து அதை ஒப்புக்கொள்ள வேண்டும். அத்தவறை செய்தவர் தன் இரத்தமாக இருந்தாலும் சரியான நீதி வழங்கவேண்டும். ஏனெனில்… “முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும்,  உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறு பவர்களாகவும் இருங்கள்.” (4 : 135)

வரலாற்றிலே அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மன்னிக்கும் பண்பு ஓர் அழகிய முன்மாதிரியாக இன்று வரை போற்றப்படுகிறது. ஆம்! தமக்கு சொல்லொணாத் துன் பங்கள் தந்த மக்காவாசிகளுக்கு மக்கா வெற்றியின்போது பொதுமன்னிப்பு வழங்கினார்கள். மாத்திரமல்ல, தன் சிறிய தந்தை ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொலை செய்த ஹிந்தா ரளியல்லாஹு அன்ஹா மற்றும் ஹபஸி (ரளியல்லாஹு )(இருவரும் மக்கா வெற்றிக்குப் பின் இஸ்லாத்தைத் தழுவியவர்கள்) ஆகிய இருவரையும் மன்னித்தார்கள். இதைவிட ஒரு மகத்தான மன்னிப்பு வரலாற்றில் வேறெதுவும் உண்டா?

ஒரு மனிதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறி னார்: “அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சில உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய உரிமைகளை நான் நிறைவேற்றுகின்றேன். அவர்கள் என் உரிமைகளை நிறைவேற்றுவதில்லை. நான் அவர்களுடன் நல்ல விதமாக நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் மோச மாக நடந்து கொள்கிறார்கள். நான் அவர்களுடன் பொறு மையோடும் சகிப்புத் தன்மையோடும் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் அறிவீனமாக நடந்து கொள் கிறார்கள்.” அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: “நீர் சொல்வதைப் போன்றே அவர்களுடன் நடந்து கொண்டிருந்தால், அது அவர்களின் முகத்தில் கரி பூசுவது போன் றதாகும். அல்லாஹ் அவர்களுக்கு எதிராக எப்போதும் உமக்கு உதவிய வண்ணம் இருப்பான், நீர் இதே பண்பில் நிலைத்திருக்கும் வரை.” (முஸ்லிம்)

ஆகவே பாதிக்கப்பட்டவர்களாகிய நீங்கள் தவறு செய்த உறவினர்களை மன்னித்து எப்பொழுதும் போல் உறவு கொண்டாடுங்கள். அவர்கள் உங்கள் உறவுக்கு பதில் மேலும் பகைமை பாராட்டினாலும் நீங்கள் அவர் களுடன் நல்லமுறையில் நடந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்…

“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்திய வர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்! கிருபை மிக்கவன்‘ என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். (59 : 10)

ஆக மேற்கண்ட குர்ஆன் நபிமொழியின் அடிப்டையில் தவறு செய்தவர்களின் மீது எவ்வித காழ்ப்பு உணர்ச்சியும் இல்லாமல் நல்ல முறையில் உறவாடுங்கள்.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 20 = 23

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb