வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

Home

விற்பனையில் 

 

விரைவில்

Links 3

Link - 5

Latest Topics

பணத்துக்காக சிசேரியன் Print E-mail
Wednesday, 10 March 2010 09:45
9 ஆசிய நாடுகளில் சமீபகாலமாக பணத்துக்காக சிசேரியன் மூலம் மகப்பேறு செய்யும் மனிதநேயமற்ற செயல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தை சிசேரியன் மூலமே பிறப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

சுயப்பிரசவத்தால் கர்ப்பிணிகளுக்கும், பிறக்கும் குழந்தைகளுக்கும் உயிருக்கும் ஆபத்து மிக மிகக் குறைவு. இதனால் கூடுமானவரை சுயப்பிரசவத்துக்கே முயற்சிக்க வேண்டும் என்று அனைத்து நாடுகளிடமும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.
Read more...
 
ஜோதிடக்கலை பொய்த்து சினிமா நடிகையின் காலில் சரணடைந்தது Print E-mail
Wednesday, 10 March 2010 09:28

அதிரை.எம்.பாரூக்

[ அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழி கெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன். (6:119)

சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் விஷயங்களை நாளொரு மேனிப் பொழுதொரு வண்ணம் தினம் ஒரு இல்லாத தகவலை கிரியேட் செய்து கொடுத்துக் கொண்டிருந்த அவாள்கள் நடத்தும் பத்திரிகைகள் நித்யானந்தா மேட்டரில் கழுவிய மீனாய் நழுவியது.

முதல் நாள் நித்யானந்தா ஆஸ்ரமம் சூறை என்று மட்டும் தகவலை கொடுத்துவிட்டு அடுத்தடுத்த நாட்களில் அதை கிராஃபிக்ஸ் என்றும், தொழில் நுட்பம் என்றும், சதித் திட்டம் என்றும், அதை மறுத்ததை பரபரப்புப் பேட்டி என்றும் எழுதித் தள்ளுகின்றனர்.

ஆஸ்ரமங்களில் இறையருள் இல்லை என்பதை அறிந்த கேடிகள் இந்தியாவின் கோடான கோடி அப்பாவி இந்து மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி கோடி, கோடியாய் பணம் பண்ணுவதற்காக சாமியார் வேடம் தரித்து ஆஸ்ரமங்கள் அமைத்து அவற்றை உல்லாச பீடங்களாக மாற்றுகின்றனர்.]

அறிவுச் சுடராம் அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சத்தியப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் மக்களிடத்தில் நிலவும் அறியாமையை அகற்றுவதற்காக அரும்பாடுபட்டார்கள்.

மக்காவின் புனித இறை இல்லம் கஃபாவில் இணைவைப்பாளர்களால் நிருவப்பட்டிருந்த 360க்கும் மேற்பட்ட சிலைகளில் சில பிரபலமான சிலைகளுக்கு மக்காவிற்கு வெளியிலும் கிளை கோயில்கள் நிருவப்பட்டிருந்தன.

Read more...
 
இஸ்லாத்தைத் தகர்க்க முயலும் ஸூஃபித்துவம் Print E-mail
Wednesday, 10 March 2010 08:41

.சீ முஹம்மது ஜலீல் ( மதனீ )

[ சூஃபித்துவ வழிகேடனாகிய இப்னு அரபியின் கவிதையில்
; ''மனிதனே கடவுள். கடவுளே மனிதன் இப்படியிருக்க யார் யாருக்குக் கட்டளையிடுவது?''

''நீ மனிதனென அழைத்தாலும் கடவுளென அழைத்தாலும் இரண்டுமே ஒன்றுதான் இப்படியிருக்க யார் யாரை வணங்குவது.?'' (அல்புதூஹாத்துல் மக்கிய்யா213 )

''என் மதமும் என் மாற்றுமத நன்பனின் மதமும் ஒரே மதமே என்றில்லாவிட்டால் என்னால் தூங்க முடியாது. என்னுள்ளம் எல்லா மதங்களையும் ஒன்றாகவே நோக்கும் நிலைக்கு வந்து விட்டது. அதிலே கிறிஸ்தவப் பாதிரிகளுக்கும் இடமுண்டு. சிலை வணங்கிகளுக்கும் இடமுண்டு. கஃபாவுக்கும் இடமுண்டு. அது ஒரே நேரத்தில் தௌராத்தாகவும் குர்ஆனாகவும் இருக்கின்றது

ஒரு மனிதன் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போதும் அல்லாஹ்வுடனேயே உறவு கொள்கின்றான் ... நான் அவனை அல்லாஹ்வை வணங்குகின்றேன் அவன் என்னை வணங்குகின்றான். ( ஸூஃபிய்யா 17 )

இக்கொள்கையில் வீழ்ந்து கிடக்கும் சில ஆலிம்கள் செல்லாத டிக்கெட்டை வைத்துக்கொண்டு மறுமை என்னும் மகத்தான ஊருக்கு பயணிக்கும் முயற்சியை காணும்பொழுது, பரிதாபம்தான் வருகிறது. அதே சமயம் இவர்களால் வழி கெடுக்கப்படும் அப்பாவி பொது மக்களுக்கு உண்மையை ஓங்கி எடுத்துரைத்து நேர்வழிப்படுத்துவது ஒவ்வொரு முஃமீன்களின் கடமையாக இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். ]
Read more...
 
பெண்களும் மாரடைப்பும்! Print E-mail
Tuesday, 09 March 2010 09:04

Dr. ஜெயராஜா, MD., DM.,

பெண்களுக்கு மாரடைப்பு நோய் 45 வயதிற்கு முன் வரை பெரும்பாலும் வருவதில்லை. ஏனெனில் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார் மோன் அவர்களது இருதயத்தை பாதுகாக்கிறது. ஆண்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரலாம். அது போலவே பெண்களுக்கும் மாதவிலக்கு நின்ற பிறகும் 45 வயதிற்கு மேலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

இருதய வால்வுகளில் ஏற்படும் நோய் பற்றி சொல்லுங்கள் டாக்டர்?

இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு இரத்தம் செல்ல மூடி மூடித் திறக்கும் வகையில் உள்ள வழிதான் வால்வு எனப்படும். 5 வயது முதல் 15 வயது வரை வயது வரை உள்ளவர்களை கீல் வாதக் காய்ச்சல் தாக்குவதால் இதய வால்வுகளில் நோய் ஏற்படுகிறது.

இந்த நோய்க்கான அறிகுறிகளை எப்படி தெரிந்துகொள்வது?

கை, கால் போன்ற அங்கங்களில் உள்ள முக்கியமான பெரிய மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். தொடர்ந்து பலத்த வலி உண்டாகும். மூட்டுவலி ஏற்படும். அதே சமயத் தில் இதய வால்வுகளும் தாக்கப்பட்டு பழுதுபடும். கீல்வாதக் காய்ச்சல் (ருமாட்டிக் பீவர்) என்று குறிப்பிடப்படும் இந்த நோயானது நம் இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகிறது.
Read more...
 
பிள்ளைகளின் ஆளுமையும் பெற்றோர்களின் முழுமையும் Print E-mail
Tuesday, 09 March 2010 08:08

[ கருவிலேயே குழந்தையின் கல்வி ஆரம்பிக்கப்படுகின்றது. அக்கல்வியை நற்கல்வியாகப் புகட்ட வேண்டிய பொறுப்பு பெற்றோர்களிடத்தில் தான் தங்கி இருக்கிறது. அக்கல்வியை "எந்தக் குழந்தையும் நல்லகுழந்தை தான் மண்ணிற் பிறக்கையிலே - அது நல்லது ஆவதும் தீயது ஆவதும் அன்னை வளர்ப்பினிலே..." என்கிறது ஒரு கவிஞரின் பாடல். உண்மை தான். ஆனாலும் தாய் மட்டும் இதற்குப் பாத்திரவாளியல்ல. தந்தையும் தான். நிச்சயமாக குழந்தையிலே எந்தக் கள்ளம் கபடமும் கெட்ட நடத்தையும் பிறக்கும் போது இருப்பதில்லை.

கருவுற்ற நாளிலிருந்து அறிவுச் சிந்தனைகளை நல்லெண்ணங்களை கணவன்; மனைவியோடு பரிமாற வேண்டும். இப்படி செயற்படும் போது கருவிலே இவை பதியும். இவை சிறந்த கல்வியாக பிள்ளைக்கு உருவாகும், உதவும்.

பிள்ளை மணலாலே பாதை அமைக்கும். பாலம் உருவாக்கும். வீடு கட்டும், பூக்கள் அமைக்கும், இன்னும் ஏதோ ஏதோவெல்லாம் செய்யும். இவற்றிலெல்லாம் பிள்ளையின் புத்திக் கூர்மை தெரியும். கலைநயம் காட்சியளிக்கும். இலட்சியம் கூடத் தென்படும். ஆகவே மனமார பிள்ளைகளை விளையாட விடவேண்டும்.

"ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி" என்பதற்கேற்ப பிள்ளையின் வளர்ச்சி இரண்டு விதமாகவும் இருக்க வேண்டும். ஆளோடு சேர்ந்து அறிவும் வளர வேண்டும். அறிவு வளரும் போதுதான் ஆளுமை வளரும். எனவே இந்த விடயத்திலும் பெற்றோர் முக்கிய கவனம் எடுக்க வேண்டும்.]

Read more...
 
உலக மகளிர் தினமும்-இந்திய மக்களவை ஒதுக்கீடில் முஸ்லீம் பெண்கள் புறக்கணிப்பும்! Print E-mail
Tuesday, 09 March 2010 07:24

Dr. A.P.முஹம்மது அலி. Phd. I.P.S.(rtd)

[தமிழக்தில், 234 எம்.எல்.ஏக்கள் உள்ள சட்டமன்றத்தில் 1991 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பாக ஜீனத் சர்புதீன் எம்.எல்.ஏவாக இருந்தார். அதன் பின்பு அ.இ.அ.தி.மு.க எம்.எல்.ஏவாக பதர் செய்யது 2006 ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திரா மாநிலம் இதை விட மோசம். 34 பெண் எம்.எல்.ஏக்களில் ஒருவர் கூட முஸ்லிம் பெண்ணல்ல. ஆகவே முஸ்லிம் பெண்கள் அத்திப்பூத்தது போன்று பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

சாதாரண தமிழக சட்டமன்றத்திலே முஸ்லிம் பெண்கள் இடம் பெற்ற இடைவெளி 15 ஆண்டுகள் ஆனது என்றால் பாராளுமன்றத்தில் இடம் பிடிக்க குதிரைக்கு கொம்பு முளைக்கும் என்று பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் தான். அதுவும் இந்த இட ஒதுக்கீடு மசோதா 15 ஆண்டுகளுக்கு பின்பு காலாவதியாகிவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பின்பு எங்கே சில தலைவர்கள் சொல்லுவது போல பின்பு பார்க்க முடியும்?

முன்னாள் மண்டல் ஆதரவாளர், வி.பி.சிங்கிற்கு சங்கடமான நேரத்தில் ஆதரவு கொடுத்த சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால், ''இப்போது பெண்கள் ஒதுக்கீடு நிறைவேற்றுவோம், பின்பு முஸ்லிம்களுக்கும், பிற்பட்டோர் உள் ஒதுக்கீடு பற்றி யோசிப்போம்'' எனக் கூறுகிறார்கள். ''பார்க்கலாம்'', ''யோசிக்கலாம்'' என்ற வார்த்தைக்கு அர்த்தமே ஐயப்பாடு எழுப்புவதுதானே என்று அறியாதவர்களல்ல முஸ்லிம்களும், பிற்பட்ட மக்களும்.

ஆந்திர மாநிலத்தினைச்சார்ந்த மஜ்லிஸ் கட்சி எம்.பி ஒவாசி மசோதாவை எதிர்க்கிறார். முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என குரல் கொடுக்கிறார். ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இரண்டு எம்.பிக்களும், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி எம்.பியும் மௌனம் சாதிப்பது ஏன்?

ஓரு வேளை எதிர்ப்புக்களிடையே மகளிர் மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் முஸ்லிம் அமைப்புகள் முஸ்லிம் பெண்களினை அரசியல் விளிப்புணர்வு ஊட்ட தயாராக வேண்டாமா?]

Read more...
 
திருப்பூர் மொய்தீன் Print E-mail
Tuesday, 09 March 2010 08:43

பதவி பேறுகள் எதுவும் இல்லாமலே முப்பத்தைந்து ஆண்டுகள் தன்னலமற்ற அரசியற் பணி புரிவது என்பது அரசியல் உலகில் ஒரு அற்புத விந்தையாகும். அந்த விந்தையை காரிய சாதனையாக இயற்றி நம் மத்தியில் வாழ்ந்து மறைந்தவர் திருப்பூர் மொய்தீன். அவர் தமிழ்நாடு முஸ்லீம் லீக் துணை தலைவராகவும், சிறந்த பேச்சாளராகவும், வீர வாள் பரிசு பெற்ற தளபதியாகவும் விளங்கினார். 'தளபதி' என்ற அடைமொழியுடன் 'தளபதி திருப்பூர் மொய்தீன்' என்று அழைக்கப்பாட்டவர்.

தளபதி மொய்தீன் அவர்களுடைய அரசியல் வாழ்வு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பரந்துபட்டதாகும். "கொடி காத்த குமரன்" - திருப்பூர் குமரனும், திருப்பூர் மொய்தீன் அவர்களும் ஒரே ஊரவர்கள் மட்டும் அல்ல. ஒன்றாக அரசியல் என்னும் வேள்வி குண்டத்திலே குதித்தவர்கள். அந்நிய நாட்டு துணி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்டு இருவரும் அரசியல் அரங்கில் அடியெடுத்து வைத்தார்கள். இந்த எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு அங்கமாக கிளைத்த ரயில் வண்டி மறியலிலும் இருவரும் ஒன்றாகவே செயலில் இறங்கினர்.

மொய்தீன் அவர்கள் நாவன்மை மிக்க பேச்சாளர் ஆவார். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் தம் சிம்ம குரலால் இயக்க எழுச்சியை ஊட்டினார். ஆங்கில கல்வி மூலம் பட்டம் பெற்றவர்களும் தெளிவுபடுத்த முடியாத சிக்கலான அரசியற் பிரச்சினைகளை எல்லாம் தமக்கே உரிய கம்பீர தொனியில் கேட்போர் நெஞ்சை ஈர்க்கும் வகையில் விளக்க வல்ல ஆற்றல் பெற்று விளங்கினார். தான் தோன்றி தலைமை தனத்தை வெறுத்தவர். இயக்க ரீதியான கட்டுபாடுகளுக்கு பணியும் பண்பு உடையவர். சமுதாய பணியையே வாழ்கையின் லட்சியமாக வரித்து கொண்டவர்.
Read more...
 
கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் குறித்து அமைச்சருடன் பேச்சுவார்த்தை! Print E-mail
Tuesday, 09 March 2010 08:29

சென்னை: தமிழக அரசு கொண்டு வந்துள்ள தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009 என்ற கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் குறித்து இன்று தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் அனைத்து முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் குறித்து பரவலாக தமிழகத்தில் முஸ்லிம் சமுகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கடந்த பிப்ரவரி முதல் வாரம் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லவி ஏ.இ. அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் சென்னையில் 22 முஸ்லிம் அமைப்புகள் பங்குக் கொண்ட கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புரிந்து தமிழக அரசு முஸ்லிம்களின் நலனை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அரசிடம் இக்கோரிக்கையை வலியுறுத்த வல்லுனர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

Read more...
 
பெண்ணுரிமையும்! இன்றைய பெண்களும்!! Print E-mail
Monday, 08 March 2010 08:00

சகோதரி, ஃபரீதா ஃபுஜைரா-அமீரகம்.

