| பெண் என்னும் பாலம்! |
|
|
|
இரு நதிக் கரைகளை மிக அழகுற இணைப்பதே நாம் காணும் பாலம்; இல்லத்தில் உள்ளவர்களை எல்லாம் இணைப்பவளே பெண் எனும் பாலம்.
தந்தை என்றால் பயம், மரியாதை; தாய் என்றால் பாசம், உரிமைகள்; தாயிடம் ஒருமுறை சொன்னாலேயே, சேய் விரும்புவது உடனே கிடைக்கும்.
தந்தை குழந்தைகளுக்கு இடையே, தாத்தா பேரப் பிள்ளைகளுக்கிடையே, ஆசிரியர் மாணவர்களுக்கு இடையே ஆவாள் பெண்ணே உறுதியான பாலம்.
பத்து ஆண்கள் செய்யும் வேலைகளை பதறாமல் செய்து முடிப்பாள் ஒரு பெண். பத்து ஆண்கள் ஒன்றாய் முயன்றாலும் முத்துப் போலப் பணி செய்ய இயலார்!
பெண் இருக்கும் வீடே நல்ல வீடு. பெண் இல்லாத வீடு வெறும் காடு! இளையவள் வீட்டை விட்டு விலகி, மூத்தவள் வந்து குடி புகுந்திடுவாள்!
பாலத்தை நன்கு பராமரித்தாலேயே பாலம் பயன்படும் போக்குவரவுக்கு. பெண்மைப் போற்றிப் பேணுவோம், பெண் என்னும் பாலம் பயன் தரவே.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி. http://visalramani.wordpress.com
|




