| தலையில் குட்டு வைப்போம்!! |
|
|
|
யாசர் அரஃபாத்
அன்பைப் போதித்த அழகிய மார்க்கத்திற்க்கு அடையாளமிட்டுள்ளது அயல் நாடுகள் தீவிரவாதம் என்று!!
மூலைக்கு மூலை துரத்தி அடிக்கப்பட்டாலும் மூலதனமாய் எங்களிடம் உள்ளது ஒன்றே ஒன்றுதான்; ஒரிறைக்கொள்கைதான்!!
அணைத்துவிடலாம் என்றெண்ணி ஊதியவருக்கெல்லாம் பேரிடியாக; அமுங்கி இருந்த கங்குகள் இப்போதுதான் சூடு பிடிக்கத்துடங்கி உள்ளதை எண்ணி!!
ஒழிப்பதற்க்கு முன் ஒன்றுபடு ! உறங்கியதுப் போதும் உயர்திப் பிடிப்பதற்கு வா கொள்கையை!!
குனிந்து குனிந்து குப்புற வீழ்ந்ததும் போதும்; இனி சீண்டிப்பார்க்கும் தருதலையை தட்டிவைப்போம்; தலையில் குட்டு வைப்போம்!!
வரலாறும் மங்கியது. தகராறுதான் பெருகியது; வித்திட்ட விஷமிகளுக்கு மாற்று மருந்தொன்று உண்டு; மார்க்கம் சொன்ன போதனைகளைக் கொண்டு!!
வன்முறை இல்லை வரைமுறை உண்டு; கர்வம் இல்லை; கருணை உண்டு; மொத்தத்தில் சுவர்க்கம் உண்டு மறுமையில் சோதனை இல்லை!! (இன்ஷா அல்லாஹ்)
|