[''முதியோர் சொல்லும், முழு நெல்லிக்கனியும்

முன்னால் கசக்கும்; பின்னால் தான் இனிக்கும்''

இது போல் தூரத்திலிருந்து பார்க்கும் போது அடிமையாக வாழ்பவர்கள் போல தெரியும்  முஸ்லீம் பெண்களை நெருங்கி பார்த்தால் அல்லாஹ்வின் அருளில் அவள் தனக்கு கொடுக்கப்பட்ட கடமைகள் அனைத்தையும் ஒழுக்கத்துடன் நிறைவேற்றி உண்மையான உரிமையுடன் உல்லாசமாக ஆனந்தமாக வாழ்கிறார்கள் என்பது புரியும்.]

தூணில்லா வானம் அமைத்து துயர் துடைக்க வழியும் அமைத்த வல்ல நாயனான அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்..

பாதுகாப்பு பெட்டகமாக விளங்கும் இந்த உன்னதமான இஸ்லாமிய மார்க்கத்தில் இறை அடிமையாக விளங்கும் எனக்கு இறைவன் கட்டளையிட்டுள்ள கடமைகளை போல் யாருமே அளிக்காத உரிமைகளையும் வழங்கியுள்ளான். இன்றைய பெண்ணான நான் அதை இன்பமாக அனுபவித்து ஈருலக நன்மை பெற காத்திருக்கிறேன் என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

பிறப்புரிமை: பெண்கள் பிறப்பதை கேவலமாக கருதிய அறியாமை காலத்தில் வெறும் போக பொருளாக பயன்படுத்தபட்ட மடமை காலத்தில் அவளும் இறைவனின் பிரஜை என்றும், அவளும் இப்பூமியில் வாழ தகுதியுடைய ஆத்மா என்றும் கூறி அவள் பிறக்கும் உரிமையை பெற்று தந்த உன்னதமான மார்க்கம் இஸ்லாம்.

'நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள், அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழக்கை வசதிகளையும்) அளிக்கின்றோம். அவர்களை கொல்லுதல் நிச்சயமாக பெரும் பிழையாகும். திருக்குர்ஆன் 17: 31
Read more...
 
நிச்சயிக்கப்பட்ட பெண்களைப் பார்ப்பதின் இஸ்லாமிய வரையரைகள் Print E-mail
Sunday, 07 March 2010 21:40

[ ஓவ்வொரு மனிதனுக்கும் தனது துணை இப்படி, இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் இருக்கலாம். இவ்வெதிர்பார்ப்புக்கள் திருமணத்திற்கு முன்னர் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் திருமண வாழ்க்கை ஜொலிக்கும்.இன்றைய சமூக சூழலில் பெண்ணுக்குறிய இந்த உரிமை கொடுக்கப்படும் வீதம் மிகவும் குறைந்துள்ளது.

சில வேளை பெற்றோர் மாப்பிள்ளையை காட்டாமலே ''நான் கீறிய கோட்டை எனது பிள்ளை தாண்டாது'' என இருமாப்பாக சொல்லிக் கொண்டு நேரடியாக திருமண ஒப்பந்தங்கள் நடை பெருகின்றமை பெண்ணுக்கு இழைக்கும் பெரும் கொடுமை என்று சொல்லலாம்.

அற்ப பணத்திற்காக தனது பிள்ளையை UK மற்றும் America மாப்பிள்ளைக்கு விற்றுவிடக் கூடிய பெற்றோர் பெண்ணுக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா? இல்லையா? என்பதைக் கேட்கத் தவறிவிடுகின்றனர். இதனால் சமூக அமைப்பில் பல்வேறு சிக்கல்கள் குறிப்பாக தலாக் மற்றும் கணவன் இருக்க இன்னொருவனோடு ஓடிப்போகும் சமபவங்கள் இடம் பெருவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.]

Read more...
 
வழிகேட்டிற்கு அழைத்துச் செல்லும் ஷாதுலிய்யா தரீக்கா! Print E-mail
Sunday, 07 March 2010 20:59

[ இன்று தமிழகத்திலே மிகப்பிரபலமாக இருக்கும் ஷாதுலிய்யா தரீக்காவை எடுத்துக்கொண்டால், இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலோ அல்லது அவர்களுக்குப் பின்னால் வந்த தாபியீன்கள் காலத்திலோ அல்லது அவர்களுக்குப் பிறகு வந்த தபஅ தாபியீன்கள் காலத்திலோ தோன்றியதில்லை.  

மாறாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தோன்றியதாகும். இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்தி கூறினார்கள்: ''செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.'' அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : முஸ்லிம் ]

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. அவனது சாந்தியும் சமாதானமும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அன்னாரின் குடும்பத்தவர்கள் மீதும், நபித்தோழர்கள் மற்றும் முற்றும் முஸ்லிமான நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக! ஆமீன்.

இஸ்லாம் என்பது இறைவனால் முழுமைப்படுத்தப்பட்ட ஒரு மார்க்கமாகும். அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகின்றான்:

''இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன். மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்''. (அல்குர்ஆன் 5:3)

Read more...
 
குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள் Print E-mail
Sunday, 07 March 2010 19:09

[ நமது குடும்பத்தைப் பற்றிப் பரப்பப்படும் வதந்திகளால் நமது நிம்மதி குறைந்தால் நமது நிலை என்ன? அதே நிலையைத் தானே மற்றவர்களும் அடைவார்கள் என்றெல்லாம் நாம் சிந்திப்பதில்லை.

இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் பலபடிகள் மேலே உள்ளனர். ஒரு பெண்ணின் குறைகளைப் பெரிதுபடுத்துவதிலும் வதந்திகளைப் பரப்புவதிலும் இவர்களுக்குக் கிடைக்கும் ஆனந்தமே அலாதியானது.

குடும்பங்களில் பிரிவை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு அவதூறுக்கு உண்டு.

அன்னியோன்யமாக இருப்பவர்களைப் பிரிப்பது தான் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பூட்டும் என்பதை இதிலிருந்து உணரலாம். மேலும் ''கோள் சொல்லித் திரிபவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது'' என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

தம்பதியரிடையே மனக்கசப்பு இருந்தால் அதை நீக்கி இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே முஸ்லிம்களின் பணியாக இருக்க வேண்டும். இந்தப் பணிக்காக பொய் கூட கூறலாம் என்று இஸ்லாம் கூறுகிறது.]
Read more...
 
அழிவுப் பாதையின் பாதாளத்தை நோக்கி! Print E-mail
Monday, 08 March 2010 07:12

[எல்லாரும் எல்லாமும் பெற அன்பு மட்டுமே போதாது நல்லறிவும் வேண்டும். நல்லறிவும் நம் வீடு தேடி வரும்; வீடு தேடி என்ன, நல்ல உள்ளங்களை தேடி நாடி வரும்; அழிவே வீடு தேடி வரும்போது அறிவு வீடு தேடி வராதா என்ன? எனவே உள்ளங்களை சுத்தமாக்கிட நற்போதனை சார்ந்த அறிவை வரவேற்பதை ஒவ்வொரு தனிப்பட்ட மனிதவும் கடமையாக்கிக் கொள்ள வேண்டும்.

தேசிய வார இதழ்- நாளிதழ் - குடும்ப, வார இதழ் என்று A சர்டிபிகேட் இல்லாமல் கவர்ச்சிப் படங்களை சென்சார் செய்யாமல் வெளியிடும் தைரியம் இந்த குடும்ப(?) இதழ்களுக்கு எப்படி வந்தது?. ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வரும் தினப்பத்திரிகைகளை பார்ப்பவர்களுக்குத் தெரியும். கூச்சப்பட வேண்டி நம்மை நெகிழச் செய்யும் படங்கள் - செய்திகள் தான் எத்தனை எத்தனை? யார் கொடுத்தது இந்த குடும்ப - தேசிய சர்டிபிகேட்,

சீர்கெடுக்கும் சேனல்களுக்கு பண மழை பெய்ய வறட்சி ஏதும் இல்லை. பணம் வெள்ளமும் - பணப் புயலும் போங்கள். நல்ல அமோக விளைச்சல். அதை சாகுபடி செய்ய மடையர்களாய் மக்கள். T.V. யில் வியாபாரம் இல்லாத எந்தப் பொருளையும் யாரும் வாங்காத நிலை அளவுக்கு தயிர் சாதத்திலிருந்து ஊறுகாய், பால், பவுடர், 4 சக்கர வாகனங்கள் வரை எந்த விளம்பரத்தை யார்தான் விட்டு வைத்தார்கள்? - சலூன் கடைக்கு மட்டும்தான் விளம்பரம் இல்லை. எல்லாம் T.V. மயம்; இல்லை இல்லை எல்லாம் T.V. மாயம்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரண சுற்றுலாத் தளங்களில் எங்கேயாவது ஒரு காதல் ஜோடியை பார்ப்பது அதிசயம்; அதுவும் ஆள் அரவமற்ற ஒதுக்குப் புறங்களில் பயந்து பயந்து பேசிக் கொள்வதை நாம் கண்டோம். ஆனால் இன்றோ சர்வசாதாரணமாக பஸ்களில் - பஸ் நிறுத்தங்களில் ஆரம்பித்து பார்க் - பீச்சுகளில் மற்றும் பொது இடங்களிலும் கூட காதல் - காம லீலைகள ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்து என்று ஆரம்பித்து எழுதக் கூசும் அசிங்கங்கள் நடக்கின்றன.

பொழுது போக்கும் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் உலாவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவதை விட நம்மை நாமே பழுது பார்த்துக் கொள்ள ஒவ்வொரு நொடித் துளியையும் பயன்படுத்திக்கொண்டு பண்படுவோம். அதன் மூலம் இன்புறுவோம். உலகில் எல்லாவற்றையும் துறந்து விடச்சொல்லி இறைவன் சொல்லவில்லை. குடும்பம் - வீடு - வாசல் - தர்மம் - ஆட்சி அதிகாரம் அனைத்திலும் என்னதான் விஞ்ஞானங்கள் வந்தாலும் மெய்ஞானத்தால் இஸ்லாம் கூறும் வழிமுறைகளை அறிந்துணர்ந்து நடப்போமானல் எந்த விபரீதங்களையும் இறைவன் அருளால் எதிர்கொள்ள முடியும்.]

Read more...
 
சேலத்தில், தமிழ் மாநில இமாம்கள் பேரவை சார்பாக மாநாடு Print E-mail
Monday, 08 March 2010 15:33

சேலம் : தமிழக இமாம்களை சேலத்தில் சங்கமிக்க வைக்கும் முயற்சியாக மாபெரும் மீலாது மாநாட்டை தமிழ் மாநில இமாம்கள் பேரவை நடத்துகிறது.

சேலம் நேரு கலையரங்கில் மார்ச் 21 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இம்மாநாடு நடைபெறும்.

காலை நிகழ்ச்சியாக உலமாக்களுக்கான ஆய்வரங்கம்,

பிற்பகலில் இளைஞர்களுக்கான கருத்தரங்கம்,

மாலையில் சமுதாயத்திற்கான சொல்லரங்கம் ஆகியவை நடைபெறுகின்றன.

வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் முன்னாள் முதல்வர் மவ்லானா பி.எஸ்.பி. ஜெய்னுல் ஆபிதீன்,

மேலப்பாளையம் மவ்லானா காஜா முஹ்யினுத்தீன் ஹஸரத்,

அய்யம்பேட்டை பி.எம். ஜியாவுதீன் ஹஸரத் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
Read more...
 
பால் குடிப்பது நல்லதா கெட்டதா? Print E-mail
Sunday, 07 March 2010 14:09

 

பால் உடலுக்கு ஆரோக்கியமானது என்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வந்தாலும் சமீபகாலமாக பால் அதிக கொழுப்பு உடைய பொருள் அதை விலக்க வேண்டும் எனும் கருத்தும் நிலவி வந்தது.

வாழ்விலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய மூன்று வெள்ளையர்கள் பால், சர்க்கரை, உப்பு என்றெல்லாம் கட்டுரைகள் வெளியாகியிருந்தன.

ஆனால் தற்போது பாலின் பயன்களைக் குறித்து வெளியாகியுள்ள சில ஆராய்ச்சிகள் மீண்டும் பாலின் தேவையை நிலைநிறுத்தியுள்ளன.

தினமும் சுமார் அரை லிட்டர் அளவுக்கு பால் குடிக்கும் ஆண்களுக்கு சருக்கரை நோய், இதயநோய் போன்றவை வரும் வாய்ப்பு மிகப் பெருமளவு குறைவதாக U.K.ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

சுமார் மூவாயிரம் பேரை வைத்து இருபது ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட நீளமான ஆய்வின் பயனாக இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Read more...
 
இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் (2) Print E-mail
Sunday, 07 March 2010 09:19

 

டாக்டர் ஷேக் சையது M.D

மனிதன் மண்ணால் படைக்கப்பட்டானா?முதல் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பது பற்றி அறிந்து கொள்வது, ''கரு''வில் குழந்தையின் வளர்ச்சியின் நிலைகள் பற்றி தெளிவாக புரிந்து கொள்வதற்கு துணையாக இருக்கும் என்பதனால் அது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது, அறிவியல் உலகம் என்ன முடிவு எடுத்திருக்கிறது என்று இந்த தொடரில் பார்ப்போம்.முதல் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதில் மதவாதிகளுக்கும், (யூதர்கள், கிருஸ்தவர்கள்) ''இயற்கையே கடவுள்'' என நம்பிக்கை கொண்டுள்ள நாத்திகவாதிகளுக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.

''பாத்திரங்கள் எவ்வாறு மண்ணிலிருந்து செய்யப்படுகிறதோ, அது போல் மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டது'' என்று மதவாதிகள் நம்பி வருகிறார்கள்.

Read more...
 
எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!! Print E-mail
Saturday, 16 August 2008 19:49

சாப்பிட்டவுடன் 'டூ பாத்ரூம்' போனால் 'ஆண்மைக்குறைவு' ஏற்படும். அதுவும் இரவு நேர சாப்பாடு முடிந்த உடனேயே 'டூ பாத்ரூம்' போவது, வேண்டவே வேண்டாம்!

அதிலும் புது மாப்பிள்ளைகள் இதில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சில ஆண்களின் முதல் இரவு அனுபவம் இதன் காரணமாகக்கூட தோல்வியில் முடிய வாய்ப்புண்டு.

அதனால் தனக்கு உடல் வலு இல்லையோ என்று குழம்பிப்போகக்கூடும். ஆகவே இதில் அலட்சியமாக இருந்து விட்டு கை சேதப்பட வேண்டாம்.

Read more...
 
இஸ்லாத்தில் பெண்களின் பங்கு Print E-mail
Sunday, 07 March 2010 13:57

ஆபிதா பானு

بِسْمِ اللهِ الرَّحْمن الرَّحِيمِ

وَأَعِدُّواْ لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ (صدق الله العظيم

''உங்களால் இயன்ற வரை பலத்தையும் திறமையையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள் (8:60)

புகழ்யாவும் வல்ல நாயன் அல்லாஹ்வுக்கே உரியது.சாந்தியும், சமாதானமும் இறைதூதர் மீதும் அவர்களின் குடும்பத்தினர், நல்லறத்தோழர்கள்,உலகமுஸ்லிம்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

அறிவுக்கேற்ற மார்க்கமாம் நம் உயிரினும் மேலான இஸ்லாம் இன்று உலகெல்லாம் வளர்ந்து ஓங்கி நிற்பதற்கு பெண்களின் பங்கும் மகத்தானது என்பதை எவரும் மறுக்க முடியாது.

