Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வலீமா என்றால் என்ன?

Posted on August 2, 2008 by admin

மௌலவி, ஏ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவி .

வலீமா என்றால் என்ன? அதை ஏன் நிறைவேற்ற வேண்டும்? எப்போது, யாரால் நிறைவேற்றப்பட வேண்டும்?

வலீமாவுடைய தத்துவம் என்னவென்றால் இருவருக்கிடையே திருமணம் நிகழ்ந்துவிட்டதை பிரபலப்படுத்துவதாகும். இருமணவீட்டாரிடையே மலர்ந்துள்ள புதிய உறவை கொண்டாடுவதாகும். மற்றும் திருமணம் என்பது ஓர் இறையருட் கொடை. அதற்கு நன்றி செலுத்தும் அடையாளமும் ஆகும். மேலும் மக்கிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதும் ஆகும்.

வலீமா கொடுப்பது புனிதமான சுன்னத்து ஆகும். வலீமா கணவனின் பொறுப்பாகும். திருமணத்துக்குப்பின் நிகழக்கூடியதாகும். தாம்பத்ய உறவு நிபந்தனையில்லை

திருமணத்தின் மறுநாளே தரவேண்டும் என்பதில்லை. 2,3 ஆம் நாட்களிலும் தரலாம். அதற்கு பின் தரும் விருந்து வலீமா அல்ல. எவ்வாறாயினும் திருமணத்திற்குப் பின்பு வலீமா கொடுப்பதுதான் விரும்பத்தக்கதாகும். (ஆதாரம்: ஃபதாவா ரஹீமிய்யா பாகம்: 3)

நபிகள் நாயகம் ஸல்லல்லா†¤ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுக்கு திருமணம் முடித்த மறுநாளில் வலீமா விருந்து அளித்தார்கள்.

அப்துர்ரஹ்மானிப்னு அவ்ஃப் ரளியல்லா†¤ அன்†¤ அவர்களின் உடையில் ஒருநாள் மஞ்சள் கறையைக் கண்ட நாயகம் ஸல்லல்லா†¤ அலைஹி வஸல்லம் அவர்கள் அதுபற்றி வினவியபோது ஒரு பேரித்தங் கொட்டையளவு தங்கத்தை மஹர் கொடுத்து திருமணம் செய்துள்ளதாக பதில் கிடைத்தபோது பாரகல்லா†¤ லக என்று வாழ்த்தியதுடன், ஓர் ஆட்டை அறுத்தாயினும் வலீமா கொடுப்பீராக என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லா†¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். – ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

வலீமா அவரவருடைய சக்திக்கேற்ப கொடுக்க வேண்டும். சிரமப்பட்டு கடன் வாங்கி செய்ய வேண்டியதில்லை. வீண் விரயமும் கூடாது. ஹஜ்ரத் அலீ ரளியல்லா†¤ அன்†¤ அவர்கள் வலீமா கொடுத்தபோது பேரித்தம்பழம், தூய்மையான தண்ணீரை வழங்கினார்கள்.

வலீமாவுக்கு உங்களை அழைத்தால் செவி சாயுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லா†¤ அலைஹி வஸல்லம் நவின்றார்கள். (புகாரி, முஸ்லிம்) சரியான காரணம் இன்றி வலீமாவை நிராகரித்தால் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வுடைய ரசூலுக்கும் மாறு செய்தவராவார் என்றும் கூறினார்கள். மோசமான வலீமா எதுவென்றால் பணக்காரர் அழைக்கப்பட்டு, ஏழைகள் விடப்படும் வலீமாவாகும் என்றும் கூறினார்கள். அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

குறிப்பு: வலீமா விஷயத்தில் சட்டம் விசாலமானதாகும். திருமணத்தின்போது, திருமணத்துக்குப்பின், தாம்பத்யம் நிகழ்ந்தபின் அல்லது நிகழும் முன் எந்நேரத்தில் வலீமா கொடுத்தாலும் ஏற்கப்பட்டதாகும். விரும்பத்தக்க நேரம் திருமணத்துக்குப்பின் அவ்வளவுதான். (ஆதாரம்: ஃபிக்†¤ச் சுன்னா)

பதிலளித்தவர்: நீடூர் நெய்வாசல், ஜாமிஆ மிஸ்பா†¤ல் †¤தா அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி, ஏ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவி அவர்கள்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 60 = 63

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb