|
அரேபியாவில் ஆறுகள் ஓடுமா?! |
|
|
|
Sunday, 09 August 2009 07:57 |
|

[ அரேபியா மீண்டும் மேய்ச்சல் நிலங்களாகவும், ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகாத வரை இறுதி நாள் (உலக முடிவு நாள்) ஏற்படாது. (நூல்: முஸ்லிம்)]
Dr. Alfred Coroz உலகின் தலைசிறந்த புவியியல் அறிஞருள் ஒருவர். அவரிடம் அரேபியாவின் புவிவள நிலமையினைக் குறித்துக் கேட்கப்பட்டது.
''அரேபியா எப்போதேனும் பசுமையாக ஆறுகள் நிரம்பி இருந்ததுண்டா?'' . எதிர்பாராத ஆனால் நேர்மறையான பதில் அவரிடமிருந்து வந்தது- ''ஆம் பனியுகத்தில் அவ்வாறு இருந்தது''.
அடுத்து ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது:''எதிர்காலத்தில் மீண்டும் அரேபியாவின் பாலைவனம் பசுமையாகும் வாய்ப்புகள் ஏதேனும் உண்டா.?''
ஆச்சர்யமூட்டும் வகையில் அவரிடமிருந்து பதில் வந்தது-
''ஆம்! அரேபியா மீண்டும் பசுமையாக செழித்துவிளங்கவும் ஆறுகள் ஓடவும் செய்யும் என்பது அறிவியல் பூர்வமான எதிர்கால உண்மை தான்!''
|
|
Read more...
|
|
முஸ்லிமல்லாதவருடன் எவ்வாறு பழகுவது? |
|
|
|
Friday, 06 January 2012 21:32 |
|
கேள்வி : முஸ்லிமல்லாதவர்களிடம் முஸ்லிம்களின் தொடர்பு எந்தெந்த வகையில் அமைய வேண்டும்?
பதில் : முஸ்லிமல்லாத மக்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பதில் அதிகமான முஸ்லிம்களுக்கு தெளிவான பார்வை இல்லை.
முஸ்லிம் அல்லாத மக்கள் அனைவரையும் அறவே வெறுத்து அவர்களை அடியோடு ஒரு சாரார் புறக்கணித்து ஒதுக்கிவிடுகின்றனர். முஸ்லிமல்லாத மக்களும் இஸ்லாத்தைப் புரிந்து ஏற்க வேண்டுமானால் அவர்களுடன் நெருங்கிப் பழகுவதன் மூலமே அது சாத்தியமாகும். இதை உணராமல் முஸ்லிமல்லாத மக்களை அறவே ஒதுக்குவதும், அவர்களிடமிருந்து முழுமையாக ஒதுங்கிக் கொள்வதும் முற்றிலும் தவறாகும்.
மற்றொரு சாரார் அவர்களுடன் இரண்டறக் கலந்து விடுகின்றனர். இஸ்லாம் தடை செய்துள்ள காரியங்களை அவர்கள் செய்யும் போது அதில் பங்கெடுத்துக் கொண்டு தாமும் அது போல் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். அவர்கள் செய்யும் பலதெய்வ வழிபாட்டில் கூட கலந்து கொள்ளும் அளவுக்கு நடந்து தம்மை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிக் கொள்கின்றனர். இதுவும் தவறாகும்.
|
|
Read more...
|
|
நீளும் வாளை விட சாடும் ''நா'' கொடியது |
|
|
|
Sunday, 17 July 2011 07:46 |
|
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
[ "முஸ்லிமை ஏசுவது பாவம்; முஸ்லிமோடு போரிடுவது இறை நிராகரிப்பு" என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
நீண்ட வாள்களை விட, நீண்ட நாவுகள் ஆபத்தானவை. வாள்கள் வாளாக இருக்கும். நாவுகள் தான் அவற்றைத் தீட்ட வைக்கும். பின்னர் தூக்க வைக்கும்.
யார் முஸ்லிம்களுக்கெதிராக தங்களது நாவை நீட்டுகின்றார்களோ அவர்கள் தங்களது வாளையும் அவர்களுக்கெதிராக உயர்த்த முடியும். யார் தங்களது நாவையே நீட்ட விரும்பவில்லையோ அவர்கள் வாளைத் தொடவும் அஞ்சுவார்கள்.
முஸ்லிம்களுக்கெதிராக தங்கள் நாவுகளை நீட்டியிருக்கும் குழப்பவாதிகளை மக்கள் இனங்கான வேண்டும். முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பம் விலைவிப்பதற்காக அன்று ஸஅது பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வாள் தூக்கச் சொன்னவர்கள் இன்றும் இருக்கிண்றார்கள். அவர்கள் இரண்டு காரணங்களுக்காக இன்றும் முஸ்லிம்கள் மத்தியில் வாள் தூக்கத் தயாராக இருக்கிறார்கள்.
ஒன்று, மார்க்கத்தில் உள்ள கருத்து வேறுபாடுகளில் ஒரு கருத்தைப் பிடித்துக் கொண்டு அதில் காட்டும் மிதமிஞ்சிய தீவிரம். மற்றது, தங்களது குறுகிய, தனிப்பட்ட அரசியல் இலாபங்கள்.]
|
|
Read more...
|
|
இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும் |
|
|
|
Tuesday, 03 January 2012 07:07 |
|
இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்
[ அண்மையில் இலங்கையில், கொழும்பில் 25 வயது வாலிபர் ஒருவர் 40 வயது கன்னிப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர் முடித்தது பணக்கார பெண்ணை அல்ல, நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை.
அது மட்டுமல்ல கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நாம் கேள்விப்பட்டோம், 34 வயது இளைஞர் ஒருவர் கணவனால் கைவிடப்பட்ட ஒரு குழந்தைக்கு தாயான 43 வயது பெண்ணை திருமணம் செய்து அந்தப் பெண்ணையும், அவள் குழந்தையையும் பொறுப்பேற்றுள்ளார்.
அதைப் போன்று 18 வயது இளம் யுவதி ஒருவர் 31 வயது வாலிபரை திருமணம் செய்துள்ளார். அந்த வாலிபரோ பணக்காரர் அல்ல, தொழில் இல்லாத ஒரு ஏழை. அவள் திருமணம் செய்தது வேறு எதற்கும் அல்ல அவர் ஒரு ஆஷிகே ரஸூல் என்ற ஒரே காரணத்திற்காக.
இதைப்போன்று சம்பவங்கள் ஏராளமாக இருக்கலாம். ஆனால் நாம் மேலே கூறியது எல்லாம் எமது கண்களால் பார்த்ததும், காதுகளால் கேட்டதும் மாத்திரமே. நாம் அறியாதது ஏராளமாக இருக்கலாம். இவர்கள் தான் உண்மையான முஃமின்கள், இவர்கள் தான் உண்மையான முறையில் ஸுன்னத்தை பின்பற்றுகிறார்கள்.
இன்று மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஸுன்னத் என்பது தாடி வைப்பதும், ஜிப்பா போடுவதும், தொப்பி அணிவதும், பர்தா அணிவது மாத்திரம் தான் என்று. இவைகள் மாத்திரம் தான் ஸுன்னத் என்றால் முனாஃபிக்கீன்கள் சிறந்த முஃமின்களாக இருந்திருப்பார்கள்.
இன்று அனேகமான ஆண்கள் குறிப்பாக தங்களை முஸ்லிம் என்று கூறிக்கொள்பவர்கள், முஃமின் என்று கூறிக்கொள்பவர்கள் சிலரை பார்க்கும் பொழுது, இவர்கள் முஸ்லிமா? என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒரு பெண்ணிடம் எதை எதிர்பார்க்க வேண்டும் என்று கூறினார்களோ, அதை பரிபூரணமாக உதாசீனம் செய்துவிட்டு, நாயகம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எதை எதிர்ப்பார்க்க கூடாது என்று கூறினார்களோ, அதை இவர்கள் எதிர்பார்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் வார்த்தையை இவர்கள் புறக்கணித்து விட்டு, இப்லீஸின் வார்த்தைக்கு இவர்கள் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். ]
|
|
Read more...
|
|
அலிஃப் லாம் மீம், ஹாமீம், யாஸீன் - இந்த பதங்களின் முக்கியத்துவம் என்ன?. |
|
|
|
Wednesday, 06 July 2011 14:13 |
அலிஃப் லாம் மீம், ஹாமீம், யாஸீன்...
'அலிஃப் லாம் மீம். இது (அல்லாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழி காட்டியாகும்.'(அல்குர்ஆன் 2: 1-2).
குர்ஆனின் சில அத்தியாயங்கள் அலிஃப் - லாம் - மீம் - எனவும் - ஹாமீம் எனவும் - யாஸீன் எனவும் துவங்குகிறதே. இந்த பதங்களின் முக்கியத்துவம் என்ன?.
அலிஃப் - லாம் - மீம், யாஸீன், ஹாமீம் போன்ற எழுத்துக்களுக்கு அரபியில் 'அல்-முகத்ததத்' (சுருக்கப்பட்ட எழுத்துக்கள்) என்று பெயர். அரபி மொழியில் மொத்தம் இருபத்து ஒன்பது (அலிஃப் - மற்றும் ஹம்ஸ் என்கிற எழுத்துக்களை இரண்டாக கருதினால்) எழுத்துக்கள் இருக்கின்றன.
அதேபோல அருள் மறை குர்ஆனிலும் இருபத்து ஒன்பது அத்தியாயங்கள் மேற்படி சுருக்கப்பட்ட எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன. இவ்வாறு சுருக்கப்பட்ட எழுத்துக்கள் சில அத்தியாயங்களில் தனித்தும், சில அத்தியாயங்களில் இரண்டாகவும், சில அத்தியாயங்களில் மூன்று எழுத்துக்களாகவும், சில அத்தியாயங்களில் நான்கு அல்லது ஐந்து எழுத்துக்களாகவும் சேர்ந்து வரும்.
|
|
Read more...
|
|
எதார்த்தப் பெண்ணியத்தின் முன்னோடி - கதீஜா பின்து குவைலித் رضي الله عنها |
|
|
|
Thursday, 02 June 2011 11:46 |
AN EXCELLENT ARTICLE, MUST READ
கதீஜா பின்து குவைலித் ரளியல்லாஹு அன்ஹா : எதார்த்தப் பெண்ணியத்தின் முன்னோடி
[ கணவர் மீது அன்பு செலுத்துவதிலும் அவருக்கு ஒத்துழைப்பதிலும் அன்னை கதிஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்வு சாதனை மனிதர்களின் வாழ்க்கை துணைவிகளுக்கு சரித்திரம் சொல்லும் ஒரு பாடமாகும்.
''எனக்கு கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அன்பு வாழ்வாதாரமாக கொடுக்கப் பட்டிருந்தது'' என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (இன்னீ கத் ருஜிக்து ஹுப்பஹா –ஸஹீஹ் முஸ்லிம் 4464) அந்த அன்பு எனக்கு கிடைத்த வரம் என்பதே இதன் கருத்து என விரிவுரையாளர் நவவீ கூறுகிறார்.
ஒரு வரலாற்று நாயகரை - மாபெரிய வாழ்நாள் சாதனையாளரை தன் அன்பால் இறுதிவரைக் கட்டிப்போட்டிருந்த்து கதீஜா அம்மையாரின் சாதனைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
தன்னை விட 15 வய்து இளைய ஆண்மகனை விரும்பி சுயமாகத் திருமண்ம் செய்து கொண்ட, உலகைப் புரட்டிப் போட்ட ஒரு புரட்சி வரலாற்றின் சாரதி.
''உலகின் சிறந்த பெண்மணி கதிஜா'' என்ற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்கு இன்றைய தலைமுறை பெண்கள் புதிய கண்ணோட்ட்த்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தியாகும்.
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா மத ரீதியாக அதிக கவனப்படுத்தலுக்குரியவர் என்பதை தாண்டி இன்றை பெண்ணிய தத்துவத்திற்கான ஒரு சரியாள அள்வீடாக அவர் திகழ்வதை அக்கறையுள்ளவர்கள் கவனிக்க வேண்டும்.
இந்திரா காந்தி அரசியலில் செல்வாக்கும் உறுதியும் மிக்க பெண்மணியாக இருந்தார். ஆனால அவர் நல்ல மனவியாக இருந்தாரா என்பது கேள்விக்குரியது. இது போன்ற பலவீனங்கள் இன்றைய புகழ் பெற்ற ஒவ்வொரு பெண்மணியிடமும் உண்டு. அந்த அம்சங்களையும் கணக்கில் கொண்டு கதீஜா அம்மையாரை ஒப்பீடு செய்து பார்த்தால் கதீஜா அம்மையாரின் பெருமையை முழுமையானதாக உணர்வீர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெரு வணிகச் சீமாட்டி யார் என்ற ஒரு தேடல் நடை பெறுமெனில் அம்மையார் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடைய ஒரு பெயர் மட்டுமே அதன் விடையாகக் கிடைக்கக்கூடும்.
கதீஜா அம்மையாரின் சுதந்திரமான அணுகுமுறை ஆச்சரியத்திற்குரியது. ஒரு வகையில் அன்றைய சமூகச் சூழல் அந்த சுதந்திரத்தை அவருக்கு வழங்கியிருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை இன்றைக்குள்ள சில பெண்கள் தங்களியே அதிகம் சுதந்திரம் பெற்றவர்களாக கருதிக் கொள்வதை கதீஜா அம்மையாரோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கேலியாகச் சிரிக்கத்தான் தோன்றும்.
ஒரு வெற்றிகரமான பெண்ணியத்தின் குறியீடாக திகழும் கதீஜா பிந்து குவைலித் ரளியல்லாஹு அன்ஹா ஏதோ வரலாற்றில் வாழ்ந்து முடிந்த பழைய பெயர் அல்ல. இன்றைய சூழலில் அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டும். ஒப்பீடுகள் செய்யப்பட வேண்டும்.
அவரது வெற்றிப்பணிகளின் கனபரிமாணம் அளக்கப் பட வேண்டும். அப்படிச் செய்யப்பட்டால் இன்றைய நவீனப் பெண்மணிகளுக்கு பல புதிய வழிகாட்டுதல்கள் கிடைக்க்கும். வாழ்க்கையைப் பற்றிய தெளிவுகளை பிறக்கும்.]
|
|
Read more...
|
|
கெட்ட ஜின்கள் தான் பேய்களா? பேய்கள் - விஞ்ஞான விளக்கம்! |
|
|
|
Friday, 06 January 2012 22:09 |
|

கெட்ட ஜின்கள் தான் பேய்களா? பேய்கள் - விஞ்ஞான விளக்கம்!
பேய்கள் போல் காட்சி தருவது கெட்ட ஜின்கள் என்று சொல்கிறார்களே இது உண்மையா?
"இறந்தவர்கள் ஆவியாக மாறி மீண்டும் உலகிற்கு வந்து, உயிருள்ளவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள்; இந்த ஆவிகள் தான் பேய், பிசாசுகள்’ என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
இந்த நம்பிக்கை குர்ஆன் ஹதீசுக்கு முற்றிலும் முரணானது. பேய் பிசாசுகள் இருக்கின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் குர்ஆன் ஹதீஸை மறுத்தவராவார்.
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றைஅவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 39:42)
|
|
Read more...
|
|
கவலையை மறக்கும் கலை! |
|
|
|
Wednesday, 06 July 2011 07:21 |
|
கவலையை மறக்கும் கலை!
கவலையை விரட்டுங்கள்
கவலை மகிழ்ச்சிக்கு எதிரி. கவலைக்கு மனதில் இடம் கொடுக்காதீர்கள். கொடுத்தால் வாழ்க்கையே திசைமாறிப் போகும். அதை தவிர்க்க சாதுர்யம் அவசியம்.
கவலை ஏன் வந்தது? அதை தீர்க்க வழி என்ன? என்று புரியாமல் கவலையை வளர்த்து பலர் மனநோயாளிகளாக மாறிவிடுகிறார்கள். மேலும் பலர் தவறான வழிகாட்டுதல்களால் மது, மாதுக்கு அடிமையாகிறார்கள். இன்னும் சிலர் திருட்டு, வஞ்சகம், குறுக்குவழி என திசைமாறிப் போகிறார்கள்.
இன்றைய இயந்திர வாழ்க்கையில் கவலைகள் இல்லாத மனிதர்களே இல்லை. இதற்கு என்ன காரணம்? கவலைக்கு மருந்து எது? என்பது பற்றி இந்த கட்டுரையில் விளக்கப்படுகிறது.
|
|
Read more...
|
|
ஆண்களைக் கெடுக்கும் பெண்களின் கவர்ச்சி ஆடைகள்! |
|
|
|
Friday, 06 January 2012 21:55 |
|
அமெரிக்க ஆய்வாளர்கள் இன்றுதான் சொல்கிறார்கள், இஸ்லாம் அன்றே சொன்னது!
பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும் கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும்இ முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும்இ அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும்இ தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.
|
|
Read more...
|
|
பெண்களை ஏங்க வைத்து அவர்கள் வாழ்வை நாசமாக்கும் ஊடகங்கள் |
|
|
|
Friday, 06 January 2012 21:18 |
|
பெண்களை ஏங்க வைத்து அவர்கள் வாழ்வை நாசமாக்கும் ஊடகங்கள்
[ பிரபல கடைகளில் வாங்கிய ஆடைகள், அணிகலன்களை பெண்களுக்கு அணிவித்து, இந்த ஆடை இந்த விலை, இந்த ஆபரணம் இந்த விலை என்று படம் போட்டு, விளக்கம் அளிக்கிறார்கள். நகை, விலை உயர்ந்த ஆடைகள் மீது ஆசை இல்லாத பெண்களைக் கூட, ‘இதில் ஏதாவது ஒன்றையாவது நம் வாழ்க்கையில் வாங்க முடியுமா?’ என்று ஏங்க வைத்துவிடுகிறார்கள்.
சமையல், வீட்டு வேலை, குடும்பம் தாண்டியும் பெண்கள் அறிந்துகொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. ‘பெண்களுக்கு இது போதும்’ என்று நீங்களாகவே தீர்மானித்து விடாதீர்கள். இந்த விஷயங்களைத் தாண்டி எகிப்து புரட்சி, உலகப் பொருளாதாரம், பூமியின் வெப்பம் உயர்தல் போன்ற விஷயங்களைப் பெண்களாலும் அறிந்துகொள்ள முடியும். விவாதிக்க முடியும். தங்கள் பங்களிப்பைச் செலுத்த முடியும்.]
|
|
Read more...
|
|
நடத்தை கெட்ட மனைவியுடன் வாழலாமா? |
|
|
|
Friday, 06 January 2012 21:46 |
|
கேள்வி : கள்ளக்காதல் செய்தால் திருமண உறவு முறிந்துவிடுமா? இத்தவறைச் செய்தவரை மன்னித்து அவருடன் வாழ்க்கை தொடரலாமா?
பதில் : கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் வேறு ஒருவருடன் கள்ள உறவு வைத்தால் இதனால் அவ்விருவருக்கிடையே உள்ள திருமண உறவு முறிந்துவிடாது.
தவறு செய்தவர் தான் செய்த தவறுக்காக வருந்தி இனி இந்தத் தவறை செய்யமாட்டேன் எனக் கூறி மன்னிப்புக் கேட்கிறார். இதை ஏற்றுக் கொள்வதற்கும் மறுப்பதற்கும் அவருடைய வாழ்க்கைத் துணைக்கு உரிமையுள்ளது. அவர் இதை ஏற்றுக் கொண்டால் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாகவே வாழலாம்.
அவர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் இந்த குற்றத்தைச் செய்தவரை விட்டும் பிரிந்து விடலாம். ஆண் தவறு செய்திருந்தால் பெண் தனக்குரிய விவாகரத்து முறையின் படி (குலஃ) கணவனிடமிருந்து பிரிந்து கொள்ளலாம்.
பெண் தவறு செய்திருந்தால் அதை அவன் அம்பலப்படுத்துவதில் உறுதியாக இருந்தால் லிஆன் என்ற முறையில் பிரிந்து கொள்ளலாம்.
|
|
Read more...
|
|
வரதட்சணை வன்கொடுமைக்கு யார் காரணம்? |
|
|
|
Friday, 06 January 2012 20:52 |
|
வரதட்சணை வன்கொடுமைக்கு யார் காரணம்?
வரதட்சணை ஒரு வன் கொடுமை என்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள்.(பணத்திமிர், பேராசை கொண்டவர்களைத் தவிர). இந்த வரதட்சணை எனும் கொடுமையின் காரணமாக, இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும், பெண்கள் அவதிக்குள்ளாக்கப்பட்டும், பரிதாபகரமான முறையில் மரணத்தை தழுவும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சட்டம் புத்தக கட்டுக்களிலும், ஆள்வோர் மற்றும் பணத்திமிர் கொண்டோரின் சட்டைப்பையில் படுத்து தூங்குகிறது.
இந்த அவலம் எல்லா மத மக்களிடமும், சாதிகளிலும் புரையோடி,இன்று வரதட்சணை கொடுப்பது ஒரு பேஷன் போன்று ஆகிவிட்டது. இந்த அவலங்களுக்கெல்லாம் யார் காரணம்? இந்த வரதட்சணையால் வரும் கேடு என்ன? அதற்கு இஸ்லாம் என்ன தீர்வு சொல்கிறது? என இன்ஷா அல்லாஹ் அலசுவோம்.
இப்பழக்கம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் இது அவாளின் அன்பளிப்பு. இது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முடிவில் தமிழக முஸ்லிம்களை கடிக்க வந்திருக்கும் நச்சுவரம். இவ்வரதட்சணை கொடுமை எய்ட்ஸ் நோயாகப் பரவி ஜாதி மத பேதமின்றி எல்லோரையும் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?
|
|
Read more...
|
|
வலைதளங்களை குறிவைக்கும் வக்கிர கும்பல் |
|
|
|
Friday, 06 January 2012 20:41 |
|
வலைதளங்களை குறிவைக்கும் வக்கிர கும்பல்
சமூக வலைதளங்கள் மூலம், பள்ளி, கல்லூரி மாணவியரை குறிவைத்து மோசடி செய்யும் வக்கிர கும்பல்களின் செயல்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் மாணவியர் மட்டுமின்றி, பெற்றோரும் உஷாராக இருக்க வேண்டும்.
இன்றைய நவீன உலகில், மக்களின் அடிப்படை தேவைகளில், மொபைல்போன் மற்றும் இன்டர்நெட்டும் இடம்பிடித்துள்ளன. பல்வேறு துறைகள் சார்ந்த தகவல்களை நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள இன்டர்நெட் உதவுகிறது. எந்த ஒரு புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் சாதகம், பாதகம் இரண்டும் கலந்திருக்கும். அந்த வகையில் பல்வேறு சிறப்பம்சங்களை இன்டர்நெட் கொண்டுள்ள போதும், சைபர் கிரைம் குற்றங்கள் அதிகளவில் நடக்க இது முக்கிய காரணமாக உள்ளது.
பிறருடன் பேசவும், எஸ்.எம். எஸ்., அனுப்பவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த மொபைல்போன்கள், தற்போது இன்டர்நெட் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனை செய்யப்படுகிறது; வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.பண்டிகை நாட்கள் மட்டுமின்றி, தினமும் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, அதன் மூலம் தங்களின் அன்பை பரிமாறி கொள்வதை வழக்கமாக கொண்டு பலர் செயல்பட்டு வருகின்றனர்.
|
|
Read more...
|
|
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு |
|
|
|
Friday, 06 January 2012 22:30 |
|

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு - ஓர் வாழ்வியல் கட்டுரை
பணம், பதவி, புகழ் இருந்தால் சுகத்தோடு வாழலாம் என்ற தவறான எண்ணம் நம்மிடையே இருக்கிறது. ஆனால் பணம், புகழ், பதவி இருந்தால் மட்டும் வாழ்க்கைக்குப் போதுமானதல்ல. ஒரு மனிதன் தன் நிலை தவறாது, தனித்தன்மையுடனும், சிந்திக்கும் ஆற்றலுடன் இருந்தால் மட்டுமே சிறப்பாக வாழ முடியும். அதற்கு உதாரணமாக ஒரு பட்டு வியாபாரியும் அவனுடைய சக நான்கு வியாபாரிகளின் கதையினை
இங்கே சொல்லுவதுப் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு பட்டு வியாபாரி நல்ல தொழில் செய்து நாலு காசு சம்பாதித்தார். ஆனால் அவர் போல தனது நான்கு வியாபாரிகளுக்கும் வருமானமில்லை. அந்த பட்டு வியாபாரி மீது பொறாமைப் பட்ட மற்ற வியாபாரிகள் அவரை குழப்பத்தில் ஆழ்த்த முடிவு செய்தார்கள். ஒரு நாள் காலை பட்டு வியாபாரி தனது வீட்டிலிருந்து வெள்ளை பைஜாமா மற்றும் குர்த்தா அணிந்தும் தலையில் வெள்ளைத் தொப்பியுடனும் புறப்பட்டார் அவர் கடைக்கு.
வழியில் அவர் மீது பொறாமைப் பட்ட சக வியாபாரி முதாலமவர் அவரை வழிமறித்து உங்கள் ஆடை பிரமாதம் ஆனால் சிகப்புத் தொப்பிதான் சரியில்லை என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார். பாட்டு வியாபாரிக்கு தொப்பியின் நிறம் பற்றி சந்தேகம் வந்து எடுத்துப் பார்த்து உறுதி செய்து விட்டு கொஞ்ச தூரம் நகன்றார். இரண்டாவது வியாபாரி அவரைப் பார்த்து உங்கள் உடை நேர்த்தியாக உள்ளது ஆனால் பச்சைத் தொப்பிதான் சரியில்லை என்று சொல்லி விட்டுச் சென்றார்.
|
|
Read more...
|
|
ஐந்தாவது பரிமாணத்தில் போராடுதல் |
|
|
|
Friday, 06 January 2012 21:05 |
|
ஐந்தாவது பரிமாணத்தில் போராடுதல்
"யுத்த முறைமைகளில் ஐந்தாம் பரிமாணம்" என்று அது அழைக்கப்படுகின்றது. நிலம், கடல்,வான், மற்றும் விண்வெளிகளுக்கு மேலதிகமாக இன்று இணைய(சைபர்) உலகமும் புதிய யுத்த முன்னரங்காக பரிமாற்றம் அடைகின்றது.
தொழில்நுட்ப புதுமைகள், இன்றைய நாளின் யுத்த உத்திகளை மாற்றிக்கொண்டு வருகின்றன. இன்றைய உலகனிது ஆயுத களஞ்சியத்தில் புதிய கருவிகள் சேர்ந்துள்ளன. மின்காந்தவியல், நவீன தகவல்கள், மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் உதவியினால், புது வகையானதொரு இலத்திரனியல் யுத்தம் ஒன்று உருவாகியுள்ளது. "சைபர் யுத்தம்" அல்லது "இணைய யுத்தம்" என்று அழைக்கப்படுகின்ற இந்த யுத்தமானது பல்வேறு அரசாங்கங்களுக்கும், இராணுவங்களுக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைவதாக கருதப்படுகின்றது.
"உங்களிடம் ஒருசில கெட்டித்தனமான மனிதர்களும், ஒரு கணினியும் இருந்தால் நிறைய விடயங்களை சாதிக்கலாம். யுத்த வானூர்தியோ, யுத்த தாங்கியோ, இராணுவமோ தேவைப்படாது. உங்களது நாற்காலியில் அமர்ந்தவாறே இன்னொரு நாட்டிற்குள் ஊடறுத்துச் சென்று பாரிய சேதத்தை ஏற்படுத்தலாம்" என்று Alon Ben David என்கிற இஸ்ரேலினுடைய Channel 10 இனது இராணுவ ஆய்வாளர் குறிப்பிடுகின்றார்.
|
|
Read more...
|
|
உயிர்வாழ இன்றியமையாதது! |
|
|
|
Friday, 06 January 2012 20:58 |
|
உயிர்வாழ இன்றியமையாதது!
உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் கூறியதாக அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களில் ஒருவர் சாப்பிட ஆரம்பித்தால் பிஸ்மில்லாஹ் என்று சொல்லட்டும், அப்படி ஆரம்பத்தில் சொல்ல மறந்துவிட்டால் இடையில் பிஸ்மில்லாஹி அவ்வலுஹு வ ஆஹிருஹு என்று சொல்லட்டும்.
மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது உணவும், நீருமாகும் என்பது சொல்லித்தெரியவேண்டியது இல்லை.
அந்த உணவின் ஊட்டத்தைக்கொண்டுதான் மனிதனின் உடல் வளர்கிறது.
ஆகவே, உணவின் விஷயத்தின் இஸ்லாம் நிறையவே கண்காணிக்கிறது.
இறைவன் குர்ஆனில் ஒரு இடத்தில் குறிப்பிடும் ஆயத் இந்த இடத்திற்கு மிகப்பொருத்தமானதாகும்.
|
|
Read more...
|
|
கொடுக்க வேண்டியவர்கள் கேட்பது எவ்வளவு கொடுமையானது! |
|
|
|
Friday, 06 January 2012 20:45 |
|
வரதட்சணை ஒரு ''வன் கொடுமை''!
கொடுக்க வேண்டியவர்கள் கேட்பது எவ்வளவு கொடுமையானது!
ஆணும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டாம்!
பெண்ணும் ஆணுக்குக் கொடுக்க வேண்டாம் என்று கூறாமல்
ஆண்கள் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது,
உலகில் எந்த மார்க்கமும் - இயக்கமும் கூறாத
வித்தியாசமான கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது.
யாரும் யாருக்கும் எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்பதைவிட ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்மென்பதை தான் நியாயமானது. அறிவுப் பூர்வமானது. என்பதைச் சிந்திக்கும் போது உணரலாம்.
|
|
Read more...
|
|
அநியாயக்காரனைப் பற்றி அல்குர்ஆன் |
|
|
|
Friday, 06 January 2012 08:21 |
|
அநியாயக்காரனைப் பற்றி அல்குர்ஆன்
இன்று எங்கு நோக்கினும் வரம்பு மீறி அநியயம் செய்யக்கூடியவர்கள் மிகைத்து காணப்படுகின்றனர். அல்லாஹ்வின் எச்சரிக்க அவர்களிடம் போய்ச்சேர வேண்டியது மிகவும் அவசியம். உலகில் வாழும் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகளே! எனவே இதிலுள்ள இறைவனின் எச்சரிக்கைகளை மக்களுக்கு எடுத்து வைத்து அவர்களை நல்வழிப்படுத்துவது ஒவ்வொருவரின் பொறுப்பாகவும் இருக்கிறது.]
o 'அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்?'' (அல்குர்ஆன் 2:140)
o ''எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!'' (அல்குர்ஆன் 5:45)
o ''அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 6:21)
o ''இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.''. (அல்குர்ஆன் 6:33)
|
|
Read more...
|
|
அல்குர்ஆனை விளக்கும் ஹதீஸ்கள் |
|
|
|
Friday, 06 January 2012 08:06 |
|
அல்குர்ஆனை விளக்கும் ஹதீஸ்கள்
"உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களையும் (குர்ஆன்) ஞானங்களையும் (ஹிக்ம்) நினைவில் வையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவுடையோனும் (யாவையும்) நன்கறிந்தோனுமாக இருக்கின்றான்." (அல்குர்ஆன் 33:34)
மேற்கண்ட இறை வசனத்தில் ‘கிதாப்’ என்ற குர்ஆனைக் குறிக்க இறைவன் கூறிய சொல்லோடு இணைத்து ‘ஹிக்ம்’ என்ற சொல் ஸுன்னாவையே குறிக்கும் என்று எல்லா அறிஞர்களின் முடிவாகும்.
அல்லாஹ்வின் வழிகாட்டுதல் பொதிந்துள்ள குர்ஆனை அல்லாஹ் ஒரே நேரத்தில் அருளவில்லை. அதை ஓதிக் காண்பித்து அதன் வசனங்களை மக்களுக்கு விளக்கிக் காட்ட ஒரு தூதர் மூலமாகவே அருளப்பட்டது. குர்ஆனின் கருத்துக்கள் அந்த இறைத்தூதரின் வாழ்விலும், செயலிலும் நடைமுறைப் படுத்தப்பட்டன.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை பற்றி வினவப்பட்ட போது "அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே விளங்கியது" என அவர்கள் கூறிய பதிலில் குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் உள்ள பிணைப்பு தெளிவு படுத்தப்பட்டுள்ளது. எனவே குர்ஆனும், ஹதீஸும் ஒன்றில் ஒன்று தங்கி நிற்கும் ஒரு முழுமையான அங்கமாகும்.
"நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுள்ள வேதமும் உங்களிடம் வந்திருக்கிறது" (அல்குர்ஆன் 5:15)
|
|
Read more...
|
|
பெண்ணுக்கு ஓய்வென்பது எப்போது....?! |
|
|
|
Friday, 06 January 2012 08:48 |
|
58 – 60 வயதில் ஓர் ஆண் தன் வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட முடியும். ஆனால் ஒரு பெண்?

சலிப்பு - இந்த வார்த்தையை நாம் அடிக்கடி உபயோகப்படுத்துகிறோம். மதியம் சமைத்த உணவை இரவும் கொடுத்தால் சலிப்பு வந்துவிடுகிறது. ஒரு சேனலைத் தொடர்ச்சியாக அரை மணிநேரம் பார்க்க முடிவதில்லை.
ஒரே விஷயத்தைப் பேசிக்கொண்டிருந்தால் சலிப்பு ஏற்படுகிறது. ஆனால் காலம் காலமாகப் பெண்கள் ஒரே வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்களே அவர்களுக்கு மட்டும் சலிப்பு என்பதே கிடையாதா?
படித்தவராக இருக்கலாம். படிக்காதவராக இருக்கலாம். ஏழையாக இருக்கலாம். வசதியானவராக இருக்கலாம். வேலைக்குச் செல்லலாம். வேலைக்குச் செல்லாமல் இருக்கலாம். எப்படி இருந்தாலும் இந்த வேலைகளில் இருந்து மட்டும் தப்பிக்க முடியாது.
அதிகாலையிலேயே எழ வேண்டும். வாசல் பெருக்கி, கோலம் போட வேண்டும். பால் காய்ச்ச வேண்டும். ஒவ்வொருவரும் எழுந்து வர வர அவர்கள் விருப்பப்படி கலந்துகொடுக்க வேண்டும். காய் நறுக்க வேண்டும். காலை டிபன், மதிய உணவு என்று பம்பரமாகச் சுழல வேண்டும்.
வீட்டில் உள்ள பெரியவர்களுக்குப் பிரத்யேக உணவும் இருக்க வேண்டும். குழந்தைகள் விரும்பும் வகையில் அவர்களுக்குப் பிடித்த உணவும் செய்ய வேண்டும். (இரண்டு குழந்தைகள் இருந்தால் இரண்டும் வெவ்வேறு உணவுகளைக் கேட்கும்!) ஞாபகமாக செய்த ஐட்டங்களை அடிக்கடி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
|
|
Read more...
|
|
வாழ்வு இரண்டு வகை! |
|
|
|
Friday, 06 January 2012 07:06 |
|
வாழ்வு இரண்டு வகை - ரஹ்மானின் அடிமை, ஷைத்தானின் அடிமை.
அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள். நீ என்னை சொற்பொழிவுக்கு அழைத்து வந்தாய். இறுதிவரை உரை, செவிமடுக்க தவ்பீக் வாய்ப்பு தா.
துஆ, பிரார்த்தனையுடன் அமர்வீர்! நீங்கள் ஏழை, பணக்காரர், ஆண், பெண் யாராக இருந்தாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டு வந்த முபாரக்கான தீனை கற்க வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றினால் அல்லாஹ் உம்மீது மதிப்பு தருவான்.
சொத்து, உடைமை, குறைவு - நிறைவு அல்லாஹ்வின் பார்வையில் மாறுபாடு இல்லை. ஏழை மதத்தை கடைப்பிடித்தால் அவரளவுக்கு சுவனம் செல்வார். பணக்காரர் மார்க்கத்தை கடைப்பிடித்தால் அவரளவுக்கு சுவனம் பிரவேசிப்பார்.
நபித்தோழர்களில் பல்வேறுபட்ட நிலையில் சஹாபிகள் அவை நிறைந்தனர். பிலால் ரளியல்லாஹு அன்ஹு கருப்பு. நீக்ரோ அடிமை. ‘‘சுவனத்தில் நடக்கும் சப்தம் கேட்டேன்''. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கினார்கள்.
ஹதீஸில் வருகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒட்டகத்தில் சுவர்க்கத்தில் நுழைவார்கள். ஒட்டகத்தின் கயிறு பிலால், கரங்களில் பிடித்திருப்பார். ஓர் அடிமைக்கு இந்த உயர்வு கிடைக்கிறது.
ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சஹர் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது, பிலால் ரளியல்லாஹு அன்ஹு வந்து சஹர் நேரம் முடிந்து விட்டதாக கூறினார்கள். இரண்டாவது முறையும் கூறினார்கள். மூன்றாவது தடவை கூறினார்கள்; ''அல்லாஹ் மீது ஆணையாக சஹர் முடிந்துவிட்டது''.
சாப்பிடுவதை உடன் நிறுத்திய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ''சஹர் நேரம் இன்னும் இருக்கிறது. அல்லாஹ் மீது நீங்கள் ஆணையிட்டதால் இறைவன் சஹர் நேரத்தை முற்படுத்தி விட்டான்''. ஏழையாகவிருந்தாலும் பிலாலிடம் தீன் இருந்ததால் உயர்வு கிடைத்தது.
|
|
Read more...
|
|
திருமணத்தின் நறுமணம் மறுமணத்திலும் உண்டு! |
|
|
|
Friday, 06 January 2012 07:39 |
|

[ ஆணாயினும், பெண்ணாயினும், கன்னிப்பெண்களோ, விதவைகளோ யாராக இருந்தாலும் அவர்கள் திருமண வயதை அடைந்து வாழ்க்கைத் துணை இல்லாதவர்களாக இருந்தால் திருமண பந்தம் மூலம் ஒரு துணையைத் தேடி நல்வாழ்வை அமைத்துக் கொடுப்பது ஒவ்வொருவர் மீதும் கடமை என பொறுப்பு சாட்டுகிறது இஸ்லாம்.]
உலகில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் தங்களுக்கான துணையை முறைப்படித் தேடி திருமண பந்தத்தில் ஈடுபடும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இத்திருமணம் வாரிசுகளை உருவாக்கவும், கற்புக்குப் பாதுகாப்பாகவும், உலக இன்பங்களை அனுபவிக்கவும் அவசியமானது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று.
ஆணோ பெண்ணோ, அவர்களின் திருமண வயதை அடைந்துவிட்டால் பெற்றோர்கள் அவசரப்படுத்தி கஷ்டத்தின்மேல் கஷ்டம் அனுபவித்தாவது திருமணத்தை நடத்தத் துடிக்கின்றனர். ஆனால் இந்த இல்லற இன்பத்தை சிலகாலம் சுவைத்துவிட்டுக் கணவனை இழந்து கைம்பெண்ணாக நின்றால் அவர்களுக்கென மற்றொரு துணைவனைத் தேடி இழந்த வாழ்வை மீட்டுக் கொடுக்க எவரும் முயற்சிப்பதில்லை.
இதுமட்டுமல்லாமல், ஊரிலோ, குடும்பத்திலோ, ஏன் அவர்கள் பெற்ற குழந்தைகளுக்கோ ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும்போது அந்த அப்பாவி விதவைகள் எதிர்பட்டால் அந்த காரியம் நிறைவேறாது என்று அந்தப் பெண்ணை ஏசியவர்களாகவே மீண்டும் வீடு திரும்பிவிடுவர். இதுபோன்று விதவைகளை வேதனைப்படுத்தும் ஏராளமான விஷயங்கள் பெரும்பாலும் நமது நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது.
|
|
Read more...
|
|
"உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்தது நற்குணமுள்ள மனைவி" |
|
|
|
Wednesday, 04 January 2012 08:11 |
|
மனஅமைதி பெறுவதே திருமணத்தின் உயரிய நோக்கமாகும்
[ கணவனின் வாரிசைச் சுமக்கப் போகும் பெண் சிறந்த ஈமானிய உணர்வுள்ள பெண்ணாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் முடிவு செய்ய வேண்டும். பயிர் செழித்து வளர முதல் தகுதி விதையிடப்படும் நிலம் நல்லதாக இருத்தல் மிக அவசியம்.
நற்குணம் என்பது மறுமையில் நியாயத்தராசுத் தட்டில் மிகவும் கனமானது. அழகுக்கும் பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் நற்குணமுள்ள பெண்ணைத் திருமணம் செய்யவே ஆண்கள் முன்வர வேண்டும். அப்படிப்பட்ட பெண்ணே கணவனிடம் அன்பும் பரிவும் காட்டுவாள். விட்டுக்கொடுத்து வாழ்க்கையை ஒளிமயமாக்குவாள். அதையேதான் மணமகனைத் தேர்வு செய்வதற்குப் பெண்ணும் அளவுகோலாகக் கொள்ள வேண்டும்.
"ஒருவருக்கு நேர்வழி காட்டுவது அல்லாஹ்வின் கையில் உள்ளது" என்று கூறி, அதற்காக எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது ஒரு முஃமீனுக்கு அழகல்ல. ஒருவர் மற்றவருக்கு இபாதத்துக்களின் கதவுகளை திறக்க ஆசை காட்ட வேண்டும்.
எத்தனை வீடுகளில் மனைவி தொழும்போது அல்லது குர்ஆன் ஓதும்போது தொந்தரவு செய்கின்ற பிள்ளைகளைக் கணவன்மார்கள் ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றோ, தொழுகை நேரம் வந்து விட்டால், ‘தொழுதுவிட்டு வா, அதுவரை நான் அடுப்பைக் கவனிக்கிறேன்’ என்றோ கூறுகிறார்கள்?. நேர்வழியில் நடப்பதற்கு ஒருவருக்கொருவர் துணை நிற்க வேண்டும்.]
|
|
Read more...
|
|
|