அரவணைப்பும், பொருளார உதவியும்: ஹிரா மலைக்குகையிலிருந்து வல்லான் இறைவனிடமிருந்து இறைச் செய்தியைப் பெற்று நடுங்கிய வண்ணம் ''ஸம்மிலூனீ'' ''ஸம்மிலூனீ''' زملوني زملوني  என்னைப் போர்த்துங்கள் என்னைப் பேர்ர்த்துங்கள் எனவேண்டி நின்ற நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு,

'
'பயப்படாதீர்! தைரியத்துடன் இருங்கள்!உங்களுக்கு எதுவும் நேர்ந்துவிடாது. .உங்களைப் படைத்த நாயன் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டான்! நீங்களோ உண்மையாளர். உறவினரை ஆதரிப்பவர்! இன்னா செய்தாருக்கும் இனியவை செய்பவர். வாய்மையும் ஈகையும் மிக்கவர்! அப்படிப்பட்ட உங்களுக்கு அல்லாஹ் ஒரு தீமையும் செய்யமாட்டான். உங்களை ஒரு மாபெரும் காரியத்தை சாதிப்பதற்காகவே அந்த நாயன் தேர்ந்தெடுத் துள்ளான்.'' என்று ஆறுதல் கூறித் தேற்றியவர் ஒரு பெண்மணி!

Read more...
 
வரி (Tax) கட்டினால் ஜகாத் கொடுக்கத் தேவையில்லையா? Print E-mail
Tuesday, 12 May 2009 21:47

நம்முடைய முஸ்லிம் சகோதர, சகோதரிகளில் சிலர் ஜக்காத் மற்றும் வரிகள் (Tax) பற்றிய போதிய தெளிவின்மையில் இருப்பதாக அறிய முடிகிறது.

அவர்களின் எண்ணம் என்னவெனில் 'தாங்கள் தங்களின் வருமானத்தில் குறிப்பிடத் தக்க பெரும் தொகையினை தாங்கள் வசிக்கும் நாட்டிற்கு வரியாகச் செலுத்துகிறோம். அந்நாட்டில் உள்ள ஏழைகள் மற்றும் அந்நாட்டின் மேம்பாட்டிற்காக அந்தப் பணம் அரசாங்கம் மூலமாக செலவிடப்படுகின்றது. ஜக்காத் பணமும் அதற்காகத் தானே செலவிடப்படுகின்றது. எனவே அரசாங்கம் மூலமாக நாமும் அதே பணியைச் செய்வதால் ஜக்காத் கொடுக்க வேண்டியதில்லை' என்பது அவர்களின் எண்ணமாகும்.

இவ்வாறு எண்ணம் கொள்வதற்கு ஜக்காத் பற்றிய போதிய அடிப்படை அறிவு இல்லாமையே காரணம் ஆகும். ஜக்காத் என்பது அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வால் முஃமின்களின் மீது விதிக்கப்பட்ட கடமையாகும். வரி (Tax) என்பது ஒரு நாட்டை நிர்வகித்து அதை மேம்படுத்துவதற்காக அந்நாட்டு அரசாங்கத்தால் அதன் மக்களின் மீது விதிக்கப்ட்ட ஒரு கட்டணமாகும்.

Read more...
 
ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பிரமிட்! Print E-mail
Saturday, 06 March 2010 12:24

[ஆயிரக் கணக்கான அபூர்வங்களைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் பிரமிப்பூட்டும் பிரமிடின் மர்மங்களை விளக்க ஆயிரமாயிரம் பக்கங்கள் எழுத வேண்டும். பலன்களும் அதே அளவு இருப்பது தான் பெரிய அதிசயம்!

பிரமிடை ஆராயக்கூடிய எவருக்கும் தோன்றக்கூடிய ஒரு எண்ணம்; நிச்சயமாக இதை மனிதர்கள் வடிவமைத்திருக்க முடியவே முடியாது. பின் யாராக இருக்க முடியும்? ஜின்களாக இருக்குமோ என்று தோன்றுகிறதா?! ''இருக்கலாம்'' என்று சொல்வதைவிட ''ஆம்'' என்று சொல்வதுதான் பொறுத்தம். ]

வியப்பூட்டும் பிரமிட் மர்மங்கள் எண்ணிலடங்காமல் போய் விட்டதாலும் அதன் பயன்கள் மிகப் பெரும் அளவில் இருப்பதாலும் பிரமிடாலஜி என்ற தனிப் பிரமிட் இயலே தோன்றி விட்டது. பிரமிட் என்சைக்ளோபீடியா என்னும் பிரமிட் பேரகராதியும் இப்போது வந்து விட்டது. அப்படி என்ன மர்மங்கள்?

Read more...
 
அசத்தியம் அழிந்தே தீரும் Print E-mail
Sunday, 05 April 2009 08:07

[ (மனிதர் சிந்தித்து ஆராய்ந்து) நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இந்த குர்ஆனை நிச்சயமாக நாம் மிக்க எளிதாக்கியிருக்கிறோம். எனவே (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவோர் எவரும் உண்டா? (அல்குர்ஆன் 54:17)

எனவே குர்ஆன், ஹதீஸ்களை முழுமையாக நன்கு படியுங்கள்.அப்போது தான் சத்தியம் எது? அசத்தியம் எது? என்பதை அறிய முடியும். மேலும் (குர்ஆனை) சத்தியத்தை அறிந்து பின்பற்றினால்தான் மறுமையில் வெற்றி காண முடியும்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இப்போது குர்அன், ஹதீஸ் மொழியாக்கம் தமிழில் எளிதாக கிடைப்பதால் நிச்சயம் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது.]

