Home இஸ்லாம் குர்ஆன் அல்குர்ஆனின் அன்னை!
அல்குர்ஆனின் அன்னை! Print E-mail

அல்குர்ஆனின் அன்னை!

''திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் (அல் ஃபாத்திஹா அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும், மகத்தான குர்ஆனும் ஆகும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 4704)

இறைவனிடம் உரையாடும் அத்தியாயம்!

தொழுகையில் ஓதுவதை எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியில் பங்கிட்டுள்ளேன். என் அடியான் கேட்டவை அவனுக்கு உண்டு.

'அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' என்று ஒருவன் கூறும் போது 'என்னை என் அடியான் புகழ்ந்து விட்டான்' என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவன் 'அர்ரஹ்ப்னிர் ரஹீம்' என்று கூறும் போது 'என் அடியான் என்னைப் பாராட்ட வேண்டிய விதத்தில் பாராட்டி விட்டான்' என்று அல்லாஹ் கூறுகிறான்.

'மாலிக்கி யவ்மித்தீன்' என்று கூறும் போது 'என்னைக் கவுரவப்படுத்த வேண்டிய விதத்தில் கவுரவப்படுத்தி விட்டான்' என்று அல்லாஹ் கூறுகிறான்.

'இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தயீன்' என்று கூறும் போது 'இதுதான் எனக்கும் எனது அடியானுக்கும் இடையே உள்ள உறவாகும்' என்று அல்லாஹ் கூறுகிறான்.

'இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்' என்று கூறும் போது 'என் அடியானின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 655)

ஒளிச்சுடர்!

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அமர்திருந்த போது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கண்டார்.

அப்போது வானத்தை அன்னாந்து பார்த்த ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ''இதோ! வானில...் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது'' என்று கூறினார்.

அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி வந்தார். அப்போது ஜிப்ரயீல், ''இதோ! இப்போது தான் இந்த வானவர் பூமிக்கு வந்திருக்கிறார். இதற்கு முன் அவர் பூமிக்கு இறங்கியதில்லை'' என்று கூறினார்.

அவ்வானவர் ஸலாம் கூறிவிட்டு, ''உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப்பட்டிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்தியைப் பெறுங்கள்.

அல் ஃபாத்திஹா அத்தியாயமும் அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை! அவற்றிலுள்ள எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை'' என்று கூறினார். (நூல்: முஸ்லிம் 1472, நஸயீ 903)

பைத்தியத்திற்கும் மருந்து!

அலாகா பின் சுகார் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றார்கள். அம்மக்கள், ''நீர் இந்த மனித(தூத)ரிடமிருந்து நல்ல செய்தியைக் கொண்டு வந்திருக்கிறீர். எங்களுக்காக இந்த மனிதருக்கு ஓதிப் பார்ப்பீராக!'' என்று கூறி ...விட்டு, சங்கலியால் பிணைக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்.

காலையிலும் மாலையிலும் சூரத்துல் பாத்திஹாவின் மூலம் ஓதிப் பார்த்தர்கள். பின்பு அவர் முடிச்சியிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவரைப் போன்று மகிழ்ச்சியில் திளைத்தார். இதற்காக அம்மக்கள் அவருக்கு (ஆடுகளை அன்பளிப்பு) வழங்கினார்கள்.

இதை அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சொன்ன போது, ''நீ அதில் சாப்பிடு! என்னுடைய வாழ்நாள் மீது சத்தியமாக! மக்களில் சிலர் தவறானதன் மூலம் மந்திரித்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால் நீர் உண்மையைக் கொண்டு சாப்பிடுகிறீர்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத் 2966, அஹ்மத் 20833, 20834)

இஸ்லாம் இனிய மார்க்கம் 7:204. குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.