அல்குர்ஆனும், ஸஹீஹான ஹதீஸ் தொகுப்புகளும் 1400ஆண்டுகளுக்கு மேலாக இறையருளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அல்குர்ஆனின் மொழியாக்கமும், ஸஹீஹான ஹதீஸ்கள் தொகுப்பும் நமது முன்னோர்களுக்கு முழுமையாக கிடைத்தனவா என்றால் இல்லை. மாறாக இஸ்லாமிய நூல்கள் என்ற பெயரில் பல கட்டுக்கதைகள் நிரம்பிய நூல்களே உலா வந்து கொண்டிருக்கின்றன. அன்றிலிருந்து இன்று வரை அவற்றில் சில:

Read more...
 
மனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே! Print E-mail
Saturday, 06 March 2010 11:05

وَإِذْ قُلْنَا لِلْمَلاَئِكَةِ اسْجُدُواْ لآِدَمَ فَسَجَدُواْ إِلاَّ إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ

وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلاَ مِنْهَا رَغَداً حَيْثُ شِئْتُمَا وَلاَ تَقْرَبَا هَـذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الْظَّالِمِينَ

'ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்த சொர்க்கத்தில் தங்கிக் கொள்வீராக! நீங்கள் விரும்பியவாறு உண்டு மகிழ்வீர்களாக! இந்த மரத்தை மட்டும் நெருங்கி விடாதீர்கள்! அவ்வாறு நெருங்கினால் அநீதியிழைத்தவராவீர்கள்'' என்று நாம் கூறினோம்.''ஆனால் அவ்விருவரையும் ஷைத்தான் அதிலிருந்து தடம் புரளச் செய்தான். அவர்கள் எதிலிருந்தார்களோ அதிலிருந்து அவ்விருவரையும் அவன் அப்புறப்படுத்தினான்.'' (அல்குர்ஆன் 2:35,36)

பெண்கள் ஆண்களுக்கு இன்பம் அளிப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள், அவர்களுக்கென ஆசாபாசங்களோ உரிமைகளோ கிடையாது என்று தான் பெரும்பாலான மதங்கள் கூறுகின்றன. பெண்களுக்கு 'ஆன்மா' இருக்கிறதா என்ற வாதப்பிரதி வாதங்கள் கூட நடந்துள்ளன.

சொத்தில் அவர்களுக்கு உரிமை இல்லை. தங்கள் பெயரில் எந்தச் சொத்துக்களையும் அவர்கள் வைத்துக் கொள்ள முடியாது. திருமணம் நடக்கு முன் தந்தையையும் திருமணத்திற்குப் பின் கணவனையும் சார்ந்தே அவள் இருக்க வேண்டும் என்றெல்லாம் கோட்பாடுகளை உருவாக்கி பெண்களை பகுத்தறிவு இல்லாத பிராணிகளைப் போல் நடத்தி வந்தனர்.
Read more...
 
பின்னடைவால் பிரச்னையா? Print E-mail
Saturday, 06 March 2010 10:54

நீடூர், S.A. மன்சூர் அலீ

இக்கட்டான சூழ்நிலைகளிலும் - தர்மம் செய்யுங்கள். அது உங்களின் விதியை மாற்றிட வல்லது.

இன்று ஒட்டு மொத்த உலகமுமே பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிக்கின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு , சம்பளக் குறைப்பு என்று தடாலடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இதனால் - வேலையை இழந்தவர்களும், சம்பளம் குறைக்கப் பட்டவர்களும் பல்வேறு பொருளாதாரப் பிரச்னைகளுக்கும், மன நலப்பிரச்னைகளுக்கும் ஆளாகிறார்கள்.

சம்பளம் வருகிறதே என்று கடன் வாங்கி சொத்துக்களைச் சேர்த்தவர்கள், கடனை அடைக்க முடியாமல் திணருகிறார்கள். தவணை முறையில் சொத்துக்கள் வாங்கியவர்களுக்கும் இதே நிலை தான்.

வேலை இழந்தவர்கள், வேறு வேலை தேடி அது கிடைக்காமல் போகும் போது அவர்களிடம் தற்கொலை சிந்தனை தலை தூக்குகிறது.

பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிப்பவர்களுக்கு - இதோ இஸ்லாமிய ஆலோசனைகள்!

Read more...
 
இரு இதழ் பூ! Print E-mail
Saturday, 06 March 2010 10:40

 

மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி

பூங்காவனம், பூத்துக் குளுங்கும் பூங்காவனம் யாருக்குச் சொந்தம்?

பூமியிலே முளைத்ததெல்லாம் பூமிக்குச் சொந்தமா?

பூவையர் பறிதத்தெல்லாம் கூடைக்குள் போகுமா?

புயலடித்து விட்டால் பூக்களெல்லாம் பூமிக்குள் புதைந்து விடும்!

ஆடவர் புயலாய் ஆடிவிட்டால் பறித்த பூவாய்

பூவையர் கசங்குவர். கண் கசக்குவர்!

''பூக்களை வெறுக்காதீர்'' எங்கோ நான் படித்த வரிகள்!
Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 48
Webnidur.info

Links2

Best Article

Best Articles 2

Best Articles 3

Best Articles 4

Audio

Video